என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர் மழை - சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு
    X

    தொடர் மழை - சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு

    • ஆற்றை கடந்து பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
    • மழை பெய்து வருவதால் பக்தர்களும் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். வனத்துறைக்கு சொந்தமான இந்த பகுதியில் அதிக மழை பெய்யும் பட்சத்தில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஓடைகளில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றை கடந்து பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    அதேபோல் தொடர்ந்து மழை பெய்யலாம் என்பதால் இன்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள வனத்துறை கேட் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

    மழை பெய்து வருவதால் பக்தர்களும் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சுந்தர மகாலிங்கம் சாமி மற்றும் பல்வேறு சாமிகளுக்கு பக்தர்கள் இன்றி அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    Next Story
    ×