search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பினராய் விஜயன்"

    • ஸ்வப்னா சுரேஷ்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியது உண்மை.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைதானவர் ஸ்வப்னா சுரேஷ்.

    இவருக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஸ்வப்னா சுரேசுக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க் நிறுவனத்தில் வேலை கிடைத்தது எப்படி? என்பது பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் கேரள சட்டசபையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதற்கு ஆளும் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததோடு, ஸ்வப்னா சுரேசுக்கும், முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறினர்.

    பினராய் விஜயனும் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதற்கு பதில் அளித்து ஸ்வப்னா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியது உண்மை. இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உதவி செய்தார்.

    அதன்பின்புதான் எனக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க்கில் வேலை கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார். ஸ்வப்னா சுரேசின் பேட்டியை தொடர்ந்து கேரளாவில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

    நாகர்கோவில்,பிப்.26-

    நாகர்கோவிலில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு விழா மாநாடு வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

    இந்த மாநாடு குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத் திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில்அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    இந்திய துணை கண்டத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சமூக நீதி போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு முதல் திருவி தாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கி யது. அதன்பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகை யிலும் தோள் சீலை மாநாடு வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடக்கிறது.

    இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். மேலும் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்தரசு மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலை வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மறுநாள் 7-ந்தேதி காலை மாநகராட்சி கட்டி டத்தையும், ஒழுகின சேரியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முன்னதாக 6-ந் தேதி இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் நாகராஜா கோவில் மைதானத்தை அமைச்சர் மனோ தங்க ராஜ், மேயர் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    2-வது முறையாக பினராய் விஜயன் முதல்-மந்திரியாக உள்ளார். கேரளாவில் பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் முதல்-மந்திரி பினராய் விஜயன் செல்லும் பாதையில் கறுப்பு சட்டை அணிந்து செல்லும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் கோழிக்கோட்டில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவிற்கு கறுப்பு சட்டை மற்றும் கறுப்பு கலரில் மாஸ்க் அணிந்து சென்ற மாணவர்களை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கேரளாவில் முதல்-மந்திரி செல்லும் பாதையில் கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    • விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சபரிமலைக்கு சென்ற 11 பக்தர்கள் வந்த கார் குமுளி அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சபரிமலை வந்த ஐயப்ப பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அவர் விபத்தில் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வந்த தமிழக பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்து மனம் வருந்தினேன். உறவினர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுபோல கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெக்னோ பார்க்கில் கடந்த 1½ ஆண்டில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 301 சதுர அடியில் 78 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
    • கேரளாவின் தொழிற் வளர்ச்சிக்கும், வருவாய்க்கும் டெக்னோ பார்க் பெரும் பங்கு வகிக்கிறது.

    கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் சமூக வலைதளத்தில் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கிடைத்த வருவாய் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் டெக்னோபார்க்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் 2021-22ம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் ரூ.9775 கோடி கிடைத்துள்ளது.

    இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகமாகும். மேலும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியை துல்லியமாக செலுத்தியதற்காக இந்திய அரசின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

    கேரளாவில் டெக்னோ பார்க்கில் கடந்த 1½ ஆண்டில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 301 சதுர அடியில் 78 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 703 சதுர அடியில் 37 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுமானங்கள் காரணமாக டெக்னோ பார்க் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    கேரளாவின் தொழிற் வளர்ச்சிக்கும், வருவாய்க்கும் டெக்னோ பார்க் பெரும் பங்கு வகிக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×