search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சான்று"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் வட்டார குழு அமைத்து கட்டணமின்றி அங்கக சான்று பெறலாம்.
    • இந்த தகவலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் தனியாக அல்லது குழுக்கள் அமைத்து உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர்.

    விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வளப்பொருள் சேகரிப்பு செய்வோரும் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். பதிவு கட்டணம், ஆய்வு சார்ந்த கட்டணம், பயண நேரம் கட்டணம் மற்றும் சான்று கட்டணமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 700, பிற விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 200, விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.7 ஆயிரத்து 200 மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரத்து 400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தற்பொழுது ஒரே வட்டாரத்தில், ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக சேர்ந்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் அங்ககச் சான்று பெறலாம்.

    இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்யலாம். இதற்கு 10 முதல் 50 விவசாயிகள் இணைந்து குழு அமைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

    இதில் பதிவு செய்யும் விவசாயிகள் தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின்கீழ் அங்கக சான்று பெறு வதற்காக வழங்கப்படும் அதே ஆவணங்களை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். 3-ம் நபர் ஆய்வு இல்லை. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் கட்ட ணமின்றியும், எளிமை யாகவும் அங்ககச் சான்று பெற முடியும்.

    விவசாயிகள் பங்களிப்பு உறுதி அளிப்புத்திட்டத்தில் கட்டணம் இல்லாமல் அல்லது மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படி கட்டணம் செலுத்தி பதிவு செய்து அங்கக சான்று பெற்று பயன்பெறலாம்.

    மேலும் தகவல்களுக்கு உழவர் மையம், ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகம் (தலைமை அரசு மருத்துவமனை எதிரில்) ராமநாதபுரம் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
    • எங்களுடைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் துறை சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றுகளை 100 பயனாளிகளுக்கு கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கப்படுகின்றது. இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும். நரிக்குறவர் இன மக்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து பழங்குடியினர் இன ஜாதி சான்று பெற்ற நரிக்குறவர் சமுதாய பெண் ரம்பா (வயது 26) கூறியதாவது:-

    நரிக்குறவர் சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இது எங்களுடைய பல நாள் கனவு. முதல்-அமைச்சர் எங்கள் நரிக்குறவர் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இன்று மாவட்ட கலெக்டரால் இந்த பழங்குடி யினர் ஜாதி சான்றிதழ் எங்களுக்கு கிடைக்க பெற்றிருக்கிறது. எங்களு டைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது. இதற்கு முதல்- அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் நன்றி.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், பல்லவராய ன்பேட்டை ஊராட்சி தலைவர் சேட்டு, நரிக்குறவர் இன மக்கள் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.
    • திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வுக்கு உட்பட்ட பகுதிகளில் கணவனை இழந்த இளம்பெண்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெறவும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறவும் ஆதரவற்ற விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.

    இந்த நிலையில் இருப்பி டச் சான்று, வாரிசு சான்று, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வற்றிக்கு விண்ணப்பித்தால் ஒரு சில நாட்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் ஆதர வற்ற விதவைகள் சான்றுக்கு விண்ணப்பித்தால் வருட கணக்கில் காலதாமதமாகி வருவதால் பயனாளிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இதேபோல், ஆதரவற்ற விதவைச் சான்றுக்கு சப்-கலெக்டர் ரேங்கில் உள்ள வர்கள் மட்டுமே நேரடி யாக சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து வழங்குவார்கள்.

    ப.வேலூர் தாலுகா உட்பட்ட ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் அனைத்தும் ப.வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு செய்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    ஆனால் அங்கு செல்லும் ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது.

    இதனால் சான்றுபெற விண்ணப்பித்த வர்கள் கடும் அதிருப்தியில் உள்ள னர். தற்போது புதிய தாக பதவியேற்ற திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் இணையதளம் வழியாக ஆயுள்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெ.காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம் முதலான 18 அமைப்புச்சாரர் தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் விருதநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுட்சான்று சமர்ப்பிக்கின்றனர். தற்போது ஓய்வூதிய தாரர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் வருகிற 9-ந் தேதி முதல் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களின் இணையதளத்தில் (tnuwwb.tn.gov.in) ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா நலவாரி யங்களின் கீழ் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை (PPO), வங்கி கணக்கு எண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய விவரங்களுடன் இணையதளத்தில் (tnuwwb.tn.gov.in) ஆயுள்சான்றினை சமர்ப்பிக்கலாம்.

    ஓய்வூதிய ஆணை இல்லாதவர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகபரியில் ஓய்வூதிய தாரரின் ஓய்வூதிய விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணை (Pension Order)-யை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ஓய்வூதிய விண்ணப்ப எண் தெரியாத ஓய்வூதிய தாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய இணையதளத்தின் முகப்பில் இருக்கும் "விண்ணப்பத்தின் எண்ணை அறிய" என்ற வசதியை பயன்படுத்தி பதிவு செய்த தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தும் அல்லது Login-ல் பயனாளியின் பெயர் (User namc) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து Application History-ல் ஓய்வூதிய விண்ணப்ப எண்ணை அறிந்து கொள்ளலாம்.

    ஓய்வூதியதாரர்கள் இணையதளம் வழியாக மட்டுமே ஆயுள்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட ஓய்வூதிய தாரர்களிடம் இருந்து ஆயுள்சான்று இந்த அலுவலகத்தில் நேரில் பெற இயலாது என்ற விவரம் தெரிவிக்கப் படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
    • பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரம் சிமிலி கிராமத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மாநில அளவிலான பருத்தி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தான பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார்.

    அதனைத் தொடர்ந்து பயிற்சியின் பருத்தி சாகுபடி தொழில்நுட்ப கையேட்டை வெளியீட்டும் பருத்தி இடுபொருள் கண்காட்சியை துவக்கி வைத்து திருவாருர் மாவட்ட இணை இயக்குனர் லெட்சுமிகாந்தன் பேசுகையில்:-

    பருத்தி நமது மாவட்டத்தில் முதன்மை பணப்பயிராக பயிரிடப்படுகிறது.

    இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தினை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த ரகம் மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை போன்ற தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

    வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்) ஏழுமலை பருத்தி சாகுபடி செய்யக்கூடிய வயல்களில் அதற்கு முன்னதாக மண் மாதிரி சேகரம் மற்றும் நீர் மாதிரி சேகரம் எவ்வாறு செய்தல் வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பயிற்சி அளிக்கையில் பருத்திப்பயிரில் மண் பரிசோதனைக்கு ஏற்ப தலை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும் என்றும், உர அளவு, உரம் இடுதல் மற்றும் உர மேலாண்மை போன்ற தொழில்நுட்ப கருத்துகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) ஹேமா ஹப்சிபா நிர்மலா பேசுகையில்,பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியாக வருகிற 31-ந் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக காப்பீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் .மேலும் ஜெயப்பிரகாஷ் வேளாண்மை உதவி இயக்குனர் (விதை சான்று) பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற தொழில்நுட்ப கருத்துகளை எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் அருள்செல்வி, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்த்தில் ஸ்பிரேயர் பருத்தி நுன்னுட்டம், தார்ப்பாய் போன்ற பருத்திக்குத் தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    இப்பபயிற்சி முகாமில் சிமிலி ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    • கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் ஊராட்சியில்துளசிபுரம் ஊராட்சிஉள்ள கிராம நிர்வாக அலுவலககட்டிடம் கடந்த 2004 கட்டபட்டது.

    தற்போது இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் வாங்க வந்து செல்கின்றனர்.

    மோசமான நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

    எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தரிசு நிலத்தில் சொட்டு நீர் பாசன அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் 80 விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை தாலுகா குருங்குளம் மேற்கு கிராமத்தில் இன்று கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா ஏற்பாட்டின் படி தரிசு நிலத்தில் சொட்டு நீர் பாசன அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கு தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் வி.ஏ.ஓ.க்கள் செல்வராஜ் (குருங்குளம் மேற்கு ), புனிதா ( குருங்குளம் கிழக்கு ), சூர்யா ( திருக்கானூர்பட்டி ) ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உடனுக்கு டன் சான்று வழங்கினர். 80 விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர் சத்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் வெங்கடாஜலபதி, பினோலெக்ஸ் எம்.ஐ. கம்பெனி டார்வின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( விவசாயம்) கோமதிதங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாளை பூதலூர் தாலுகா சானூரப்பட்டி வி.ஏ.ஓ அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 13-ந் தேதி பாலையப்பட்டி வடக்கு வி.ஏ.ஓ. அலுவலகத்திலும், 14-ந் தேதி புதுக்குடி தெற்கு கிராமத்திலும், 15-ந் தேதி தோப்பு விடுதியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    • ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
    • பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.

    திருவாரூர்:

    தமிழக அரசின் அவ்வையார் விருது. பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற டிச 10க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, உலக மகளிர் தின விழா 8.3.2023-ம் அன்று நடைபெறவுள்ளது.

    இவ்விழாவின் போது பெண்களின் முன்னே ற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறுபவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் தொடர்பான இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்விருதுகள் தொடர்பான கூடுதல் விபரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்ப படிவங்கள் ஆகியவை திருவாரூர் மாவட்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் அவர்கள் இணையதளம் வாயிலாக 10.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டு க்கொண்டுள்ளார்.

    • கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
    • பொதுமக்கள் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படுத்த முடியும்.

    கும்பகோணம்:

    மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு அமைச்சர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சண்முகம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- திராவிட இயக்கத்தை சேர்ந்த எங்களுக்கு சுந்தர சோழன், பெரியார் ஆவார்.

    காஞ்சியை ஆண்ட ஆதித்த கரிகாலன், பேரறிஞர் அண்ணா. திருவாரூரில் பிறந்து தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதியை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் ராஜராஜ சோழனாக பார்க்கிறோம்.

    குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ நாச்சியார் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோரிக்கைகளை முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ராஜராஜ சோழன் சதய விழா 5 நாள் நிகழ்ச்சியாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அந்த வகையில் தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்துள்ளார்.

    இது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜராஜ சோழன் நிர்வாக திறமை குறித்து வரலாற்று சுவடுகளை கொண்டு நாம் அறியும்போது அவர் கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை நன்கு அறிய முடிகிறது.

    எந்த பகுதியை அவர் கைப்பற்றினாலும் அந்த பகுதியை அந்த பகுதியில் வாழும் மக்களிடமே ஒப்படைத்து அவர்களையே ஆட்சி செய்ய வைத்து அவர்களிடம் இருந்து முறையாக வரியை பெற்றுக் கொண்ட மாபெரும் அரசனாக ராஜராஜ சோழன் இருந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-

    மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா நிகழ்ச்சியை அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பை செய்தி மக்கள் தொடர்பு துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

    ராஜராஜ சோழன் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டால் அவரது பிறந்தநாள் அன்று மட்டும் அந்த இடம் பயன்படுத்தப்படும்.

    ஆனால் நினைவு அரங்கம் அமைத்தால் இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், பொதுமக்கள் தங்களது இல்ல
    சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் பயன்படுத்த முடியும். ஆய்வு நடத்த வலியுறுத்தப்படும் ராஜராஜ சோழன் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

    ஆனால் அவர் இறந்த பிறகு இந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக சொல்வதற்கான சான்றுகளை, ஆதாரங்களை சேகரிக்க உரிய ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆராய்ச்சி மேற்கொள்வது தமிழ் வளர்ச்சித்துறையின் பொறுப்பில் உள்ளது.

    எனவே அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்த கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். மேலும் இது தொடர்பாக முதல்-அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மண்டலக்குழு தலைவர் அசோக்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார், கும்பகோணம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் உள்ளூர் கணேசன், கருத்தரங்கு நிர்வாகி எஸ் கே ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவையாறு அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் தங்கமுத்து நன்றி கூறினார்.

    • நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 சதவீதம் வேலை வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக ளுக்கான சங்க ஆலோசனை கூட்டம் தாராசுரத்தில் மாநகர துணை செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், மாவட்ட இணை செயலாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் செல்வம், ஐயப்பன், தாராசுரம் பேரூராட்சி செயலாளர் தி.மு.க. சாகுல் ஹமீது, ஒன்றிய பொறுப்பாளர் காமாட்சி, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில்:-

    மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ச்சியாக தலையீடு செய்து அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளோம்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்தி ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளி டமிருந்து பல்வேறு உபகரண ங்களை, சலுகைகளை, உரிமைகளை தொடர்ந்து போராடி பெற்று தருகிறோம் என்றார்.

    கூட்டத்தில், நாடு முழுவதும் மாற்றுத்தி றனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும், மாற்றுத்தி றனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ. 3,000-மும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,000-மும் வழங்க வேண்டும், அரசு துறையில் 4 சதவீதமும், தனியார் துறையில் 5 சதவீதமும் வேலை வழங்க வேண்டும், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற உள்ள 4-வது மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் செயல்பட்டு வருகிறது.
    • 2 தனியார் பள்ளிகள், உணவகங்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு பாராட்டு சான்று களை ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமையில், துணைத்த லைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில் திடக்கழிவு மேலாண்மை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் மக்க வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்ட த்தின்படி பள்ளிகள், உணவகங்களிலும் இத் திட்டம் செயல்படுகிறது.

    இப்பணியில் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ஒவ்வொருவார்டாக சென்று பொதுமக்கள் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு செய்து, அதை மேற்பார்வை செய்து தற்போது நகராட்சி முழு வதும் தூய்மையை கடைப்பிடிக்கும் நிலை கொண்டுவந்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பாலம் தொண்டு நிறுவனம், 2 தனியார் பள்ளிகள், உணவகங்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மேலும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது, தொடர்ந்து இது போன்று பாராட்டுகள் செய்யப்படும், நகரின் தூய்மைக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற நியமன குழு உறுப்பினர் பாண்டியன், பொறியாளர் பிரதான் பாபு, மேலாளர் சிற்றரசு, நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட நகராட்சி பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    • சான்று இல்லாமல் பொட்டல பொருட்களை விற்ற 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை முதன்மைச் செயலாளர்-தொழிலாளர் ஆணையரின் உத்தரவின்படியும், சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிவுறுத்தலின் படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரின் வழிகாட்டுதலின்படியும, தொழிலாளர் இணை ஆணையரின் அறிவுரையின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுபவர்கள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்யும் 35 வணிக நிறுவனங்களில்

    சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் பொட்டல–ப்பொருட்கள் விதிகளின் கீழ் காணப்பட வேண்டிய சான்றுரைகள் இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த 5 நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தயாரிப்பாளர்களும் பொட்டலம் இடுபவர்களும் விற்பனையாளர்களும், நுகர்வோர் நலன் கருதி தயாரிப்பாளர், பொட்டலமிடுபவரின் பெயர், முழு முகவரி, பொட்டலப்பொருளின் பெயர், நிகர எடை, தயாரிக்கப்பட்ட மாதம் ,வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பின்பற்றப்பட வேண்டிய விபரங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வணிகர்கள் எடை அளவைகள் மற்றும் தராசுகளை முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். மேலும், வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் அவர்களின் பெயர், விவரங்களை "labour.tn.gov.in/ism" என்ற இணையதளத்தில் கட்டாயம் விடுதலின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    ×