search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில்"

    • வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
    • நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பாம்பன் விளை ராஜ் ஒலிம்பியா என்க்லேவில் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பெரு விளையை சேர்ந்தவர் மறைந்த பிரபல காண்ட்ராக்டர் முத்துலிங்கம். இவரது மகனும் பெருவிளை தெய்வி முருகன் ஆலய தலைவர் மற்றும் ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவருமான வி.எல்.ஆர். குரூப்ஸ் சேர்மன் வெற்றி வேலன்-லதா வெற்றிவேலன் தம்பதி யினரின் மகள் முத்து ரூபி. இவருக்கும், அளத்தங்கரை ராஜாராம்-தேவகுமாரி ராஜாராம் தம்பதியினரின் மகன் டாக்டர் ராஜரெத்தினம் என்ற ரெகுராமுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது திருமணம் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பாம்பன் விளை ராஜ் ஒலிம்பியா என்க்லேவில் நடைபெறுகிறது.

    திருமண விழா ஏற்பாடு களை வெற்றிவேலன்-லதா வெற்றிவேலன், மணமகள் சகோதரரும், வி.எல்.ஆர். குரூப்சின் நிர்வாக இயக்குன ருமான முத்துவருண் மற்றும் வெற்றிவேலன் சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • இன்னொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை
    • குடிபோதையால் குடும்பமே சீரழிந்த அவலம்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே பரசேரி ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 48) எலக்ட்ரீசியன். இவரது மனைவி அனிதா (35) இவர்களுக்கு தன்ஷிகா (11), அஸ்மிதா (9) என்ற மகள்கள் உள்ளனர். இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

    நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக் காததால் அனிதா அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சென்று வந்தார். ஆனால் அனிதா வேலைக்கு செல்வது நாகராஜனுக்கு பிடிக்கவில்லை. நேற்று வீட்டிலிருந்த அனிதாவை வேலைக்கு செல்ல வேண் டாம் என்று நாகராஜன் கூறினார். ஆனால் அனிதா வேலைக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நாகராஜன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகள் கள் தன்ஷிகா, அஸ்மிதா இருவர் மீதும் தீ வைத்தார்.அவரும் உடலில் மண்எண் ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடல் கருகிய 2 குழந்தைகளையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான நாகராஜன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த மகள் தன்சிகா பரிதாபமாக இறந்தார்.

    அஸ்மிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இருப்பினும் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருகிறார்கள். பலியான தன்ஷிகாவின் உடல் பிரேத பரிசோ தனைக்கு பிறகு இன்று உறவினரிடம் ஒப்படைக்கப் படுகிறது.

    தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று மகளின் உடலையும் அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து இரணி யல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணை யில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகரா றில் ஈடுபட்டதுடன் வீட்டில் இருந்த பொருட்களை விற்று குடிப்பதை வாடிக்கை யாக வைத்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே பிரச் சினை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் தான் அனிதா குடும்ப செலவு களை சமாளிக்க பக்கத்தில் உள்ள பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று அனிதா வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் குழந்தைகள் மீது நாகராஜன் தீவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    குடிபோதையில் நிதானம் இழந்து நாகராஜன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கதி யாகி உள்ளது அந்த பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மேயர் மகேஷ் தாக்கல் செய்தார்
    • 2023- 24-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மற்றும் கவுன்சில் கூட்டமும் இன்று நடந்தது.

    நாகர்கோவில், மார்ச்.31-

    நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகத்தில் 2023- 24-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மற்றும் கவுன்சில் கூட்டமும் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அகஸ்டினாகோகிலவாணி, ஜவகர், முத்துராமன் ,செல்வகுமார் கவுன்சிலர்கள் டி. ஆர். செல்வம், ஸ்ரீலிஜா, அனிதா சுகுமாரன், மீனாதேவ் ,நவீன் குமார், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொறியாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ராம் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2023 -24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு ஆணையர் ஆனந்தமோகன் மேயர் மகேஷிடம் வழங்கினார்.அதனை மேயர் மகேஷ் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்தார். கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    மாநகராட்சியில் அனைத்து பகுதி மக்களுக்கும் அத்தியாவசிய வசதிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சாலை வசதி, தெரு விளக்கு, கழிவு நீர் ஓடை கட்டுதல், குடிநீர் வினியோகம் ஆகியவற்றிற்கு அனைத்து வார்டுகளுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம், பூங்கா சீரமைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து வரி உயர்வு, புதிய கட்டிடங்களுக்கான சொத்து வரி மூலமாக கூடுதல் வருவாய் கிடைக்கும். சாலைகள் மேம்பாட்டிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ரூ.30 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

    அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 93 சதவீத பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.இதையடுத்து பஸ் நிலையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். வடசேரிபஸ்நிலையம் அண்ணாபஸ்நிலையம் ஆம்னி பஸ்நிலையங்கள் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 52 வார்டுகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 685 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சபையார் குளம், சுப்பையார்குளம், நீராடி குளம், செம்மங்குளம் ஆகிய வற்றை தூய்மைப்படுத்தி நீர் ஆதாரங்களை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் நகர மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே மாநகராட்சி செயல்படுகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் மற்றும் மூலதன நிதியாக இந்த ஆண்டுரூ. 234.98 லட்சம் வருவாய் கிடைக்கிறது. குடிநீர் மற்றும் வடிகால் நிதி மூலமாகரூ. 17 கோடியை 67 லட்சம் நிதி கிடைக்கிறது. இந்த 2023-24-ம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.252.64 லட்சம் நிதி கிடைக்கும். வருவாய் மற்றும் மூலதன செலவாக ரூ.239 கோடியே 57 லட்சமும் குடிநீர் மற்றும் வடிகால் செலவாக ரூ.15 கோடியை 91 லட்சம் செலவாகிறது.மொத்தம்ரூ. 255 கோடியே 48 லட்சம் செலவு ஆகிறது. இந்த ஆண்டு ரூ.2 கோடியே 84 லட்சம் பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    டிரைவர் உள்பட 2 பேர் கைது

    நாகர்கோவில், மார்ச்.14-

    குமரி மாவட்டம் வழியாக கேரளா வுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய் துறை அதிகாரிகளும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையிலான போலீசார் இன்று காலை இருளப்பபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் டெம்போ நிற்கவில்லை. வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் தங்களது வாகனம் மூலமாக டெம்போவை துரத்தி சென்று பீச்ரோடு சந்திப்பில் வைத்து மடக்கிப் பிடித்தனர். டெம்போவை போலீஸ் மடக்கியதும் டெம்போவில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். எனினும் துரிதமாக செயல்பட்ட போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    இதைத் தொடர்ந்து டெம்போவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 2,100 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது.

    அந்த ரேஷன் அரிசியை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் டெம்போ டிரைவரான கோட்டாரை சேர்ந்த தளபதி (வயது 52) என்பவரையும், தப்பி செல்ல முயன்ற கிளினரான பன்னீர் செல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ரேஷன் அரிசியை டெம்போவோடு சேர்த்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

    நாகர்கோவில்,பிப்.26-

    நாகர்கோவிலில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு விழா மாநாடு வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

    இந்த மாநாடு குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத் திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில்அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    இந்திய துணை கண்டத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சமூக நீதி போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு முதல் திருவி தாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கி யது. அதன்பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகை யிலும் தோள் சீலை மாநாடு வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடக்கிறது.

    இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். மேலும் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்தரசு மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலை வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மறுநாள் 7-ந்தேதி காலை மாநகராட்சி கட்டி டத்தையும், ஒழுகின சேரியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முன்னதாக 6-ந் தேதி இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் நாகராஜா கோவில் மைதானத்தை அமைச்சர் மனோ தங்க ராஜ், மேயர் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பணத்தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்

    கன்னியாகுமாரி, பிப்.26-

    நாகர்கோவில் ராமன் புதூர் கார்மல் தெரு பகுதி யைச் சேர்ந்தவர் கிறிஸ்து ராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர்.

    இவர் கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி மேரி லதா, நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலை யில் கிறிஸ்துராஜ் ஆசாரி பள்ளம் இந்திராநகர் பகுதியில் காயங்களுடன் கிடந்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கிறிஸ்துராஜ் பரிதாபமாக இறந்தார். கிறிஸ்துராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்துராஜை கொலை செய்தவர்களை கைது செய்தால் மட்டுமே அவரது உடலை பெற்றுக் கொள்வோம் என்று தெரி வித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். குற்ற வாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீ சார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்த னர். மேலும் செல் போன் உதவியுடனும் துப்பு துலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது வடக்கு கோணம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (21) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவரிடம் விசாரனை நடத்திய போது கிறிஸ்துராஜை தாக்கியதை ஒப்புக் கொண்டார்.இதையடுத்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அருண்குமார் போலீசாரிடம் கூறியதாவது:-

    நான் கொத்தனாராக வேலை பார்த்து வரு கிறேன். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மதுக்கடைக்கு கிறிஸ்து ராஜை அழைத்து சென்றேன். பின்னர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது ஆட்டோவிற்கு வாடகை கொடுப்பதற்காக என்னிடம் உள்ள பணத்தை அவரிடம் கொடுத்தேன். அவர் தனது பர்ஸ்சை எடுத்து சில்லறை எடுத்தபோது அவரது பர்சில் அதிகமான பணம் இருந்தது.

    இதையடுத்து அவரிடம் உள்ள பணத்தை எடுக்க திட்டம் தீட்டினேன். உடனே கிறிஸ்துராஜிடம் வாட்டர் கேன் எடுக்க வேண்டும் என்று கூறி ஆசாரிப்பள்ளம் இந்திரா நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரது பர்சை பறிக்க முயன்றேன். ஆனால் அவர் பர்சை விடவில்லை. இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதையடுத்து அவரது கழுத்தை பிடித்து நெரித்தேன். அவர் என்னிடமிருந்து தப்பி ஓட முயன்றார். துரத்தி சென்று அவரை தாக்கினேன். அப்போது கீழே விழுந்தார். பின்னர் எனது காலால் அவரது கழுத்தில் மிதித்தேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விட்டார். பின்னர் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து எனது தந்தைக்கு போன் செய்தேன். அவர் என்னை வந்து அழைத்து சென்றார். நான் தாக்கியதில் கிறிஸ்துராஜ் இறந்து விடுவார் என்று எதிர் பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அருண்குமாரின் தந்தை தங்கராஜிடமும் விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் அவரை கைது செய்த போலீசார் அருண்குமார், தங்கராஜ் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குமரி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி பகல் 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் நடைபெற உள் ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைக ளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக் களை 24-ந் தேதி நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். 24-ந் தேதி அன்று பெறப்படும் மனுக்களை சம்பந்தப் பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்ப டும். கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு
    • நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஜோசப் பிரகாஷ். இவரது மகன் ஜிம் ரெஜினால்ட் (வயது 21).

    இவர், சென்னையில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.வெட்டூர்ணிமடம் பர மேஸ்வரன் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் இவரது மகன் கிரேசன் டேனியல் (23) என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இருவரும் ஞாலம் பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்க சென்றனர். கால்வாயில் குளித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். ஆலம்பாறை பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜிம் ரெஜினால்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கிரேசன் டேனியலை மீட்டு சிகிச்சைக்காக ஆசா ரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இருந் தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    பிணமாக கிடந்த ஜிம் ரெஜினால்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கிரேசன்டேனியல் உடலும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் 2 பேரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அங்கு திரண்டனர்.

    விபத்து குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் வாலிபர்கள் பலியானது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பலியான ஜிம் ரெஜினால்டு,கிரேசன் டேனியல் இருவரும் மோட் டார் சைக்கிளில் சென்று கால்வாயில் குளித்து விட்டு அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அந்த சாலையில் உள்ள சிறிய வளைவில் வரும்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதி இருப்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக லாரி டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த திலீப்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுமுறை யில் ஜிம் ரெஜினால்ட் ஊருக்கு வந்த நேரத்தில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன் புதூர் கார்மல் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர்.

    இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டி லிருந்து சவாரிக்கு செல்வ தாக மனைவி மேரி லதா விடம் கூறிவிட்டு சென் றார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை. இதை யடுத்து அவரது மனைவி மேரிலதா கிறிஸ்துராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    கிறிஸ்துராஜ் மாயமானது குறித்து மேரிலதா நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கிறிஸ்துராஜ் ஆசா ரிப்பள்ளம் இந்திரா நகர் பகுதியில் ரோட்டோரத்தில் ரத்த காயங்களுடன் கிடப் பதாக நேசமணி நகர் போலீ சுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    காயங்களுடன் கிடந்த கிறிஸ்துராஜை மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது .

    கிறிஸ்துராஜ் ரத்த காயங் களுடன் கிடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோவையும் போலீசார் மீட்டு நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கிருஷ்ணராஜை தாக்கியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சவாரிக்கு அழைத்து சென்று கிறிஸ்துராஜை யாராவது தாக்கினார்களா? முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா? வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. கிறிஸ்துராஜ் ரத்த காயங்களுடன் கிடந்த பகுதி யில் உள்ள சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
    • ஆரல்வாய்மொழி ரெயில் நிலையம் தற்பொழுது பெரிய ரெயில் நிலையமாக மாற்றப்பட்டு வருகின்றது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத் தலைவரும், ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் விடுத்துள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் கூட்ஸ் ஷெட் அமைத்துள்ளது. இங்கு வரும் ஒரு கூட்ஸ் ரயில்களில் மட்டும் சுமார் 4000 முதல் 6000 டன் வரை 52 வேகன்களில் உணவு தானிய பொருட்களும் இதர அத்தியாவசிய பொருட் களும் வருகின்றது.

    பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா போன்ற அனைத்து மாநிலங்களிலிருந்தும் இங்கு வருகின்றன.

    இந்த ரெயில்களில் வரும் சரக்குகள் சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலுள்ள உணவு தானிய கிடங்குகளில் குறிப் பாக நாகர்கோவிலில் உள்ள வெட்டூர்ணிமடம் மத்திய சேமிப்பு கிடங்கு, கோணம், திங்கள் சந்தை, காப்புக்காடு, உடையார்விளை, ஆரல்வாய் மொழி போன்ற இடங்களில் கொண்டு சென்று சேமித்து வைக்கின்றனர்.

    இந்த கூட்ஸ் ஷெட் கோட்டாரில் உள்ளமையால் லாரிகள் நகரினுள் செல்வ தால் நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இந்த போக்குவரத்து நெரி சலை தவிர்க்க ஆரல்வாய் மொழி ரெயில் நிலையம் தற்பொழுது பெரிய ரெயில் நிலையமாக மாற்றப்பட்டு வருகின்றது. அதன் மிக அருகே 4 வழிச்சாலையும் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் புதிய கூட்ஸ் ஷெட்டை மாற்றி அமைப்பதன் மூலம் நாகர்கோவில் நகரில் தற்பொழுதுள்ள போக்கு வரத்து நெரிசல் மிகவும் குறையும்.

    மேலும் நாகர்கோவில் கூட்ஸ் ஷெட் வேறு இடத்திற்கு மாற்றியமைக்கும் பொழுது அந்த கூட்ஸ் ஷெட் இடத்தில் புதிதாக ரயில்கள் நிறுத்துவதற்கான கூடுதல் ஸ்டேபிலிங் லைன் கூடுதல் அமைக்கலாம். இதனால் சந்திப்பு ரயில் நிலையத்தில் வரும் அனைத்து ெரயில்களும் நிறுத்த போதிய இட வசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஆதலால் மேற்படி கூட்ஸ் ஷெட்டை உடனடியாக ஆரல்வாய்மொழி அல்லது டவுண் ரயில் நிலையத்திற்கு மாற்றிட உரிய நடவ டிக்கை எடுக்குமாறு வேண்டு கிறோம் என தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செல்போனை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்
    • கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை மேற் கொண்டனர். கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தூத்துக் குடியில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு டெல்லி யில் இருந்து வந்த என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையிலான குழுவினர் சென்றனர். அப்போது காஜா முகைதீன் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் வசித்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையில் 3 பேர் இன்று காலை நாகர்கோ விலுக்கு வந்தனர். அவர் கள் நாகர்கோவில் இசங்கன் விளையில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு சென்ற னர். வீட்டில் இருந்த காஜா முகைதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பகல் 12 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் காஜா முகைதீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றனர்.

    • 500 கிலோ அரிசி பறிமுதல்
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமை யிலான குழுவினர் வெள்ளமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தெரிசனம் கோப்பு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.

    காரை சோதனை செய்த போது காரில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரில் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தேரேக்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த அன்சார் என்பது தெரியவந்தது.போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்சாரிடம் விசாரணை நடத்திய போது ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×