search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவ்வையார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

    அவ்வையார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    • ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
    • பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.

    திருவாரூர்:

    தமிழக அரசின் அவ்வையார் விருது. பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற டிச 10க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, உலக மகளிர் தின விழா 8.3.2023-ம் அன்று நடைபெறவுள்ளது.

    இவ்விழாவின் போது பெண்களின் முன்னே ற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறுபவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் தொடர்பான இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்விருதுகள் தொடர்பான கூடுதல் விபரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்ப படிவங்கள் ஆகியவை திருவாரூர் மாவட்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் அவர்கள் இணையதளம் வாயிலாக 10.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டு க்கொண்டுள்ளார்.

    Next Story
    ×