search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

    121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • ராமநாதபுரத்தில் 121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கவரவிப்பது கடமையாகும் என்றார்.

    ராமநாதபுரம்

    விடுதலைப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 263-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நவாஸ்கனி எம்.பி. பேசுகையில், இந்திய தேசத்தின் விடுதலைக்காக மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி செய்த தியாகங்களை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அவரது பிறந்த நாளான மார்ச் 30-ந் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட இத்தகைய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கவரவிப்பது கடமையாகும் என்றார்.

    தொடர்ந்து வருவாய்த்துறையின் மூலம் 1 பயனாளிக்கு பணி நியமன ஆணையும், 16 பேருக்கு ரூ.2.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.1.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.51 ஆயிரத்து 675 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    வேளாண்மைத் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும் வழங்கப்பட்டது.

    தோட்டக்கலைத் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு பொருட்களும், தொழிலாளர் நலத்துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு நல வாரியம் உறுப்பினர் அட்டையும் என மொத்தம் 121 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்து 154 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, நகர்மன்ற தலைவர் கார்மேகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×