என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தரிசு நிலத்தில் சொட்டு நீர் பாசன அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு சான்று வழங்கல்
    X

    குருங்குளம் மேற்கு கிராமத்தில் சிறுகுறு விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

    தரிசு நிலத்தில் சொட்டு நீர் பாசன அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு சான்று வழங்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தரிசு நிலத்தில் சொட்டு நீர் பாசன அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் 80 விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை தாலுகா குருங்குளம் மேற்கு கிராமத்தில் இன்று கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா ஏற்பாட்டின் படி தரிசு நிலத்தில் சொட்டு நீர் பாசன அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கு தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் வி.ஏ.ஓ.க்கள் செல்வராஜ் (குருங்குளம் மேற்கு ), புனிதா ( குருங்குளம் கிழக்கு ), சூர்யா ( திருக்கானூர்பட்டி ) ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உடனுக்கு டன் சான்று வழங்கினர். 80 விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர் சத்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் வெங்கடாஜலபதி, பினோலெக்ஸ் எம்.ஐ. கம்பெனி டார்வின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( விவசாயம்) கோமதிதங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாளை பூதலூர் தாலுகா சானூரப்பட்டி வி.ஏ.ஓ அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 13-ந் தேதி பாலையப்பட்டி வடக்கு வி.ஏ.ஓ. அலுவலகத்திலும், 14-ந் தேதி புதுக்குடி தெற்கு கிராமத்திலும், 15-ந் தேதி தோப்பு விடுதியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    Next Story
    ×