search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathiyar Dam"

    • சாத்தியார் அணை வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார்.
    • இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சாத்தியார் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வகுத்து மலை, கல்லுமலை அடிவாரத்தில், வைகாசிபட்டி, கோவில்பட்டி, போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் செல்கிறது.

    இந்தப்பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன் பாடற்ற நிலையில் உள்ளது. வனத்துறை அனுமதி கிடைக்காத காரணத்தினால் பல ஆண்டுகளாக இந்த பகுதி கிராம மக்கள் சென்று வர போதிய சாலைவசதி இல்லை.

    வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தையும் தார்ச்சாலை யாக மாற்ற வேண்டி இப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    தொடர்ந்து முதல மைச்சர் தனிப்பிரிவு, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு கொடுத்து இருந்தனர். இதை பரிசீலித்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, அதிகாரிகள் நேற்று காலையில் சம்மந்தப்பட்ட சாத்தியார் அணையை சுற்றியுள்ள வனத்துறை சார்ந்த மலை அடிவார சாலைகள் அனைத்தையும் அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்படி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவில், சாலையின் அகலம் 7½ மீட்டர் அளவிலும், அத்து மால் செய்தனர். இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    முன்னதாக வெங்கடே சன் எம்.எல்.ஏ. கூறுகையில், வைகாசிபட்டி கிராமம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த மலை சாலை பயனுள்ளதாக அமையும். மேலும் இந்த பணிகள் தொடங்க வேண்டிய ஏற்பாடுகள் துரிதமாக நடக்கும். இதேபோல் சரந்தாங்கி, முடுவார்பட்டி மலை சாலை களும், வனத்துறையின் அனுமதியின் பேரில் விரைவில் தார்சாலை அமைக்க பணிகள் நடை பெறும் என்றார்.

    • தொடர் மழை காரணமாக பாலமேடு சாத்தியார் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.
    • இந்த அணை நிரம்பியதால் அந்தப்பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு வகுத்து மலை, சிறுமலை, மஞ்சமலை, செம்பூத்து மலை ஆகியவை அமைந்துள்ளது. இந்த மலை தொடர்ச்சிகளின் அடிவாரத்தில் சாத்தியார் அணை உள்ளது. இந்த அணைக்கு தென்மேற்கு பருவ மழையினால் தற்போது நீர்வரத்து வர தொடங்கியுள்ளது.

    கடந்த சில வாரங்களாக மதுரை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சாத்தியார் அணைக்கு விநாடிக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவ்வப்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்கிறது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தால் அணை விரைவில் திறக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

    சாத்தியார் அணையி லிருந்து வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. அணையின் கொள்ளள வான 29 அடி நீர் மட்டம் முழுவதுமாக நிறைந்து தண்ணீர் மறுகால் பாய்கிறது. அணை பகுதிக்கு வரும் மழை நீர்வரத்து கால்வாயை பார்வையிட்டும், மதகுக ளையும், சரிபார்க்கும் பணியிலும் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த அணை நிரம்பியதால் அந்தப்பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2021ம் வருடம் நவம்பர், அதை தொடர்ந்து 2022 ம் வருடம் ஜனவரி மாதத்திலும் இந்த அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    ×