search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசுகள்"

    • சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால் அதுவும் வெடித்தன.
    • மேலும், அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    கார்த்திகை தீபத்திரு நாளை முன்னிட்டு நேற்று மாலை தஞ்சாவூர் பெரிய கோவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பெருவு டையார்-பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் கோவில் நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டு, அந்த தீபச்சுடரால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர்.

    மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன.

    சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர்.

    மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

    • அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
    • பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொ ண்டாடுவது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை விளார் சாலை பர்மா காலனி தில்லை நகரில் உள்ள தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதற்கு டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஆரோன்ராஜ், பள்ளித்தாளாளர் லாரன்ஸ், நிர்வாக அலுவலர் டோனி சுகந்த், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் (போக்குவரத்து) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாணவி ஷோபிகா வரவேற்று பேசினார்.

    இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-

    அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகள் கண்டிப்பாக பெரியோர்கள் முன்னிலையில் தான் பட்டாசுகளை படிக்க வேண்டும்.

    பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    செருப்பு அணிந்து கொண்டு வெடி வெடிக்க வேண்டும். முக்கியமாக வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

    பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவியாக தீப்புண் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

    பின்னர் உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    எந்த காரணம் கொண்டும் தீக்காயம் ஏற்பட்டால் பேனா மை, வாழைச்சாறு, பேஸ்ட் போன்றவற்றை தடவக்கூடாது.

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 200 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

    இவற்றில் 190 தீ விபத்துக்கள் அலட்சியம், கவனக் குறைவால் ஏற்பட்டது.

    எனவே அலட்சியம், கவனக்குறைவு இல்லாமல் விபத்தில்லா தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோதி ,சக்தி, ஆசிரியை காயத்ரி மற்றும் மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார். முன்னதாக பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் எனவும், எப்படி வெடிக்க கூடாது எனவும் மாணவ- மாணவிகள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • இவரது வீட்டில் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது
    • புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    துறையூர்

    திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (45). இவரது வீட்டில் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி தனி படையினர் ராஜாவின் வீட்டை நேற்று இரவு அதிரடியாக சோதனையிட்டனர். சோதனையில் அரசின் உரிய அனுமதி இன்றி சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பட்டாசு பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டாசை பறிமுதல் செய்த எஸ்.பி தனிப்படையினர், துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் நகரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பட்டாசு பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்ற கணவர்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிக்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சரவெடி தயாரிப்பு பாதிக்கப் பட்டுள்ளது.

    இந்நிலையில் சரவெடி பட்டாசுகள் தள்ளுபடி விலையி்ல் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்துள்ளனர். இது குறித்து போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சரவெடி பட்டாசுகள் வேண்டும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பர செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்களும் சிவகாசி அருகே மீனம்பட்டிக்கு வரும்படி கூறியுள்ளனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார், அனுமதி பெறாத குடோனில் பெட்டி பெட்டியாக தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

    சரவெடி பட்டாசுகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவகாசி திருப்பதி நகரை சேர்ந்த நாகராஜ் (வயது40). அவரது மனைவி அழகு லட்சுமி (32) ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
    • குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மோகன்ராஜ் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிவகாசி-மடத்துப்பட்டி சாலையில், பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு சுமார் 1150 பண்டல்களில் பட்டாசுகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசுகளின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.

    அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரிதரன் மற்றும் குடோன் பணியாளர் மண்குண்டான் பட்டியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருந்திரிகள்-பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஜோதிபுரத்தை சேர்ந்த சதுரகிரி(வயது63), சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த பாண்டியராஜன்(59), நல்லையன்(59) ஆகியோர் அனுமதியின்றி கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 115 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி உசேன் காலனியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் அழகாபுரி ரோட்டில் அனுமதியின்றி தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்துள்ளார். இது தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நாகர்கோவில், அக்.20-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை பட்டாசு களை வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசு களை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன.

    பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அள வில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள் ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளி யில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு களை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    ×