search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்டிகை"

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு
    • இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    சேலம்:

    கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்ப டும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்க ளால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்கா லத்தின் இறுதி வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. அதனைதொடர்ந்து பெரிய வியாழன் நடை பெற்றது. ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியா ழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நேற்றுமுன்தினம் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை, சிலுவை பாதை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தேவா லயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொண்டனர்.

    சேலம் சூரமங்கலம் இருதய ஆண்டவர் பேரா லயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயம், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயத்தி லும் ஈஸ்டரை முன்னிட்டு பண்டிகை சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.

    ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி ஆலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம், கோட்டை லெக்லர் ஆலயம், சன்னியாசிகுண்டு புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல்லில் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதேபோல் சேலம் சாலையில் உள்ள அசெம்பளி ஆப் காட் திருச்சபையிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

    • மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.
    • தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வரு கிறது.

    அதன்படி இந்த ஆண்டும் நியாயவிைலக் கடைகள் மூலம் வேட்டி-சேலை களை வழங்க அரசு உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து வேட்டி-சேலைகள் கொள்முதல் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் முடிந்ததும் அவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

    சென்னையில் இருந்து மண்டலம் வாரியாக அனுப்ப ப்பட்டு, பின்னர் மாவட்ட ங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.அதன்படி குமரி மாவட்டத்தில் விநியோ கிக்கப்பட வேண்டிய வேட்டி-சேலைகள் லாரிகள் மூலம் வந்தன. மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.

    தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் வேட்டி-சேலைகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை தாலுகா அலுவலகத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட வேட்டி-சேலைகள்,வட்டா ட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

    அங்கிருந்து அவை விரைவில் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

    • படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதி 10 ஆயிரத்து 840 பேரும், 25-ந்தேதி 11ஆயிரத்து 148 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

    இதனை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்காக படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதி 10 ஆயிரத்து 840 பேரும், 25-ந்தேதி 11ஆயிரத்து 148 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    • தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, அண்ணாநகர், கபிலக்குறிச்சி, பிலிக்கல் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பொன்மலர் பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், அய்யம்பாளை யம், வடகரையாத்தூர், தண்ணீர் பந்தல், சோழசிராமணி, மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆலைகளில் கரும்புகளை இயந்திரம் மூலம் சாரு பிழிந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச்சர்க்கரை என தயாரிக்கின்றனர்.

    தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்கள் உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க் கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் இதை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட் டங்கள், பல்வேறு மாநிலங்களுக்கும் அனு ப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,150-க்கும் விற்பனையானது. இந்த வாரம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,270-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதி களில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்.
    • தீபாவளிக்கு இயக்கப்பட்ட ரெயில்களின் வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.2.96 கோடி கிடைத்துள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயால் தீபாவளிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கான வருமானம் குறித்து தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பாண்டியராஜா தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு தெற்கு ரெயில்வே வணிகதுறை அதிகாரி ரவீந்திரன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளிக்காக அக்டோபர் 18-ல் இருந்து நவம்பர் 3 வரை மொத்தம் 34 ரெயில்கள் இயக்கப்பட்டதில், 19 ரெயில்கள் தெற்கு ரெயில்வே மூலமாகவும், 15 மற்ற மண்டலங்கள் மூலமாக தெற்கு ரெயில்வே எல்லைக்குள் இயக்கப்பட் டது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களில் பெரும்பாலான ரெயில்கள் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கொச்சுவேலி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

    மற்ற ரெயில்வே மண்டலங்கள் சார்பாக திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூர் ஆகிய ஊர்களில் இருந்து இருந்து பெங்களூருக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும், தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

    திருநெல்வேலி, எர்ணாகுளம், மங்களூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து வட மாநில நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களின் வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.2.96 கோடி கிடைத்துள்ளது.

    தாம்பரம் - திருநெல்வேலி ரூ.22.43 லட்சமும், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரூ.22.3 லட்சமும், தாம்பரம் - நாகர்கோவில் ரூ.18.2 லட்சமும், கொச்சுவேலி - தாம்பரம் ரூ. 17.71 லட்சமும் வழி நாகர்கோவில், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் ரூ.17.01 லட்சமும், தாம்பரம் - திருநெல்வேலி ரூ.11.56 லட்சமும், சென்னை - ராமேஸ்வரம் ரூ.11.29 லட்சமும், திருச்சி - தாம்பரம் ரூ.2.62 லட்சம் மற்றும் ஒரு மார்க்கத்தில் நாகர்கோவில் - பெங்களூரு ரூ.9 லட்சமும், திருநெல்வேலி - தானாப்பூர் ரூ.53.8 லட்சமும் (இரு சேவைகள்) வருமானமாக கிடைத்துள்ளது.

    இது தவிர மற்ற மண்டலங்கள் மூலம் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் ரூ.1 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. அனைத்து ரெயில்களையும் சேர்த்து மொத்த வருமானமாக ரெயில்வே துறைக்கு ரூ.2.96 கோடி வசூலாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து பயணிகள் கூறியதாவது: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை மாதங்களாக விளங்கும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும் சிறப்பு ரெயில்கள் இயக்கினால் தெற்கு ரெயில்வேக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சிறப்பு ரெயில்கள் அனைத்தும் பல்வேறு ரெயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரெயில்களை கொண்டு இயக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    தற்போது இயங்கும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத காரணத்தால் பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தும் வருகின்றனர்.

    ரெயில்வே துறை பண்டிகை கால சிறப்பு ரெயில்களை பண்டிகைகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்தால் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ரெயில்வே துறை கடைசி நேரத்தில் சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கும் போது ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அந்த டிக்கெட்டை ரத்து செய்து விட்டு ரெயில்களில் பயணம் செய்ய விரும்பமாட்டார்கள்.

    ஆகவே பண்டிகை காலங்களில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே ரெயில்வேயின் வருமானத்தையும், பயணிகளின் தேவையையும் கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர். 

    அன்னதானப்பட்டி:

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. மேலும் வருகிற ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையும் கிறிஸ்தவர்கள் வரவேற்க தயாராக உள்ளனர். இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர். 

    கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த தால், எளிமையான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு முதல் மிகவும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர். அதேபோல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, ஸ்டார்கள் தொங்கவிட்டு, அதனை மின்விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதனைக் குறிக்கும் விதமாக வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிட்டுள்ளனர்.

    சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்ஷன், 4 ரோடு, 5 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள புத்தகக் கடைகள், அழகு சாதன கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ரூ.50 , ரூ.60 முதல்  ரூ.2500 வரை கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் வடிவங்களுக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகின்றன, என்றார்.

    • ஆயத்த ஆடைகள்-பட்டாசுகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்
    • வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் வந்ததால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

    நாகர்கோவில்:

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி.

    புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக புதிய துணி வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.

    வீட்டில் இருக்கும் உறவினருக்கு ஆடைகளை எடுத்து தைக்க கொடுப்ப தில் முனைப்பாக செயல்பட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகை விற்பனை விறு விறுப்பாக நடந்தது. பண்டிகை காலம் நெருங்க நெருங்க ஆயத்த ஆடைகள் (ரெடிமெட்) வாங்க அனைத்து கடை களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    சாலையோர சிறு வியாபாரிகள் ஆயத்த ஆடைகள், பட்டாசுகள், மற்றும் சிறுவர்-சிறுமிகளை கவரும் பொருட்கள் போன்ற வற்றை விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். அவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நாகர் கோவில் மீனாட்சிபுரம், செம்மங்குடி ரோடு, கோட்டார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை களில் மக்கள் குடும்பத்து டன் வந்ததால், அங்கு போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது. இதற்கிடையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை வியா பாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திடீர்.. திடீரென பெய்யும் மழையால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வரு கின்றனர்.

    இருப்பினும் அவர்கள் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வர அங்கு மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதனை சீரமைக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீ சார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்துள்ளனர். சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இதனால் மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் சிரமமின்றி சென்று ஜவுளி மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல்ேவறு ரக புதிய பட்டாசுகளை வாங்குவதில் சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் குமரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை களை கட்டி காணப்பட்டது. இன்னும் 2 நாட்களில் இந்தக் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் வியாபாரிகளும் போலீசாரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட, வெளியூர்க ளில் வேலை பார்ப்ப வர்கள் இன்று முதல் குமரி மாவட்டம் வரத் தொடங்கி விட்டனர். இதனால் வடசேரி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து வேலை பார்ப்பவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பஸ்நிலையம், ரெயில் நிலையம் நோக்கி வருகின்றனர். வெளியூர் செல்வோர் மற்றும் வருவோர் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மாலை , இரவு நேரங்கள் மட்டுமின்றி, காலை நேரத்திலும் ஏராளமானோர் பயணத்தை தொடர்வதில் ஆர்வம் காட்டினர்.

    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நாகர்கோவில், அக்.20-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை பட்டாசு களை வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசு களை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன.

    பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அள வில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள் ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளி யில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு களை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    • பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது
    • இந்தியாவின் ‘நம்பர்-1 டீலரான ‘வசந்த் அன் கோ’ நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது.

    நாகர்கோவில்:

    இந்தியாவின் 'நம்பர்-1 டீலரான 'வசந்த் அன் கோ' நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது. இந்த நிலையில் 'வசந்த் அன் கோ' தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்ப னையை தொடங்கியுள்ளது.

    இந்த விற்பனையில். அனைத்து முன்னணி வீட்டு உபயோக பொருட்களும் மிக குறைந்த விலையில், எளிய தவணை முறை வசதி யுடன் கிடைக்கும். ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்க ளுக்கு பரிசு போட்டி மூலம் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா 1 பவுன் வீதம் 100 பவுன் தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

    32 'இன்ச்' எல்.இ.டிடிவி.. 'பிரிட்ஜ்', 'வாஷிங் மெஷின்' ஆகிய ரூ.49 ஆயிரத்து 140 மதிப்புள்ள 3 பொருட்கள் தள்ளுபடி விலையில் ரூ.29 ஆயிரத்து 990-க்கு கிடைக் கும். 32 'இன்ச்' எச்.டி. 'ஸ்மார்ட்' டி.வி. உடன் 32 ''இன்ச்' எச்.டி. எல்.இ.டி டி வி.யை ரூ.10 ஆயிரத்து 990 க்கு வாங்கலாம். 32 'இன்ச்' எல்.இ.டி. டி.வி. சிறப்பு விலையாக ரூ.8 ஆயிரத்து

    990-க்கு கிடைக்கும். இதனை மாத தவணையாக ரூ.749 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    1.5 டன் 4 ஸ்டார் 'ஸ்பிலிட்' 'ஏ.சி.' சிறப்பு விலையாக ரூ.35 ஆயிரத்து 990-க்கு வாங்கலாம். மாத தவணை யாகரூ.3.ஆயிரத்து 83 செலுத் தியும் பெறலாம். 7 கிலோ 'பிரண்ட் லோடு' 'வாஷிங் மெஷின்' சிறப்பு விலையாக ரூ.32 ஆயிரத்து 990-க்கு பெறலாம். 'பிரஷர் 'குக்கர்' மற்றும் 'அயர்ன் 'பாக்ஸ்' ரூ.1,111 மட்டும் கொடுத்து வாங்கலாம். கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, கியாஸ் அடுப்பு போன்றவைகளும் எளிய தவணை முறை வசதியுடன் தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் 'ஸ்மார்ட் போன்' வாங்கு பவர்களுக்கு 'புளுடூத் ஹெட் செட்', 'பவர் பேங்', 'ஹெட் போன்' போன்றவற்றில் ஏதாவது ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

    பழைய செல்போன் எந்த நிலையில் இருந்தாலும் ரூ.750-ல் இருந்து 'எக்சேஞ்ச்' செய்துகொள்ளலாம். ரூ.55 செலுத்தி 55 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.65 செலுத்தி 65 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.75 செலுத்தி 75 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.85 செலுத்தி 85 'இன்ச்' எல்.இ.டி.டி.வி.களை தவணை முறையில் வாங்க லாம். ரூ.20 ஆயிரத்துக்கு மேல் 'பர்னிச்சர்' வாங்கி னால் உடனடி தள்ளுபடி யாக ரூ.2 ஆயிரம் கிடைக் கும். 'கிரெடிட்', 'டெபிட்' கார்டுகளுக்கு 'கேஷ் பேக்' மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட சலுகை வழங்கப்படும்.

    முன்பணம் இல்லாமல் குறிப்பிட்ட ஏ.சி., எல்.இ.டி. 'டி.வி., 'பிரிட்ஜ்', 'வாஷிங் 'மெஷின்', 'வாட்டர் பியூரி பையர்', 'மைக்ரோவேவ் 'ஓவன்', செல்போன், 'டிஸ் வாஷர்', 'ஏர் பியூரிபையர்', 'ஏர் கூலர், 'ஹோம் தியேட்டர்' எடுத்துச்செல்லலாம். வட்டி இல்லாமல் ஏராளமான தவணைமுறை வசதிகள், 36 மாதம் வரை வட்டியில்லா தவணை முறை வசதி ஆகியவையும் வழங்கப்படும்.

    எங்களின் 45 ஆண்டு கால அனுபவம் மற்றும் நற்பெயர் காரணமாக கொள்முதலில் எங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்களே தக்க வைத்துக்கொள்ளாமல் அவற்றின் பெரும் பகுதியை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை வழக்க மாக கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே எங்களிடம் எப்போதும் மிக குறைந்த விலை சாத்தியமாக உள்ளது.

    மேற்கண்ட தகவல் 'வசந்த் அன் கோ' நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மப்டி உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து கோவில்களில் தரிசனம் செய்தும், இளைஞர்கள் முதல் புதுமணத் தம்பதியினர், பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண் டாடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்பொழுது தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

    விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மங்குடி ரோடு, மீனாட்சி புரம், கலெக்டர் அலுவலக ரோடு, மணிமேடை, வடசேரி பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்திருந்தனர்.அனைவரும் குடும்பத் தோடு வந்து புத்தாடை களை எடுத்துச் சென்றனர்.

    தீபாவளி பண்டிகை யையடுத்து துணிக்கடை களில் புத்தம் புது கலெக் சன்கள் விற்பனைக்கு வந்தி ருந்தது. புத்தாடைகளை குடும்பத்தோடு வந்து எடுத்து மகிழ்ந்தனர். கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியதையடுத்து நாகர் கோவில் நகரில் வடசேரி, செட்டிகுளம், கோட்டார், மணிமேடை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், தக்கலை இரணியல் உள்பட மாவட் டத்தின் முக்கிய பகுதி களில் உள்ள அனைத்து கடை களிலும் இன்று பொது மக்களின் கூட்டம் அதிகமா கவே காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கடைவீதிகளில் போலீசார் மப்டி உடைகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    பிக்பாக்கெட் திருடர்கள் அதிக அளவு நாகர்கோவில் நகரப் பகுதியில் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக் கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையம் உட்பட அனைத்து பஸ்நிலையங்களிலும் பஸ்களில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் தங்களது செயின் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

    பட்டாசு கடைகளிலும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளில் இன்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.பட்டாசு கடைகளில் விற்பனையை முறைப்படுத்த கடை உரிமையாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    பட்டாசுகள் விற்பனைக்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
    • சிறப்பு ரெயில்களை திருநெல்வேலியுடன் நிறுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

    நாகர்கோவில்:

    ஆயுத பூஜை, பொங்கல், தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் இயக்க ப்படும் சிறப்பு ரெயில்கள் குமரி மாவட்டத்தை புறக்கணிப்பதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. சிறப்பு ரெயில்கள் மதுரை கோட்டத்தின் எல்லையான திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் சங்கம் தெரிவிக்கிறது.

    மேலும் ரெயில்களை நாகர்கோவில் வரை இயக்க முடியாததற்கு முக்கிய காரணம் நாகர்கோவில் ரெயில் நிலையம் இட நெருக்கடி பிரச்சினையால் சிக்கி இருப்பது தான் என்றும் கூறுகின்றனர்.

    இது தொடர்பாக பயணி கள் நல சங்கத்தினர் கூறு கையில், நாகர்கோவி லிருந்து அதிக அளவிலான ரெயில்கள் கேரளா வழியாக, அதாவது திருவனந்த புரம் மார்க்கம் இயங்கு கின்றன. இதனால் தான் இட நெருக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.

    இதை தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்ந்து ரெயில்வே நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு சிறப்பு ரெயில்களை திருநெல்வேலி யுடன் நிறுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய இட நெருக்கடியை குறைப்பதன் ஒரு பகுதியாக சென்னை - கொல்லம் அனந்தபுரி ரெயில், வருகிற 20-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக இயக்கப்பட இருக்கின்றது. மேலும் ஒரு சில ரெயில் களை, குறிப்பாக பயணி கள் ரெயில்களை நாகர் கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்கி னால் நாகர்கோவில் சந்திப்பு நிலைய இடநெருக்கடி பிரச்சனை ஓரளவுக்கு குறையும் என்ற ஆலோசனையும் ரெயில்வே துறையிடம் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு இயக்கும் போது தற்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அதிக அளவில் பயணிகள் ரெயில் சேவை உள்ளது போன்று, பகல் நேரத்தில் திருநெல்வேலிக்கும் அதிக அளவில் பயணிகள் ரெயில் சேவை வசதி கிடைக்கும்.

    திருவனந்தபுரத்திலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்ப ட்டு நாகர்கோவிலுக்கு 8.45 மணிக்கு வந்து சேரும் பயணிகள் ரெயிலை நாகர்கோவில் டவுன் வழி யாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த ரெயில் தான் நாகர்கோவில் விட்டு விட்டு கோட்டயம் ரெயி லாக மதியம் புறப்பட்டு செல்கிறது.

    திருநெல்வேலி யிலிருந்து கோட்டயம் ரெயில், நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் போது காலை 8.45 மணி முதல் மதியம் 1 மணி வரை தினசரி ஒரு நடை மேடை காலியாக கிடைக்கும். காலையில் நடை மேடை காலியாக இருந்தால் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் ஒரு சில சிறப்பு ரெயில்களை நாகர் கோவிலிருந்து இயக்க முடியும்.

    2-வது கோரிக்கையாக திருநெல்வேலியில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு 8.10 மணிக்கு வரும் பயணிகள் ரெயிலையும், நாகர்கோவிலில் இருந்து 7.55 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி ரெயிலையும் இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி -கொச்சுவேலி என நாகர் கோவில் டவுன் வழியாக இயக்கலாம்.

    திருவனந்தபுரத்திலிருந்து மாலையில் புறப்படும் பயணிகள் ரெயிலையும் நாகர்கோவிலில் இருந்து மாலையில் திருநெல்வேலி புறப்படும் பயணிகள் ரெயி லையும் இணைத்து ஒரே ரெயிலாக திருவனந்தபுரம் - திருநெல்வேலி பயணி கள் ரெயில் என்று இயக்க வேண்டும்.

    கொச்சுவேலியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் பயணிகள் ரெயிலை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்தும் மறு மார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு 6.20 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரெயிலாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு பயணிகள் ரெயில்களை மாற்றம் செய்து இயக்கும் போது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலை யம் இட நெருக்கடி பிரச்சினைகளிலிருந்து விடிவு பெற்று விடும்.

    இவ்வாறு இடநெருக்கடி பிரச்சினை இல்லாமல் இருந்தால் நாகர்கோவிலுக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் சிறப்பு ரெயில்களை அதிக அளவில் இயக்கலாம் என்றனர்.

    ×