search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவிகள்"

    • தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.
    • கலைஞர் ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகர தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஊட்டி பிங்கர்போஸ்ட் திரேசா பள்ளி வளாகத்தில் நடந்தது. நகரசெயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக், துணை செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நீலகிரி எம்.பி. ராசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ப்ரீசர் பாக்ஸ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழக மக்களுக்கு கலைஞர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவரது ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

    மேலும் மருத்துவ காப்பீடு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றினார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். அவரது வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எனவே நாம் அவருக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அணிகளின் அமைப்பாளர்கள் எல்க்ஹில் ரவி, தீபக், ஊட்டி நகர துணை செயலாளர் கார்ட்ன் கிருஷ்ணர், அவைத்தலைவர் ஜெயகோபி, கவுன்சிலர்கள் தம்பிஇஸ்மாயில், கீதா, வனிதா, செல்வராஜ், மேரிபுளோரினா, அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து வழங்கினார்
    • வேட்டி மற்றும் சேலை இலவசமாக வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகாராஜபுரம் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் 300 பேருக்கு முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் தீபாவளி பண்டிகையையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வேட்டி மற்றும் சேலை இலவசமாக வழங்கப்பட்டது. நலத் திட்ட உதவிகளை மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து வழங்கினார். வார்டு உறுப்பினர்கள் சுயம்பு, அனீஸ்வரி, ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குறுகிய நேரத்தில் விடுக்க நடவடிக்கை
    • நீலகிரி எம்.பி ராசா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கலந்துகொண்டார் அப்போது நடுஹட்டி பகுதியில் பஸ்வசதி, பள்ளியில் ஆங்கில வழி கல்வி, நடமாடும் நியாய விலைக்கடை ஆகியவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் குறுகிய காலத்தில் நிறைவேற்றி தந்து உள்ளார். இதற்கான நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நீலகிரி எம்.பி ராசா கலந்துகொண்டு ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பொதுகுழு உறுப்பினர் கே.எம்.ராஜிசெல்வம், காளிதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா 3440 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடி நலத்திட்ட உதவி

    அரியலூர்,  

    அரியலூர்,மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு கலையரங்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்ட திட்ட அலுவலர், இலக்குவன் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்எல்ஏக்கள் அரியலூர்சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி கலை வாணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித்தா, ஆர்.டி.ஓ. அரியலூர் இராம கிருஷ்ணன், உடையார் பாளையம் பரிமளம் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு 14 துறை சார்பில் 3440 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்,

    நிகழ்ச்சி முடிவில் கூட்டுறவு சரக இணை பதிவாளர் தீபாசங்கரி நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா
    • எம்.ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    ஊட்டி,

    ஊட்டி ஏ.டி.சி சதுக்கத்தில் அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடந்தது.

    அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தேனாடுலட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க தலைமை நிர்வாகி எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்துக்கொண்டு பேசினார். தொடர்ந்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் அக்கிம்பாபு, எப்பநாடு கண்ணன் மீனவர் அணி மாவட்ட. செயலாளர் விசாந்த்,ஒன்றிய செயலாளர் கடநாடு ப.குமார், பேரூராட்சி செயலாளர்கள் கண்ணபிரான், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கோத்தகிரி வடிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள் லயோலா குமார், அன்புச்செல்வன், சகுந்தலா, தனலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக எம்.ஜிஆர் படத்திற்கு அ.தி.மு.க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் 1033 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம்

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்கள் குறித்தும், என்னென்ன காரணங்களால் அந்த விபத்துகள் நடைபெற்றது. மீண்டும் அந்த இடங்களில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் விபத்து ஏற்படும் நேரங்களில் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அவசர ஊர்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்து போதிய உதவிகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, வாகனங்கள் பழுதாகி நின்றாலோ, எரிபொருள் இல்லாமல் நின்றுவிட்டாலோ, வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அவசர உதவி ஏற்பட்டாலும் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைக்கலாம்.

    24 மணிநேரமும் அவசரகால ஊர்தி தயார் நிலையில் இருக்கும் . 1033 என்ற எண் குறித்து வாகன ஓட்டிகளுக்கோ, பொதுமக்களுக்கோ போதிய விழிப்புணர்வு இல்லை. ஆகையால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரத்தில் உதவ இப்படி ஒரு வசதி உள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசுங்கள். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடைகள் தெரியாத காரணத்தால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்ணை படம்பிடித்து காவல்துறைக்கு அனுப்பும் நவீன தொழில்நுட்பத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் அமல்படுத்த தேவையான திட்ட அறிக்கையினை தயார் செய்து வழங்கிட வேண்டும்.

    அவ்வாறு அனுப்பப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு டிரைவரன் உரிமத்தை ரத்துசெய்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மஞ்சுளா, ஆர்.டி.ஓ. (பொ) சத்திய பாலகங்காதரன், டிஎஸ்பி பழனிசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) பிரபாகரன், வாகன ஆய்வாளர் ராஜாமணி மற்றும் தாசில்தார்கள், காவல்துறையினர், போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • குளவாய்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி நலத்திட்ட உதவிகள்
    • கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவ ட்டம் எஸ்.குளவாய்ப ட்டி யில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வே று அரசு நலத்திட்ட உதவி களை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கி னார்.

    பின்னர் அவர் கூறும் போது,

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாத ந்தோறும் ஒரு குக்கி ராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியு ள்ளார்கள்.

    அதன்படி தமிழக அரசி ன் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்ட ங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் அனை வரும் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.

    அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களின்கீழ் பயன்பெறு வதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பய ன்பெறலாம்.

    இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்க ளால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக்ஷ ஆட்சியரகத்தில் கண்கா ணிப்பு அலுவலர் நியமிக்க ப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகி றது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின்

    திட்டங்களை அறிந்து கொள்வ துடன், அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டா ட்சியர் (பொ) க.ஸ்ரீதர், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, திருவ ரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியர் விஸ்வநாதன்இ உள்பட பலர் கலந்து ெ காண்டனர்.

    • குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
    • 423 மனுக்கள் பெறப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 423 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பீட்டில் தையல் எந்திரமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,35,400 மதிப்பீட்டில் திறன்பேசியும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36,200 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டியும், 12 பயனாளிகளுக்கு புதிரை வண்ணார் சாதிச்சான்றிதழ் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இக்கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா , தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில், மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    திண்டுக்கல் லட்சுமிசுந்தரம் காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. இதில் மூத்த மகன் ஸ்ரீதர் (வயது 34). இவர் புதுச்சேரி-கடலூர் சாலையில் பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக மருத்துவத்திற்கான துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இதையொட்டி அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பணியாளர் குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். ஸ்ரீதர் தனக்கு விடுமுறை கிடைக்கும்போது புதுச்சேரியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று, தனது மனைவி மற்றும் பெற்றோரை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்த பின்னர், இரவில் திண்டுக்கல் செல்வதற்காக ஸ்ரீதர் தனது காரில் புறப்பட்டார். இரவு 10 மணியளவில் அவரது கார் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்கு ரோடு சந்திப்பில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக சென்று, மாவட்ட அரசு கண் மருத்துவமனை அருகே வந்தது. அப்போது ஸ்ரீதரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    மேலும் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி ஸ்ரீதரின் குடும்பத்திற்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி
    • வீடியோ கால் செய்து தேவையான ஆர்டர் பெறுவதால் வருமானம் அதிகரிப்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறையின் மூலம் கடந்த 07.05.2021 முதல் 24.08.2023 வரை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,676 பயனாளிகளுக்கு ரூ9.38 கோடி மதிப்பிலும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 990 பயனாளிகளுக்கு ரூ.5.54 கோடி மதிப்பிலும், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 45 பயனாளிகளுக்கு ரூ.25.20 லட்சம் மதிப்பு உள்பட மொத்தம் 3,225 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனாளி பயனாளி ராஜேஸ்பகதூர் கூறிய தாவது:-

    நான் நீடில் இண்டர்டீரிஸ்சில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 6 மாதத்திற்கு முன் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். கடந்த மாதம் நடைபெற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட எனக்கு கலெக்டரால், ரூ.99,999 மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

    இதனால் நான் தினந்தோ றும் பணியிடத்திற்கும் வீட்டிற்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல மிகவும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக இருக்கிறது. இதற்கு முதல்- அமைச்சருக்கு நன்றி.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    திறன்பேசி பெற்று பயனடைந்த மாற்று த்திறனாளி பயனாளி ராணி கூறும்போது, நான் ஊட்ட வண்டிச்சோலை பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த ஆண்டுகளாக திறன்பேசி வேண்டி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.

    என்னை நேர்காணலுக்கு அழைத்து அதில் என்னை தேர்வு செய்து, மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கலெக் டரால் ரூ.13,950 மதிப்பில் திறன்பேசி வழங்கப்பட்டது. இதன் மூலம் வீடியோ கால் செய்து, தையல் தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை பெற்று தையல் தொழில் செய்து வருவதால், எனது வருமானம் அதிகரித்துள்ளது.

    மேலும், இந்த வருமானம் எனது குடும்பத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. இது போன்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    • அரியலூர் மாவட்டத்தில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அளிக்கும் மனுக்களின் மீது அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதே போன்று கல்வி, மருத்துவ உதவிக் கேட்டு வரும் மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அளிக்கும் மனுக்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். துறை சார்ந்த கோரிக்கைகள் தமிழக முதலவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    முதல்வர் தெரிவித்ததை போன்று ஏழை, எளிய மக்கள் அளிக்கும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக உணர்ந்து பார்ப்பதுடன் அவர்களது மனுக்களை நிராகரிக்காத வகையில் மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.

    முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் உதயநிதி, அவ்வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள சிவசங்கர், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, அரசு சிறப்பு திட்ட செயலாகத்துறை செயலர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கபபட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    அரியலூர் 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 282 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் அரியலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு வரப்பெற்ற இணைமானிய தொகையிலிருந்து 6 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வாங்கிடும் வகையில் தலா ரூ.10,000 வீதம் என மொத்தம் ரூ.60,000 மதிப்பில் காசோலைகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×