search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயனாளிகள்"

    • ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரும், வருவாய் தீர்வாய அலுவலரமான விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி னார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கடலாடி வட்டத்தில் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சியில் 43 கிரா மங்களை சேர்ந்த வர்களிடம் இருந்து 301 மனுக்கள் பெறப்பட் டுள்ளது.

    இதில் 52 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிடும் வகையில் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, புலப்படம் நான்குமால், பட்டா மாறுதல் உட்பிரிவு, இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    197 மனுக்கள் வருவாய்த் துறையின் மேல் நடவடிக்கை யில் உள்ளது. 52 மனுக்கள் பிற துறை தொடர்பான கோரிக்கைகள் என்பதால் அந்தந்த துறைகளுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக பொதுமக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு வழங்கப்படும்.

    பொதுவாக ஆண்டுதோறும் நடைபெறும் ஜமாபந்தி அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் நடைபெறுவதால், அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் அலுவலக மேலாளர் ஜெயமணி, கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.
    • பயனாளிகள் 500 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாயாவனம் பகுதியில் ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழல் குடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய ஆணையர் இளங்கோவன், திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிக்குமார், புஷ்பவள்ளி ராஜா, நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான நிவேதா.

    முருகன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கமலஜோதி தேவேந்திரன் பயனாளிகள் 500 பேருக்கு சேலைகளை வழங்கினார்.

    இதேபோல் மேலையூர் பகுதியில் புதிதாக ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடையையும் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் ரவி, தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள முடியும்.
    • அரசு வழங்கிய கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    2023-24-ம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மானியக்கோரி க்கையின்போது, தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும் திறனும்கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கிட திட்டத்தினை செயல்படுத்திட தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச்செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு) மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு, குஞ்சு பொறிப்பான் மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,50,625 வழங்கப்படவுள்ளது.

    ஒவ்வொரு பயனாளிக்கும் 250 நாட்டுக்கோழிகள் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள் இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக்கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால் பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள இயலும்.

    இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்புத்திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேலும், பயனாளி கோழிப்பண்ணையை தொடர்ந்து, 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்திரவாதக் கடிதம் அளிக்க வேண்டும்.

    இத்திட்டத்தின்மூலம் நாட்டுக்கோழிகளை 72 வாரங்கள் வளர்த்து 140 முட்டைகள் வீதம் வருடத்திற்கு 17500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும். இதில் சுமார் 2000 முட்டைகளை குஞ்சுப்பொறிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள முட்டைகளையும் மற்றும் வளர்ந்த சேவல்களையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலமாக ஒரு வருடத்திற்கு ரூ.2.00 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.

    எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 25.6.23-க்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
    • எங்களுடைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் துறை சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றுகளை 100 பயனாளிகளுக்கு கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கப்படுகின்றது. இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும். நரிக்குறவர் இன மக்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து பழங்குடியினர் இன ஜாதி சான்று பெற்ற நரிக்குறவர் சமுதாய பெண் ரம்பா (வயது 26) கூறியதாவது:-

    நரிக்குறவர் சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இது எங்களுடைய பல நாள் கனவு. முதல்-அமைச்சர் எங்கள் நரிக்குறவர் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இன்று மாவட்ட கலெக்டரால் இந்த பழங்குடி யினர் ஜாதி சான்றிதழ் எங்களுக்கு கிடைக்க பெற்றிருக்கிறது. எங்களு டைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது. இதற்கு முதல்- அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் நன்றி.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், பல்லவராய ன்பேட்டை ஊராட்சி தலைவர் சேட்டு, நரிக்குறவர் இன மக்கள் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 22 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
    • இலவச தையல் எந்திரங்க ளையும் கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊன முற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 342 மனுக்கள் பெறப்பட்டன.

    தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தினார். இதில் வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்புவனம் வட்டத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான மாதாந்திர உதவித்தொகை பெறு வதற்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்க ளையும் கலெக்டர் வழங்கி னார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காதொலிக்கருவி, மடக்கு சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்த 2 மாற்றுத் திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 820 மதிப்பிலான காதொலிக்கருவியும், ரூ.7 ஆயிரத்து 900 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் என மொத்தம் 22 பயனாளி களுக்கு ரூ.70 ஆயிரத்து 720 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் மாடி தோட்டம் அமைக்க, பயனாளிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாடி தோட்டம் மூலம் காய்கறி உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஒரு பயனாளிக்கு 450 ரூபாய் மதிப்பில் காய்கறி வளர்ப்பு பைகள், 2 கிலோ கோகோ பீட், 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பெண்ணெய், தொழில் நுட்ப கையேடு, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் அந்தந்தவட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    திட்ட விபரங்களுக்கு கீழ்க்கண்டவட்டார தோட்டக்கலை உதவிஇயக்கு நர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9943422198. ஓரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் -9488945801.

    பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்- 9597059469.

    கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் உதவி இயக்குநர்- -9842569664.

    பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் -9445257303.

    பேராவூரணி மற்றும் சேதுபா வாசத்திரம் தோட்ட க்கலை உதவி இயக்குநர் 8903431728 ஆகிய செல்போன் எண்களில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.

    இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.

    எம்.பி. இராமலிங்கம், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 382 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் கண்மணி, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

    • 22 மாதத்தில் 4.65 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
    • இதுவரை 1,440 ஆரம்ப பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் விழா நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    மாதாந்திர உதவித்தொகை

    கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ஐ வழங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    500 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை இன்று வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து முந்தைய அரசு கிடப்பில் போடப்பட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்துள்ளது. அடிக்கல் நாட்டிய பணி களை உடனடியாக தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    22 மாதத்தில்

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 22 மாதத்தில் 4.65 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது சாதி சான்று மற்றும் வருமான சான்று உள்ளிட்டவை கேட்டு 4.38 லட்சம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். தற்போது அவைகள் அனைத்தும் கொடுக்கப் பட்டு 785 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது.

    வருவாய் துறை அதிகாரிகள் இரவு, பகல் பார்க்காமல் உழைத்ததின் காரணமாகவே அரசுக்கு பாராட்டுகள் கிடைத்து உள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு

    அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு இது வரை 1440 ஆரம்ப பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளி களிலும் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    செப்டம்பர் 15-ந்தேதி தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை) சுகன்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமார தாஸ் மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர். 

    • தேவகோட்டை அருகே 343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு ரூ.41.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படை யில் திருவேகம்பத்தூர் கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 287 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    அதில், தகுதியுடைய 218 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்க ளுக்கு நலத்திட்ட உதவி களும், அதன் பயன்களும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இந்த முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 34 பயனாளிகளுக்கு ரூ7.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில்எபொதுமக்களிடம் இருந்து 377 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதன்படி தேவகோட்டை வட்டத்தை சேர்ந்த ராசு என்பவர் பாம்பு கடித்து இறந்ததையொட்டி அவரது குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத் திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான் இடுபொருட் களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் ரூ.7 ஆயிரத்து 200 மானி யத்துடன் கூடிய மா பழக்கன்று மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.மானாமதுரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தின் சார்பில் 9 உறுப்பினர்களுக்கு ரூ.6 லட்சத்திற்கான கறவை மாட்டு வளர்ப்பிற்கு கடன் திட்டத்திற்கான ஆணை களையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், திருக்கோஷ்டியூர் மற்றும் இடைக்காட்டூர் நியாயவிலை கடைகளில் விற்பனை யாளர்களாக தேர்வு பெற்ற முதல் பரிசு ரூ.4ஆயிரத்தை யும், 2-ம் பரிசு ரூ.3ஆயிரத் தையும் கலெக்டர் வழங்கி னார்.

    சிவகங்கை மற்றும் சக்கந்தி நியாயவிலை கடை களில் எடையாளர்களாக தேர்வுபெற்ற முதல் பரிசு ரூ.3ஆயிரம், 2-ம் பரிசு தொகை ரூ.2ஆயிரத்திற்கான காசோலைகள் என மொத்தம் 34 பயனாளி களுக்கு ரூ.7லட்சத்து 20 ஆயிரத்து 700 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் 121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கவரவிப்பது கடமையாகும் என்றார்.

    ராமநாதபுரம்

    விடுதலைப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 263-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நவாஸ்கனி எம்.பி. பேசுகையில், இந்திய தேசத்தின் விடுதலைக்காக மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி செய்த தியாகங்களை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அவரது பிறந்த நாளான மார்ச் 30-ந் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட இத்தகைய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கவரவிப்பது கடமையாகும் என்றார்.

    தொடர்ந்து வருவாய்த்துறையின் மூலம் 1 பயனாளிக்கு பணி நியமன ஆணையும், 16 பேருக்கு ரூ.2.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.1.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.51 ஆயிரத்து 675 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    வேளாண்மைத் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும் வழங்கப்பட்டது.

    தோட்டக்கலைத் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு பொருட்களும், தொழிலாளர் நலத்துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு நல வாரியம் உறுப்பினர் அட்டையும் என மொத்தம் 121 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்து 154 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, நகர்மன்ற தலைவர் கார்மேகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 67 ஆயிரத்து 141 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
    • பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 97 பணிகளில் 81 பணிகள் நிறைவுற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வேளாண்மை இயக்குனர் பிரியதர்ஷினி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2002-23-ம் ஆண்டுகளுக்கு இடுபொருட்கள் தொகை ரூ.1 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டதன் மூலம் 67 ஆயிரத்து 141 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சிகள் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.94 கோடியே 96 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் 1,372 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 445 பணிகள் நிறைவடைந்துள்ளது.

    மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி நேரடி கடனாக 106 குழுக்களைச் சேர்ந்த 1,696 உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடியே 86 லட்சம் மற்றும் 18 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு ரூ.7 கோடியே 26 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் தேர்வு செய்யப்பட்ட 42 பணிகளில் 24 பணிகள் நிறைவுற்றுள்ளது. பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 97 பணிகளில் 81 பணிகள் நிறைவுற்றுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் இயக்கம் திட்டத்தின் கீழ் 48 ஆயிரத்து 491 மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 7210 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

    மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 30 லட்சத்து 15 ஆயிரத்து 147 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மகப்பேறு மரணம், சிசு மரணம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 47 ஆயிரத்து 61 மனுக்களில் 44 ஆயிரத்து 755 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை அசோக்குமார், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மேயர்கள் சண்.ராமநாதன்(தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணைத்தலைவர் முத்து, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×