என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூடலூரில் ரூ.2.06 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்
- மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங் கப்பட்டு உள்ளன.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரியநா யக்கன்பாளையம் அருகே கூடலூரில் மாவட்ட வரு வாய் அலுவலகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வடக்கு வருவாய் கோட்டாட்டாட்சி யர் கோவிந்தன், கூடலூர் நகராட்சி தலைவர் அறி வரசு, பேரூராட்சித்தலைவர் விஸ்வபிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது சமூகப்பா துகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 60 ஆயிரமும், வருவாய் துறை மூலம் 79 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 971 ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 57 பேருக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் இணையவழி பட்டாவும், மகளிர் சுய உதவிக்குழுவில் 2 பேருளுக்கு 28 லட்சம் மதிப்பிலான மானியத் தொகை, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 4 பேருக்கு 7 ஆயிரத்து 805 ரூபாய் மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் தாசில்தார் தங்கராஜ், கமிஷனர் பால்ராஜ், சிறப்பு தாசில்தார்கள் யமுனா, சரண்யா, நகராட்சி துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சபி அஹமது, நந்தினி, சபின் அஹமதுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்