search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர்ந்து"

    • திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    • பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிறைந்தன. அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம் பழத்துறையாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அந்த அணைகளுக்கு வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.

    இதனால் திற்பரப்பு அருவி, மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நகர் பகுதிகளில் மழை சற்று குறைந்தது. ஆனால் மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அடையாமடையில் 58 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி அணை பகுதியில் 42.4 மில்லி மீட்டரும், புத்தன் அணை பகுதியில் 42 மில்லி மீட்டரும் பெய்தது.

    இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்டபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 581 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 220 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

    வழக்கமாக பேச்சிப்பாறை அணையில் 42 அடியும், பெருஞ்சாணி அணையில் 72 அடியும் தண்ணீர் எட்டப்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது அந்த அளவை அணைகள் நெருங்கி வருவதால் நீர் மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    தொடர்மழையின் கார ணமாக திற்பரப்பு அருவியி லும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ஆனந்தமாக நீராட ஏரா ளமானோர் குவிந்துள்ள னர். சனி, ஞாயிறு மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வந்துள்ளதால் திற்ப ரப்பு அருவி, தடாகம், பூங்கா போன்றவை களை கட்டி காணப்பட்டது.மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடையாமடை 58, பெருஞ்சாணி 42.4, புத்தன்அணை 42, பாலமோர் 41.4, திற்பரப்பு 37.5, சுருளகோடு 36.4, சிற்றாறு 1-35.2, களியல் 29.6, தக்கலை 26.3, கோழிப்போர்விளை 23.4, சிற்றாறு-2 (சிவலோகம்) 22.4, நாகர்கோவில் 21.4, குழித்துறை 18.8, முள்ளங் கினாவிளை 18.6, பூதப் பாண்டி 15.2, மாம்பழத்து றையாறு 12, முக்கடல் அணை 8.6, ஆணைக்கிடங்கு 8.4, கன்னிமார் 6.2, இரணி யல் 6.2, பேச்சிப்பாறை 4, குளச்சல் 3.

    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது.
    • சுருளோட்டில் கடந்த 3 நாட்களாகவே கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகிறது.

    நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னிமார், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது. சுருளோட்டில் கடந்த 3 நாட்களாகவே கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்றும் அங்கு அதிகபட்சமாக 53.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 16.2, பெருஞ்சாணி 43, சிற்றாறு 1-5, பூதப்பாண்டி 17.6, கன்னிமார் 12.8, நாகர்கோவில் 3, சுருளோடு 53.6, தக்கலை 2.2, பாலமோர் 35.6, முள்ளங்கினாவிளை 52, அடையாமடை 2.2, முக்கடல் 11.6.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 38.22 அடியாக இருந்தது. அணைக்கு 220 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. அணைக்கு 255 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • இன்னொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை
    • குடிபோதையால் குடும்பமே சீரழிந்த அவலம்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே பரசேரி ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 48) எலக்ட்ரீசியன். இவரது மனைவி அனிதா (35) இவர்களுக்கு தன்ஷிகா (11), அஸ்மிதா (9) என்ற மகள்கள் உள்ளனர். இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

    நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக் காததால் அனிதா அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சென்று வந்தார். ஆனால் அனிதா வேலைக்கு செல்வது நாகராஜனுக்கு பிடிக்கவில்லை. நேற்று வீட்டிலிருந்த அனிதாவை வேலைக்கு செல்ல வேண் டாம் என்று நாகராஜன் கூறினார். ஆனால் அனிதா வேலைக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நாகராஜன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகள் கள் தன்ஷிகா, அஸ்மிதா இருவர் மீதும் தீ வைத்தார்.அவரும் உடலில் மண்எண் ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடல் கருகிய 2 குழந்தைகளையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான நாகராஜன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த மகள் தன்சிகா பரிதாபமாக இறந்தார்.

    அஸ்மிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இருப்பினும் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருகிறார்கள். பலியான தன்ஷிகாவின் உடல் பிரேத பரிசோ தனைக்கு பிறகு இன்று உறவினரிடம் ஒப்படைக்கப் படுகிறது.

    தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று மகளின் உடலையும் அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து இரணி யல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணை யில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகரா றில் ஈடுபட்டதுடன் வீட்டில் இருந்த பொருட்களை விற்று குடிப்பதை வாடிக்கை யாக வைத்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே பிரச் சினை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் தான் அனிதா குடும்ப செலவு களை சமாளிக்க பக்கத்தில் உள்ள பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று அனிதா வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் குழந்தைகள் மீது நாகராஜன் தீவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    குடிபோதையில் நிதானம் இழந்து நாகராஜன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கதி யாகி உள்ளது அந்த பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    ஈரோடு:

    கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சபையின் 2021 -2022-ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுகள் நிதிஅறிக்கை ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது.

    கீழ்பவானி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ந்து நடைபெற வில்லை. இதனால் கீழ்பவானி ஊஞ்சலூர் பகிர்மான கால்வாயில் பாசனம் பெறும் எம் 8 ஏ பாசன சபையிலுள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

    எனவே சீரமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையையே பாதுகாக்கும் வகையில் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு உரிமை பாதுகாப்பு நடைபெறும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×