search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி கைது"

    • முன்னாள் காதலியிடம் ஆசை வார்த்தைகள் பேசி கொத்தனார் அவரை கற்பழித்தார்.
    • திருமணம் செய்த மறுத்தவரை புகாரின்பேரில் போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 12 வயதில் ஒரு மகன், 7 வயதில் ஒரு மகள் உள்ளனர். குணசேகரன் திருமணத்துக்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பிறகும் முன்னாள் காதலியை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.

    33 வயதான அந்த பெண்ணுக்கு திருமணமாக வில்லை. இந்நிலையில் முன்னாள் காதலியிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவரை கற்பழித்தார். இதில் 5 மாத கர்ப்பிணியானார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவர் கேட்டபோது மறுத்து விட்டார். இதனால் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி காமிரா காட்டிக் கொடுத்தது
    • முதற்கட்ட விசாரணையில் 7 பவுன் நகைகள் திருடியதாக தெரிய வந்துள்ளது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள மூன்று முக்கு பகுதி பனவிளையை சேர்ந்தவர் ஜெபநிசாந்த். இவர் தூத்துக்குடியில் ஒரு மீன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    ஜெபநிசாந்த், சமீபத்தில் புதிதாக வீடு கட்டி மனைவி ரினி வளர் மற்றும் குழந்தையுடன் குடி புகுந்தார். இந்த நிலையில் புதிய வீட்டில் தரை பாலீஷ் போடும் பணி நடந்துள்ளது. இந்த பணியில் மார்த்தாண்டம் சிராயன்குழி பகுதியை சேர்ந்த ஏசாயா (54) ஈடுபட்டு உள்ளார்.

    அப்போது அவர், வீட்டு சாவியில் ஒன்றை திருடி உள்ளார். பின்னர் அதனை வைத்து, ரினிவளர் குழந்தையை பள்ளிக்கு கொண்டு விட செல்லும் நேரங்களில் வீட்டை திறந்து பல முறை நகைகளை திருடியுள்ளார்.இதுபற்றி யாருக்கும் தெரியவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெப நிசாந்த் பீரோவில் நகை, பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சி.சி.டி.வி. கேமிராவையும் ஆய்வு செய்தார். அப்போது திருட்டு நடந்ததை உறுதி செய்துள்ளார்.

    தொடர்ந்து ரகசியமாக வீட்டு கேமரா பதிவை தனது செல்போனில் இணைப்பு செய்து வைத்துள்ளார். நேற்று மாலை வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், ஏசாயா மீண்டும் சாவி போட்டு திறந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இது ஜெப நிசாந்த் செல்லுக்கு அலர்ட் மெசெஜ் மூலம் தெரிய வந்தது.

    உடனே அவர் அங்கிருந்து தகவல் தெரிவித்ததன்பேரில் அக்கம் பக்கத்தினர் சுற்றி வளைத்து ஏசாயாவை பிடித்தனர். இதையடுத்து புதுக்கடை போலீசில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது, நகைகள், பணத்தை பல முறை திருடியதை ஏசாயா ஒப்புக் கொண்டார். முதற்கட்ட விசாரணையில் 7 பவுன் நகைகள் திருடியதாக தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏசாயாவை கைது செய்தனர்.

    • மும்பை நகரில் 100 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
    • வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    மும்பை:

    மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

    அதில் பேசிய நபர் மும்பை நகரில் 100 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மாநகரின் முக்கிய இடங்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    ஆனால் சோதனையில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    தொடர்ந்து மிரட்டல் வந்த தொலைபேசி எண் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மால்வாணி பகுதியை சேர்ந்த ருக்சார் அகமது (வயது 43) என்பது தெரியவந்தது. தையல் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த 5 மாதங்களில் மட்டும் அவர் இதேபோல மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 79 முறை போன் செய்திருப்பதும் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    • பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர்.
    • குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. 2-வது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மூர்த்தியின் முதல் குழந்தை சக்திவேல் (வயது 3) தனது தாயை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை தனது மனைவி குள்ளம்மாள், மகள் சவுந்தர்யா (6) மற்றும் மூர்த்தியின் மகன் சக்திவேல் ஆகியோருடன் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில கடந்த 8-ந்தேதி இரவு 8 மணியளவில் குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரை காணவில்லை.

    இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்பேரில் காணாமல் போன 2 குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    விசாரணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காணாமல் போன குழந்தைகளை அழைத்து செல்வதை போல் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடைபெற்ற தீவிர விசாரணையில் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் காஞ்சிபுரம் நகரத்தில் உளள பல்வேறு தெருக்கள், சந்துகள் வழியாக வாலாஜாபாத் தாலுகா அஞ்சூர் கிராமத்திற்கு அழைத்து சென்றது கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் துரிதமாக அஞ்சூர் கிராமத்திற்கு சென்று அங்கு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.

    குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன்(60) கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் தப்பியோடிய லட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமம் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது53). பழ வியாபாரி. இவர் கடந்த 7-ந்தேதி அதிகாலை பழம் வாங்க கோயம்பேடு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். இந்த நிலையில் அய்யம்பெருமாள் வீட்டின் அருகே உள்ள ஒரு குடோன் வாசலில் இறந்து கிடந்தார். திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்மீரான் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரது விலா எலும்பு முறிந்திருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அங்கு தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில் ஜா(45) என்பவர் அய்யம்பெருமாளை கொசுவலை தகராறில் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அனில்ஜாவை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று அதிகாலை அய்யம் பெருமாள் பழம் வாங்க கோயம்பேடு செல்லாமல் அனில்ஜா பயன்படுத்தும் கொசுவலையை எடுத்து போர்த்திக்கொண்டு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியில் தூங்கி உள்ளார். இதனை கவனித்த அனில்ஜா கொசுவலையை எடுத்தது தொடர்பாக அய்யம் பெருமாளிடம் மோதலில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் அவரை லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும் தெரிகிறது. இதில் அய்யம்பெருமாள் இறந்து போனதால் பயந்து போன அனில்ஜா எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அய்யம்பெருமாள் அடிக்கடி மதுபோதையில் இருப்பதால் முதலில் அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார்.
    • இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த முத்துகாப்பட்டி சேரமாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    கத்திக்குத்து

    இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார். தனது குழந்தைகளை அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பெரியசாமி தங்கி உள்ள வீட்டிற்கு வனிதாவின் சகோதரர் செந்தில்குமரன் (40) சென்று குடும்ப பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இதில் இருவருக்கும் இடைேய திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது செந்தில்குமர னின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கைது

    இதையடுத்து செந்தில்குமரன் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்னர்.

    இந்த கத்திகுத்து சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செந்தில்குமரனின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்னர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த முத்துகாப்பட்டி சேரமாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார். தனது குழந்தைகளை அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பெரியசாமி தங்கி உள்ள வீட்டிற்கு வனிதாவின் சகோதரர் செந்தில்குமரன் (40) சென்று குடும்ப பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இதில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது செந்தில்குமரனின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதையடுத்து செந்தில்குமரன் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்னர்.

    இந்த கத்திகுத்து சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நித்தியானந்தம் (36) இவரது வீட்டில் தாதகாப்பட்டி மூனாங்கரடு, அம்பாள் ஏரி ரோடு 8-வது கிராஸ்பகுதியைச் சேர்ந்த மணி (24), குமார், சம்பத்குமார், சுரேஷ், ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
    • பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மற்றும் 1/2 பவுன் தங்க தோடு ஆகியவை காணாமல் போனது கண்டு நித்தியானந்தம் அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (36) இவரது வீட்டில் தாதகாப்பட்டி மூனாங்கரடு, அம்பாள் ஏரி ரோடு 8-வது கிராஸ்பகுதியைச் சேர்ந்த மணி (24), குமார், சம்பத்குமார், சுரேஷ், ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

    அப்போது வீட்டின் பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மற்றும் 1/2 பவுன் தங்க தோடு ஆகியவை காணாமல் போனது கண்டு நித்தியானந்தம் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நித்தியானந்தம் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நகைகளை திருடியதாக மணியை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மது போதையில் ஏற்பட்ட தகராறு நண்பரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கிஷோர்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் புரோட்டாத்தூர், ஈஸ்வர ரெட்டி நகரை சேர்ந்தவர் ஜெய கிஷோர் குமார். இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவரது நெருங்கிய நண்பர் சதீஷ்குமார் (வயது 42). இருவரும் கடந்த மாதம் ஜெய கிஷோர் குமார் வீட்டில் மது அருந்தினர். மது போதை தலைக்கு ஏறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜெய கிஷோர்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து வீட்டின் பின்புறத்தில் சுவரையொட்டி பள்ளம் தோண்டி ஜெய கிருஷ்ணகுமார் உடலை புதைத்தார்.

    வீட்டில் இருந்த ரத்த கரைகளை ரசாயனங்களை ஊற்றி சுத்தம் செய்தார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் வேலைக்கு சென்று விட்டார்.

    வீட்டை விட்டு வெளியே சென்ற கணவர் மீண்டும் வீடு திரும்பாததால் இது குறித்து புரோட்டாத்தூர் போலீசில் சதீஷ்குமாரின் மனைவி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மது போதையில் இருந்த ஜெய கிஷோர்குமார் சதீஷ்குமாரை கொலை செய்ததாக தனது நண்பர்களிடம் உளறி கொட்டினார். இதனை கேட்ட அவரின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் ஜெய கிஷோர்குமாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு நண்பரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். புதைக்கப்பட்ட சதீஷ்குமார் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கிஷோர்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • கொலை தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கடந்த சில மாதங்களாகவே குடித்துவிட்டு ஒருமையில் பேசி, தனக்கு தேவையானவைகளை கடைகளில் வாங்கி வர சொல்லியும் மிரட்டினான்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூலாங்கிணரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 77). இவர் கடந்த 12-ந் தேதி உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் முக்கோணம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் முன்பு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுப்பிரமணியத்தை கொலை செய்ததாக பூலாங்கிணர் பகுதியை சேர்ந்த தாமோதரன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தாமோதரன் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நானும் சுப்பிரமணியமும், சில வருடங்களுக்கு முன்பு உடுமலையில் உள்ள தனியார் மில்லில் ஒன்றாக வேலை செய்தோம். அப்போது சுப்பிரமணியம் என்னை நல்ல முறையில் மரியாதையாக பேசி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே குடித்துவிட்டு ஒருமையில் பேசி, தனக்கு தேவையானவைகளை கடைகளில் வாங்கி வர சொல்லியும் மிரட்டினான்.

    இதனால் கோபமடைந்த நான் சுப்பிரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியம் முக்கோணத்தில் உள்ள ஒரு ஓட்டலின் முன்பு அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த கல்லை எடுத்து அவர் தலை மீது போட்டு கொலை செய்தேன் என்றார்.

    கைதான தாமோதரனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் அன்னூர் போலீசில் புகார் செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    கோவை:

    கோவை அன்னூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஸ் என்ற காந்தி (வயது26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் கடந்த 11-ந் தேதி ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் 12-ந்தேதி காந்திபுரத்தில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சிறுமியை கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். அங்கு வைத்து காந்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் அன்னூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சிறுமி கேரள மாநிலத்தில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் காந்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்த காந்தியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக விவேகானந்தன் மாணவியை சீரழித்து வந்து உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன (52). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பிரிந்தார்.

    இந்தநிலையில் ஓரிக்கை அரசு நகர் பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் ஒருவருடன் விவேகானந்தனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இளம்பெண்ணுடன் விவேகானந்தன் கணவன்-மனைவி போல் வாழ்ந்தார். அவர்களுடன் அந்த இளம்பெண்ணின் தங்கையும் தங்கி இருந்தார். அவர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே விவேகானந்தன் கள்ளக்காதலியின் தங்கையான பிளஸ்-1 மாணவியையும் மிரட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

    கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக அவர் மாணவியை சீரழித்து வந்து உள்ளார். பயந்து போன மாணவி இதுபற்றி தனது அக்காளிடம் சொல்லவில்லை. இதனை பயன்படுத்தி விவேகானந்தன் தனது அத்துமீறலை தொடர்ந்து உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேகானந்தன் தனது தங்கையையும் சீரழித்து இருப்பது அறிந்து இளம்பெண் அதிர்ந்தார். இதுகுறித்து அவர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×