search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி விவேகானந்தர் மண்டபத்தை 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    X

    கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி விவேகானந்தர் மண்டபத்தை 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

    • படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதி 10 ஆயிரத்து 840 பேரும், 25-ந்தேதி 11ஆயிரத்து 148 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

    இதனை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்காக படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதி 10 ஆயிரத்து 840 பேரும், 25-ந்தேதி 11ஆயிரத்து 148 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    Next Story
    ×