search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "overflows"

    • தொடர் மழை காரணமாக பாலமேடு சாத்தியார் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.
    • இந்த அணை நிரம்பியதால் அந்தப்பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு வகுத்து மலை, சிறுமலை, மஞ்சமலை, செம்பூத்து மலை ஆகியவை அமைந்துள்ளது. இந்த மலை தொடர்ச்சிகளின் அடிவாரத்தில் சாத்தியார் அணை உள்ளது. இந்த அணைக்கு தென்மேற்கு பருவ மழையினால் தற்போது நீர்வரத்து வர தொடங்கியுள்ளது.

    கடந்த சில வாரங்களாக மதுரை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சாத்தியார் அணைக்கு விநாடிக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவ்வப்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்கிறது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தால் அணை விரைவில் திறக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

    சாத்தியார் அணையி லிருந்து வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. அணையின் கொள்ளள வான 29 அடி நீர் மட்டம் முழுவதுமாக நிறைந்து தண்ணீர் மறுகால் பாய்கிறது. அணை பகுதிக்கு வரும் மழை நீர்வரத்து கால்வாயை பார்வையிட்டும், மதகுக ளையும், சரிபார்க்கும் பணியிலும் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த அணை நிரம்பியதால் அந்தப்பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2021ம் வருடம் நவம்பர், அதை தொடர்ந்து 2022 ம் வருடம் ஜனவரி மாதத்திலும் இந்த அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    ×