search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர்மழை"

    • நாகர் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
    • மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு சென்று செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

    நாகர்கோவில், அக்.3-

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. கன மழை பெய்வதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    எனவே வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மாவட்டத்தில் 8 தீயணைப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதே போல நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்திலும் மீட்பு கருவிகளை தயார் செய்யும் பணி இன்று தீவிரமாக நடந்தது.

    இங்குள்ள ரப்பர் படகுகள், கயிறுகள், மோட்டார் என்ஜின்கள், மோட்டார் ரம்பம், ஆக்சிஜன் சிலிண்டர்கள், காலி தண்ணீர் பாட்டில்களால் தயார் செய்யப்பட்ட படகு மற்றும் மிதவை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதற்காக அனைத்து கருவிகளும் தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    அதோடு நவீன கருவிகளையும் ஆய்வு செய்தனர். இந்த பணிகளை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், உதவி அலுவலர் துரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு சென்று செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதோடு வெள்ளம் அதிகமாக செல்லும் காட்டு பகுதிகளுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்ல கூடாது என்று தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கான லில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடை ந்தனர்.

    கொடைக்கானல்:

    எழில் கொஞ்சும் அழகும், தலையை முட்டும் மேகக்கூ ட்டங்களும், இதமான தட்ப, வெப்பநிலையும் நிலவுவ தால் கொடை க்கானலை சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகி ன்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கான லில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்க ர்ஸ்வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடை ந்தனர். நகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள ஏரி ச்சாலை முழுவதும் போக்கு வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    படகு சவாரியும் பல மணிநேரம் நிறுத்தப்பட்டது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்து வரும் சிறுகடை வியாபாரிகள், ஓட்டல்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    • 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக. நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    கடலூர்:

    திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர், மருதாத்தூர், ஆதமங்கலம், மேலூர், தொளார். புத்தேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசனத்தை கொண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.அதன்படி அறுவடை எந்திரங்கள் விவசாய நிலங்களில் நிற்கும் நிலையில், 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. மேலும், இந்த மழையினால் நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழையை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள் வேதனை அடைய வேண்டிய அவல நிலை தொடர்கிறது.

    • மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் சாத்தியாறு அணை நிரம்புகிறது.
    • 13 ஆண்டுகளுக்கு பின் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியாறு அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான திண்டுக்கல் சிறுமலை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இந்த அணைக்கு வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பருவமழை இல்லாத காரணத்தால் அணை முழுவதுமாக வறண்டு காணப்பட்டது. இதனால் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் முழுவதுமாக வறண்டு காணப்பட்டது.

    போதிய நீர் வசதியின்றி விவசாயிகள் கடும் வறட்சிக்கு உள்ளாகினர். இதனால் வைகை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த அணைக்கு ராட்சத பைப் மூலம் கொண்டு வந்து அணையை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும் என பாசன வசதி பெரும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து ஓரளவு தண்ணீர் வந்த நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. இதனால் இந்த அணையில் இருந்து பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் நிரம்பியது.

    இருப்பினும் தற்போது பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக அணை முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் அணைக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் முழுவதுமாக நிரம்பி விவசாயப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அனைத்து கிராம கண்மாய்களும் நிரம்பி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையில் இருந்து வரும் தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாசன வசதி பெறும் எர்ரம்பட்டி, கீழச்சின்னம்பட்டி முடுவார்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் 13 ஆண்டுகளுக்குப் பின் நெல் நடவு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வானம் பார்த்த பூமியாக இருந்த இப்பகுதி விவசாய நிலங்கள் தற்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை ஆடை போர்த்தியபடி கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    • வெள்ள அபாய எச்சரிக்கை
    • பொதுமக்கள் ஆறுகளை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை பரவலான கன மழை பெய்தது. வரும் நாட்களிலும் மழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தமிழக -ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 37.72 அடி உயரம் கொண்டது. அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கான நீர்வரத்து முழுவதும் உபரி நீராக ஆற்றில் கலந்து வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து நேற்று 250 கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நீர்த்தேக்க அணையான ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.64 அடி உயரம் கொண்டது.

    அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர் மழையால் அணைக்கு வரும் 43.79 கன அடி நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 12 முழுமையாக நிரம்பியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 137 ஏரிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 31 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 519 ஏரிகளில் 180 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து 415 கன அடிக்கும், மண்ணாற்றில் இருந்து 100, கல்லாற்றில் இருந்து 50, மலட்டாற்றில் இருந்து 250, அகரம் ஆற்றில் இருந்து 340, மோர்தானாவில் இருந்து 250, பேயாற்றில் இருந்து 40, வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் இருந்து 20 என பாலாற்றில் 1,460 கன அடிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 

    பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    ''மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாலாறு, கொட்டாறு, பொன்னையாறு, பேயாற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் ஆறுகளை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ மற்றும் குழந்தைகள் ஆற்றுப்படுகைகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.

    • குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.
    • குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்ட குளம், குட்டைகள் உள்ளன. மாவட்டத்தின் முதல் குளமாக இருப்பது சாமளாபுரம் குளம். செந்தேவிபாளையம் அணைக்கட்டில் இருந்து குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

    ஏற்கனவே 80 சதவீத தண்ணீருடன் நிரம்பியிருந்த சாமளாபுரம் குளம் தற்போது நிரம்பி வழிகிறது. சாமளாபுரம் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர், வழங்குவாய்க்கால் வழியாக பள்ளபாளையம் குளம் செல்கிறது.

    பள்ளபாளையம் குளமும் வேகமாக நிறைந்து, உபரிநீர் பரமசிவம்பாளையம் ஓடை வழியாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டு பள்ளபாளையம் குளத்தின் கசிவு நீரும் வாய்க்கால்களில் சென்று கொண்டிருக்கிறது.

    இதேபோல், ஆண்டி பாளையம் குளமும் நிரம்பி, அடர்மரங்கள் வளர்ந்த இரு தீவுகளுடன் கண்கொள்ளா காட்சியாக, அமைந்துள்ளது. முக்கியமான குளங்கள் நிரம்பியுள்ளதால் நஞ்சராயன் குளத்துக்கு வரும் பறவைகள், ஓய்வு நேரத்தில், சாமளாபுரம், பள்ளபாளையம், ஆண்டிபாளையம் குளங்களுக்கும் திரும்பி கொண்டிருக்கின்றன.பருவமழையால் குளம், குட்டைகள் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயருமென விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக வரும் நல்லாறு, திருப்பூர் மாநகராட்சி பகுதி வழியாக செல்கிறது. நல்லாற்றின் குறுக்கே, 450 ஏக்கரில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் நேரடியாக நல்லாற்றில் கலக்கின்றன. முறைகேடாக இயங்கும் சில சாயப்பட்டறைகள், 'பட்டன் - ஜிப்' பட்டறைகள் நல்லாற்றில் சாயக்கழிவை வெளியேற்றுகின்றன.

    நல்லாறு முழுமையாக மாசுபட்டு, கடும் துர்நாற்றத்துடன், ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. சிறிய மழை பெய்தாலும், சாயக்கழிவை நல்லாற்றில் திறந்துவிடுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதற்கு ஆதாரமாக, நஞ்சராயன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை சாட்சியாக காட்டுகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக நல்லாற்றிலும் மழைநீர் செல்கிறது. இந்நிலையில், சாயக்கழிவை கலந்துவிடுவதால் குளத்தில் இருக்கும் மீன்கள் ஆங்காங்கே செத்து மிதப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகையில், மழை பெய்யும் வாரங்களில், குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும்.பல நாட்களுக்கு அகற்றாமல் இருக்கும் போது, கடும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    வலை மூலமாகவும், தூண்டில் போட்டும் குளத்தில் மீன் பிடிக்கின்றனர். சில நேரம் ஆபத்தை உணராமல் குளத்திற்குள் இறங்கி மீன் பிடிக்கின்றனர். சில நேரங்களில் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் சாப்பிட தகுதியற்றவையாகவும் இருக்கும்.மாவட்ட நிர்வாகம், குளத்தில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

    பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பினர் கட்டுப்பாட்டில் அவிநாசியில் தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர், கிளாக்குளம், நடுவச்சேரி, கருவலூர், அவிநாசிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பல 100 ஏக்கர் பரப்பளவில் குளங்கள் உள்ளன.

    இதில் கிளாக்குளம், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட சாலையை ஒட்டியுள்ள குளங்களில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு, குழாய் பதிக்கும் பணி நடந்தது. தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால் குளக்கரை பலவீனமடைந்தது.

    இதே போன்று புஞ்சை தாமரைக்குளமும் பலவீனமடைந்தது. அதோடு எஞ்சிய பிற குளங்களின் கரைகளை பலப்படுத்தவும், குளங்களை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவும் 7 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன.

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே தத்துனூர்ஊராட்சியில் 846 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க கடந்த அ.தி.மு.க., அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக தத்தனூர், புலிப்பார், புஞ்சைத்தாமரைக்குளம் என 3 ஊராட்சிகளில் உள்ள, 845 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்துக்கு ஒப்படைக்க நில அளவை பணி மேற்கொள்ளப்பட்டது.அங்கு பேட்டரி கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைய தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. இதனால், ஆயிரம் வேலை வாய்ப்பு பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.இத்திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக, 'சிப்காட் திட்டம் கைவிடப்படுகிறது என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட மாட்டாது என்பதே முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணம் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்.

    தற்போது அவிநாசி அருகேயுள்ள அன்னூரில் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்

    தத்தனூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பெய்யும் மழையால் பசுமை திரும்பியுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளவே விவசாயிகள் விரும்புகின்றனர். தத்தனூர் மட்டுமின்றி, புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம் உட்பட அருகிலுள்ள ஊராட்சிகளில் 'சிப்காட்' தொழிற்பூங்காவுக்கு ஆட்சேபனை தெரிவித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம். எனவே சிப்காட் தொழிற்பேட்டை வராது என நம்புகிறோம் என்றனர்.

    • தொடர் மழை காரணமாக பாலமேடு சாத்தியார் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.
    • இந்த அணை நிரம்பியதால் அந்தப்பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு வகுத்து மலை, சிறுமலை, மஞ்சமலை, செம்பூத்து மலை ஆகியவை அமைந்துள்ளது. இந்த மலை தொடர்ச்சிகளின் அடிவாரத்தில் சாத்தியார் அணை உள்ளது. இந்த அணைக்கு தென்மேற்கு பருவ மழையினால் தற்போது நீர்வரத்து வர தொடங்கியுள்ளது.

    கடந்த சில வாரங்களாக மதுரை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சாத்தியார் அணைக்கு விநாடிக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவ்வப்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்கிறது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தால் அணை விரைவில் திறக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

    சாத்தியார் அணையி லிருந்து வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. அணையின் கொள்ளள வான 29 அடி நீர் மட்டம் முழுவதுமாக நிறைந்து தண்ணீர் மறுகால் பாய்கிறது. அணை பகுதிக்கு வரும் மழை நீர்வரத்து கால்வாயை பார்வையிட்டும், மதகுக ளையும், சரிபார்க்கும் பணியிலும் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த அணை நிரம்பியதால் அந்தப்பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2021ம் வருடம் நவம்பர், அதை தொடர்ந்து 2022 ம் வருடம் ஜனவரி மாதத்திலும் இந்த அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    • பாப்பிரெட்டிபட்டியில் அதிக அளவு மழை பெய்தது.
    • கொல்லப்பட்டியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .

    இந்நிலையில் தருமபுரி உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதிக்கு ஆளாகினர்.பாப்பிரெட்டிபட்டியில் அதிக அளவு மழை பெய்தது.

    அரூர் சுற்று வட்டாரத்தில், நேற்று மதியம், 12:30 மணி முதல், அச்சல்வாடி, பேதாதம்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லுார் மற்றும் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேலாகியும் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பள்ளி, கல்லுாரி சென்ற மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர்.

    ஊத்தங்கரை அருகே கொல்லப்பட்டியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் சுற்றுவட்டாரத்தில் நேற்று பிற்பகல் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையால், மழை நீர் தேங்கி சாக்கடை கழிவுநீருடன் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடியது.இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    ×