search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் விஜய்"

    • விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • விஜய்யின் கருத்து இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கே.எஸ்.அழகிரி மேலும் கூறியிருப்பதாவது:-

    மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகவும் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகவும் விஜய் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என அவர் வலியுறுத்தியிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு.
    • முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், " நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

    நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது:-

    சினிமாவில் இருந்து விஜய் விலக வேண்டாம். எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்படத் துறையில் இருந்தார். எனவே நீங்களும் சினிமாவில் தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் விஜய் கனிமொழி எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
    • மற்றபடி வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

    சென்னை:

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கடந்த 5-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.

    இருந்தாலும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் கனிமொழி எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர். விஜய் போனில் பேசியது குறித்து கனிமொழி எம்.பி. கூறுகையில், எப்போதும் போல் அவர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அவ்வளவு தான். மற்றபடி வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. குறிப்பாக அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.



    தூத்துக்குடியில் மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதால் வேறு பணிகளில் இன்னும் கவனம் செலுத்தவில்லை என்றார்.

    வெள்ள நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி கேட்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்திக்கும் தேதி முடிவாகி விட்டதா? என்ற கேள்விக்கு அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

    • இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என தகவல்.
    • படத்தின் போஸ்ட்டரை நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில், லியோ படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இன்று வெளியிட்ட தெலுங்கு போஸ்டரில் "அமைதியாக இருந்து சண்டையை தவிருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டரை படக்குழு எக்ஸ் பக்கத்திலும், நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

    • சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடினார்.
    • ஒரு வார்த்தையில் கேட்ட கேள்விக்கு இந்திய வீரர் பதிலளித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரகானே. இவர் இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியின் இடம் பிடித்தார்.

    இந்நிலையில் யூடிப்பர் மதன் கவுரியுடன் வீடியோ காலில் பேசிய ரகானே, தமிழ் நடிகரான விஜய் தனக்கு பிடித்த நடிகர் என தெரிவித்துள்ளார். மதன் கவுரி கேட்ட சில கேள்விகள் ரகனே தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.

    ஒரு வார்த்தையில் மதன் கேட்ட கேள்விக்கு ரகானே பேசியது பின்வருமாறு:-

    மதன்: வணக்கம் ப்ரோ நல்ல இருக்கீன்களா

    ரகானே : நல்லா இருக்கேன். சாப்பிடீங்களா? (என தமிழில் பதில் அளித்தார்)

    மதன்: சிஎஸ்கே

    ரகானே: குடும்பம்

    மதன்: டோனி

    ரகானே: தல

    மதன்: ஜடேஜா

    ரகானே: நல்ல நண்பன் (என தமிழில் பதில் அளித்தார்)

    மதன்: தோசை

    ரகானே: ருசி

    மதன்: தமிழ் நடிகர் பற்றி தெரியுமா?

    ரகானே: ஆமா தெரியும்

    மதன்: யார் உங்களுக்கு பிடித்த நடிகர்

    ரகானே: விஜய்

    இவ்வாறு அவர் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • திருமாவளவன் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வாழ்த்து.
    • வாழ்த்து கூறிய நடிகர் விஜய்-க்கு திருமாவளவன் டுவீட் மூலம் பதில்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வி.கே. சசிகலா மற்றும் பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    அந்த வகையில், திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், திருமாவளவனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதற்கு திருமாவளவன் தனது X (முன்பு டுவிட்டர்) பதிவில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் கூறி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. 

    • விஜய்யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • இதனை நடிகர் விஜய் ஆன்லைன் வாயிலாகாக செலுத்தியுள்ளார்.

    நடிகர் விஜய் நேற்று பனையூர் விஜய் மக்கள் நல இயக்க அலுவகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதற்காக நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அப்போது அக்கரை பகுதி சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது. 



    இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான ரூ.500 அபராத தொகையை நடிகர் விஜய், ஆன்லைன் மூலம் செலுத்தினார்.

    • விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.
    • சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    நடிகர் விஜய் சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

    இதற்கிடையே, நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்தநிலையில், போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    ஆயூஸ்மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

    பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்குவதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.

    அடுத்த முதலமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம்.

    நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நடிகர் விஜயை பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது.
    • படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார்.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

    இதுபற்றி விஜய் வெளிப்படையாக எதுவும் கூறாமல் இருந்து வந்தார். ஆனால் இப்போது அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    இதற்கான பிள்ளையார் சுழி கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் போடப்பட்டது. அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் பிறந்த நாளை அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடினார்கள்.

    அதை தொடர்ந்து இப்தார் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். இவையெல்லாம் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் என்பதை விஜய் மக்கள் இயக்கத்தினர் உறுதிப்படுத்தினார்கள்.

    இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சர்வே நடத்தி வருகிறார்கள். இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது. அவர்களுக்கு தனி விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார். நீங்கள் வேட்பாளர் என்றால் உங்களுக்கு மாற்று யார்?

    தொகுதியில் கட்சி வாரியாக இருக்கும் வாக்கு வங்கி நிலவரம்? உங்களால் வெற்றி பெற முடியும் என்றால் என்ன காரணம்? தொகுதியில் இருக்கும் பூத்களின் எண்ணிக்கை, வார்டு விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் இந்த விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று சேகரிப்பார்கள். அதன் பிறகு மாவட்ட வாரியாக நேரில் அழைத்து விஜய் விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.

    இப்போதைய நிலையில் அடுத்த ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதா? அல்லது 2026-ல் நடத்தப்படும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

    விஜய்யின் இந்த அறிவிப்பு மூலம் அவர் அரசியலில் குதிக்கப் போவது உறுதியாகிவிட்டது.

    • அவரோட வெற்றியால் நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது.
    • அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன்.

    நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது. 

    விழாவில் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் மேடையில் ரஞ்சிதமே பாடலை பாட, அவருடன் ரசிகர்களும் கூட சேர்ந்து பாடினார்கள். பின்னர் பேசிய விஜய் கூறியுள்ளதாவது: 

    1990 களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளரா வந்தாரு. கொஞ்ச நாள்ல அவரு எனக்கு சீரியசான போட்டியாளரா ஆனாரு. அவரோட வெற்றியால நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது. அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன். எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை.

    அந்த போட்டியாளர் பேரு ஜோசப் விஜய். உங்க கூட நீங்க போட்டி போடுங்க. தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும். ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும். இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்தார்.

    • அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது இன்று ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது.
    • அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது.

    இதற்கிடையே, விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆகவே அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மார்ச் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என வணிகவரித்துறை கூறியது. இது குறித்து மேலும் சில விபரங்களைக் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

    ×