search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்  பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    X

    மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நாகர்கோவில், அக்.20-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை பட்டாசு களை வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசு களை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன.

    பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அள வில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள் ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளி யில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு களை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    Next Story
    ×