search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தியார் அணை வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு
    X

    சாத்தியார் அணை வனப்பகுதியில் தார் சாலை அமைக்க எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

    சாத்தியார் அணை வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு

    • சாத்தியார் அணை வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார்.
    • இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சாத்தியார் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வகுத்து மலை, கல்லுமலை அடிவாரத்தில், வைகாசிபட்டி, கோவில்பட்டி, போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் செல்கிறது.

    இந்தப்பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன் பாடற்ற நிலையில் உள்ளது. வனத்துறை அனுமதி கிடைக்காத காரணத்தினால் பல ஆண்டுகளாக இந்த பகுதி கிராம மக்கள் சென்று வர போதிய சாலைவசதி இல்லை.

    வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தையும் தார்ச்சாலை யாக மாற்ற வேண்டி இப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    தொடர்ந்து முதல மைச்சர் தனிப்பிரிவு, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு கொடுத்து இருந்தனர். இதை பரிசீலித்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, அதிகாரிகள் நேற்று காலையில் சம்மந்தப்பட்ட சாத்தியார் அணையை சுற்றியுள்ள வனத்துறை சார்ந்த மலை அடிவார சாலைகள் அனைத்தையும் அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்படி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவில், சாலையின் அகலம் 7½ மீட்டர் அளவிலும், அத்து மால் செய்தனர். இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    முன்னதாக வெங்கடே சன் எம்.எல்.ஏ. கூறுகையில், வைகாசிபட்டி கிராமம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த மலை சாலை பயனுள்ளதாக அமையும். மேலும் இந்த பணிகள் தொடங்க வேண்டிய ஏற்பாடுகள் துரிதமாக நடக்கும். இதேபோல் சரந்தாங்கி, முடுவார்பட்டி மலை சாலை களும், வனத்துறையின் அனுமதியின் பேரில் விரைவில் தார்சாலை அமைக்க பணிகள் நடை பெறும் என்றார்.

    Next Story
    ×