search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் வழங்கினார்.
    X

    ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

    ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் வழங்கினார்.

    • ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரும், வருவாய் தீர்வாய அலுவலரமான விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி னார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கடலாடி வட்டத்தில் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சியில் 43 கிரா மங்களை சேர்ந்த வர்களிடம் இருந்து 301 மனுக்கள் பெறப்பட் டுள்ளது.

    இதில் 52 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிடும் வகையில் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, புலப்படம் நான்குமால், பட்டா மாறுதல் உட்பிரிவு, இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    197 மனுக்கள் வருவாய்த் துறையின் மேல் நடவடிக்கை யில் உள்ளது. 52 மனுக்கள் பிற துறை தொடர்பான கோரிக்கைகள் என்பதால் அந்தந்த துறைகளுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக பொதுமக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு வழங்கப்படும்.

    பொதுவாக ஆண்டுதோறும் நடைபெறும் ஜமாபந்தி அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் நடைபெறுவதால், அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்களின் தேவைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் அலுவலக மேலாளர் ஜெயமணி, கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×