search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து அதிகரிப்பு"

    • இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு ஒரு மாதமாக நீர்வரத்து 1000 கனஅடியாக தண்ணீர் தொடர்ந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

    இதனால் இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.
    • வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    பென்னாகரம்,

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேன க்கல்லுக்கு வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

    இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தொடர் மழை காரணமாக வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.29 அடியாக உள்ளது. நேற்று 1076 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1510 கன அடியாக அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் தேவதா னப்பட்டி, வடுகபட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நேற்று முகூர்த்தநாள் என்பதால் விசேஷங்களுக்கு சென்று திரும்பியவர்களும் குறித்த நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர்.

    இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.29 அடியாக உள்ளது. நேற்று 1076 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1510 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1519 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4695 மி.கன அடி.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 40.40 அடியாக உள்ளது. வரத்து 1481 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 7234 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 40 கன அடி. இருப்பு 433.28 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடி. வரத்து 203 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 100 மி. கன அடி.

    ஆண்டிபட்டி 18.2, அரண்மனைபுதூர் 12.8, பெரியகுளம் 29, மஞ்சளாறு 17, சோத்துப்பாறை 28, வைகை அணை 8.6, போடி 15.2, உத்தமபாளையம் 1.6, கூடலூர் 3.4, பெரியாறு 16, தேக்கடி 17.2, சண்முகநாதி அணை 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    • அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது.

    சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்கு எடுக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தீவிரமாகும் தென்மேற்குப் பருவ மழையால், சிறுவாணி அணை முழுக்கொள்ளளவான 878.50 மீட்டா் (49 அடி) நீா்மட்டத்தை எட்டும்.

    இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் 873 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், ஜூலை முதல் ஆகஸ்டு வரை பெய்த தென்மேற்குப் பருவ மழையால் 876 மீட்டா் வரை உயா்ந்தது.

    இதைத் தொடா்ந்து, செப்டம்பா் மாதத்தில் இடைவெளி விட்டு, சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், அணையின் நீா்மட்டமானது 877 மீட்டராக உயா்ந்தது.

    இதையடுத்து, அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. ஆற்றிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 38 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 42 அடி வரை நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.
    • குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்ட குளம், குட்டைகள் உள்ளன. மாவட்டத்தின் முதல் குளமாக இருப்பது சாமளாபுரம் குளம். செந்தேவிபாளையம் அணைக்கட்டில் இருந்து குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

    ஏற்கனவே 80 சதவீத தண்ணீருடன் நிரம்பியிருந்த சாமளாபுரம் குளம் தற்போது நிரம்பி வழிகிறது. சாமளாபுரம் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர், வழங்குவாய்க்கால் வழியாக பள்ளபாளையம் குளம் செல்கிறது.

    பள்ளபாளையம் குளமும் வேகமாக நிறைந்து, உபரிநீர் பரமசிவம்பாளையம் ஓடை வழியாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டு பள்ளபாளையம் குளத்தின் கசிவு நீரும் வாய்க்கால்களில் சென்று கொண்டிருக்கிறது.

    இதேபோல், ஆண்டி பாளையம் குளமும் நிரம்பி, அடர்மரங்கள் வளர்ந்த இரு தீவுகளுடன் கண்கொள்ளா காட்சியாக, அமைந்துள்ளது. முக்கியமான குளங்கள் நிரம்பியுள்ளதால் நஞ்சராயன் குளத்துக்கு வரும் பறவைகள், ஓய்வு நேரத்தில், சாமளாபுரம், பள்ளபாளையம், ஆண்டிபாளையம் குளங்களுக்கும் திரும்பி கொண்டிருக்கின்றன.பருவமழையால் குளம், குட்டைகள் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயருமென விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக வரும் நல்லாறு, திருப்பூர் மாநகராட்சி பகுதி வழியாக செல்கிறது. நல்லாற்றின் குறுக்கே, 450 ஏக்கரில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் நேரடியாக நல்லாற்றில் கலக்கின்றன. முறைகேடாக இயங்கும் சில சாயப்பட்டறைகள், 'பட்டன் - ஜிப்' பட்டறைகள் நல்லாற்றில் சாயக்கழிவை வெளியேற்றுகின்றன.

    நல்லாறு முழுமையாக மாசுபட்டு, கடும் துர்நாற்றத்துடன், ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. சிறிய மழை பெய்தாலும், சாயக்கழிவை நல்லாற்றில் திறந்துவிடுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதற்கு ஆதாரமாக, நஞ்சராயன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை சாட்சியாக காட்டுகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக நல்லாற்றிலும் மழைநீர் செல்கிறது. இந்நிலையில், சாயக்கழிவை கலந்துவிடுவதால் குளத்தில் இருக்கும் மீன்கள் ஆங்காங்கே செத்து மிதப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகையில், மழை பெய்யும் வாரங்களில், குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும்.பல நாட்களுக்கு அகற்றாமல் இருக்கும் போது, கடும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    வலை மூலமாகவும், தூண்டில் போட்டும் குளத்தில் மீன் பிடிக்கின்றனர். சில நேரம் ஆபத்தை உணராமல் குளத்திற்குள் இறங்கி மீன் பிடிக்கின்றனர். சில நேரங்களில் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் சாப்பிட தகுதியற்றவையாகவும் இருக்கும்.மாவட்ட நிர்வாகம், குளத்தில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

    பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பினர் கட்டுப்பாட்டில் அவிநாசியில் தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர், கிளாக்குளம், நடுவச்சேரி, கருவலூர், அவிநாசிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பல 100 ஏக்கர் பரப்பளவில் குளங்கள் உள்ளன.

    இதில் கிளாக்குளம், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட சாலையை ஒட்டியுள்ள குளங்களில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு, குழாய் பதிக்கும் பணி நடந்தது. தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால் குளக்கரை பலவீனமடைந்தது.

    இதே போன்று புஞ்சை தாமரைக்குளமும் பலவீனமடைந்தது. அதோடு எஞ்சிய பிற குளங்களின் கரைகளை பலப்படுத்தவும், குளங்களை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவும் 7 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன.

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே தத்துனூர்ஊராட்சியில் 846 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க கடந்த அ.தி.மு.க., அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக தத்தனூர், புலிப்பார், புஞ்சைத்தாமரைக்குளம் என 3 ஊராட்சிகளில் உள்ள, 845 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்துக்கு ஒப்படைக்க நில அளவை பணி மேற்கொள்ளப்பட்டது.அங்கு பேட்டரி கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைய தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. இதனால், ஆயிரம் வேலை வாய்ப்பு பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.இத்திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக, 'சிப்காட் திட்டம் கைவிடப்படுகிறது என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட மாட்டாது என்பதே முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணம் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்.

    தற்போது அவிநாசி அருகேயுள்ள அன்னூரில் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்

    தத்தனூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பெய்யும் மழையால் பசுமை திரும்பியுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளவே விவசாயிகள் விரும்புகின்றனர். தத்தனூர் மட்டுமின்றி, புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம் உட்பட அருகிலுள்ள ஊராட்சிகளில் 'சிப்காட்' தொழிற்பூங்காவுக்கு ஆட்சேபனை தெரிவித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம். எனவே சிப்காட் தொழிற்பேட்டை வராது என நம்புகிறோம் என்றனர்.

    • திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது.
    • நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    திருப்பூர் :

    உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில்வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள்எச்சரிக்கையாக இருக்குமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில், இம்மாவட்டங்களை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் சில பகுதிகளில் பருவமழை பெய்து வருவதன் மூலம் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திருப்பூர், திருவள்ளூர், இராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகளவு இருந்து வருகிறது. அமராவதி அணையின் முழு கொள்ளவான 90 அடியினை எட்ட உள்ள நிலையில், உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் அதிகமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அமராவதி ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிபொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகளவில் உள்ளதால், நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் குளத்திற்கும், நொய்யல் ஒரத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திற்கும் மற்றும் முத்தூர் கதவணைக்கும் எந்த நேரத்திலும் மேலும் வெள்ள நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப்பொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அணை நீர் மட்டம் 204 அடியாக உயர்ந்தது.
    • 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் 13 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது.

    அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175 மெகாவாட், பரளி-180 மெகாவாட், பில்லுார்-100 மெகாவாட், அவலாஞ்சி-40 மெகாவாட், காட்டுகுப்பை-30 மெகாவாட், சிங்காரா-150 மெகாவாட், பைக்காரா- 59.2 மெகாவாட், பைக்காராமைக்ரோ- 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ-0.70 மெகாவாட், மாயார்-36 மெகாவாட், மரவகண்டி-0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நீலகிரி மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 'பீக்அவர்ஸ்' எனப்படும் மின்தேவை அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் உபயோகப்படுத்தப்ப டுவதுடன் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதம் மின் உற்பத்தி நீலகிரி மின்நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக அணைக்கட்டுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்தது. இடையில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது வட கிழக்கு பருவ மழை துவங்கியதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

    இதனால் குந்தா, கெத்தை, அவலாஞ்சி, எமரால்டு உள்பட பெரும்பாலான அணைகளிலும் நீர் மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ள அப்பர்பவானி அணையின் மொத்த கொள்ளளவு 210 அடிகளாகும்.

    தற்போது அப்பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் நீரின் இருப்பு 204 அடிகளாக உயர்ந்துள்ளது. இதை தொடந்து அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் மின்சார உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

    • நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.83 அடியாக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 4,792 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.83 அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் பெரும்பள்ளம், வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம் ஆகிய அணைகள் தொடர்ந்து தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. 

    • பார்த்திபனூர் மதகு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மதகு அணையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

    ராமநாதபுரம் வைகை பழைய மூன்றாம் பாசனப்பரப்பின் பங்கீட்டு நீர் வைகை அணையில் இருந்து 8.8.2022 முதல் 14.8.2022 வரை ஆறு நாட்களுக்கு 1148 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் 27.08.2022 முதல் 02.09.2022 வரை ஆறு நாட்களுக்கு 840 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனுடன் வைகை ஆறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழைநீரும் சேர்ந்து பெறப்பட்டது. இதன் மூலம் வைகை பாசனப்பரப்பில் பயன் பெறும் கண்மாய்களில் 104 கண்மாய்களுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த 104 கண்மாய்களில் 14 கண்மாய்கள் 75 -100 சதவீதம், 37 கண்மாய்கள் 50 -75 சதவீதம், 32. கண்மாய்கள் 25 -50 சதவீதம், 21 கண்மாய்கள் 25 சதவீதம் வைகை தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம் வடகிழக்கு பருவமழையின் மூலம் பெறப்படும் தண்ணீரை நம்பியுள்ளது. தற்சமயம் வடகிழக்கு பருவமழைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வைகை அணையிலிருந்து பெறப்பட்ட வைகை நீரின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 104 கண்மாய்களுக்கும் எஞ்சிய பிற கண்மாய்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது ஓர் அரிய நிகழ்வாகும். ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மொத்த கொள்ளளவாகிய 7 அடியில் 6 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பெரிய கண்மாயின் தலைமதகில் உள்ள 7 போக்கிகளுடன் கூடுதலாக 2 போக்கிகள் அமைக்கப்பட்டதன் மூலமாக வினாடிக்கு 1850 லிருந்து 2300 கனஅடி கூடுதலாக தண்ணீர் எடுக்கப்பட்டு நீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.

    2-வது பெரிய கண்மாயான சக்கரக்கோட்டை கண்மாய்க்கு வெள்ள காலங்களில் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுவந்த நிலையில் தற்பொழுது 40 சதவீதம் மேல் தண்ணீர் வழங்கப்பட்டு நீர் இருப்பு மேலும் உயர்ந்து வருகிறது.

    வைகை நீர் பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து பரளை வெள்ளை நீர் போக்கி வழியாக வினாடிக்கு 750 கனஅடி முதல் 1000 கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பரளையாறு மூலம் பயன் பெறும் 10 நீர்வளத்துறை கண்மாய்களில் 2 கண்மாய்களில் 50 சதவீதத்திற்கு மேலாகவும் மற்றும் 4 கண்மாய்கள் 25 சதவீதத்திற்கு மேலாகவும் நீர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப தற்பொழுது உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் இணைப்பு கால்வாய்களுக்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு தண்ணீர் வீணாகாமல் சேமித்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, வைகை ஆறு வடிநிலை கோட்ட உதவி செயற்பொறியாளர் நிறைமதி, உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தபாபு, சீனிவாசன், கார்த்திக், பரமக்குடி வட்டாட்சியர் தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணை க்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியி லேயே நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. நேற்று அணைக்கு வினா டிக்கு 6,800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று மீண்டும் நீர்வரத்து அதிக ரித்து 9,800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 3-வது நாளாக தடை விதித்தது.

    பென்னாகரம்:

    கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த இரு அணைகளில் இருந்து 70 ஆயிரத்து 478 கனஅடி உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரமாக கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    இதனால் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 3-வது நாளாக தடை விதித்தது.

    அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறி உள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    • 2,020 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.
    • வெள்ளநீர் ஆர்ப்பரித்து, கரைபுரண்டு ஓடுகிறது.

    ஓசூர்,

    கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், ஓசூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, 3-வது நாளாக அதிகரித்துள்ளது.. நேற்று முன்தினம் (வியா ழக்கிழமை), அணைக்கு வினாடிக்கு 1,370 கனஅடிநீர் வந்த நிலையில், நேற்று, 839 கனஅடி நீர் அதிகரித்து, வினாடிக்கு 2,209 கனஅடி நீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்புக் கருதி, 2,020 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.

    இன்று (சனிக்கிழமை) வினாடிக்கு 2,757 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 2,820 கனஅடி நீர் அணையில் உள்ள 7 மதகுகளின் வழியாக திறந்து விடப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து, கரைபுரண்டு ஓடுகிறது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28அடிகளில், 42.48 அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கர்நாடகா மாநில ஆற்றங்கரையோர தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுகள், கெலவரப்பள்ளி அணை நீரில் கலந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறி ரசாயன நுரை குவியல், குவியலாக பொங்கி காற்றில் பறப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×