search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் கொலை"

    • தந்தை- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சுல்தான்பேட்டை அருகே உள்ள செந்தேரிபுதூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 90). கூலித் தொழிலாளி. இவரது மகன் முருகேஷ் (50). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். அவரை கோபால்சாமி பராமரித்து வந்தார்.

    தந்தை- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது கோபால்சாமிக்கும், அவரது மகன் முருகேசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேஷ் தனது தந்தை கோபால்சாமியை வீட்டில் இருந்த அரிவாள் மனையால் வெட்டி கொலை செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் முருகேஷ் எதுவும் தெரியாதது போல வீட்டில் படுத்து தூங்கினார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோபால்சாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகேஷ் அவரது தந்தையை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட கோபால்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்துள்ள கே.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் (வயது60). இவரும், அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி மகன் மகேந்திரன் (32) என்பவரும் நேற்று இரவு அப்பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

    அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பன்னீர் அருகில் உள்ள மளிகை கடையில் வைத்து இருந்த மண்எண்ணையை எடுத்து மகேந்திரனின் பைக்கில் ஊற்றி தீ வைத்தார்.

    இதனால் 2 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் கோபமடைந்த மகேந்திரன் கல்லை எடுத்து பன்னீர் தலையில் போட்டு கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் பன்னீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    • ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
    • பிரேத பரிசோதனை அறிக்கையில் முதியவர் சுப்பிரமணி வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    திருவள்ளூர்:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்காவாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மூலம் ஒரு மகனும், 2-வது மனைவி மூலம் ஒரு மகனும் உள்ளனர்.

    சுப்பிரமணி 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு வீட்டின் வெளியே சென்ற போது சுப்பிரமணி தவறி விழுந்து இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் முதியவர் சுப்பிரமணி வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து 2வது மனைவியின் மகன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பவத்தன்று இரவு சுப்பிரமணிக்கும், 2-வது மனைவி மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம கும்பல் துரையை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
    • முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலை கந்தன் பூங்கா அங்கன்வாடி மையப் பகுதியில் வசித்து வந்தவர் துரை(வயது62). இவர் சாலை ஓரங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து சாலையோரம் வாழ்ந்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியில் துரை அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிவகாஞ்சி போலீசுக்கு தகவல்தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து துரையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அருகில் ரத்த கரையும், பீர்பாட்டில் உடைந்தும் கிடந்தது. மர்ம கும்பல் துரையை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. மேலும் அங்கு உணவு பொட்டலமும் சிதறி கிடந்தது. துரை பழைய பொருட்களை விற்று பணம் வைத்து இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த போதை கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கடந்த சில மாதங்களாகவே குடித்துவிட்டு ஒருமையில் பேசி, தனக்கு தேவையானவைகளை கடைகளில் வாங்கி வர சொல்லியும் மிரட்டினான்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூலாங்கிணரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 77). இவர் கடந்த 12-ந் தேதி உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் முக்கோணம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் முன்பு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுப்பிரமணியத்தை கொலை செய்ததாக பூலாங்கிணர் பகுதியை சேர்ந்த தாமோதரன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தாமோதரன் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நானும் சுப்பிரமணியமும், சில வருடங்களுக்கு முன்பு உடுமலையில் உள்ள தனியார் மில்லில் ஒன்றாக வேலை செய்தோம். அப்போது சுப்பிரமணியம் என்னை நல்ல முறையில் மரியாதையாக பேசி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே குடித்துவிட்டு ஒருமையில் பேசி, தனக்கு தேவையானவைகளை கடைகளில் வாங்கி வர சொல்லியும் மிரட்டினான்.

    இதனால் கோபமடைந்த நான் சுப்பிரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியம் முக்கோணத்தில் உள்ள ஒரு ஓட்டலின் முன்பு அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த கல்லை எடுத்து அவர் தலை மீது போட்டு கொலை செய்தேன் என்றார்.

    கைதான தாமோதரனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூலாங்கிணரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 77).சம்பவத்தன்று இரவு உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் முக்கோணம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் முன்பு சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து பொது மக்கள் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் கண்ணா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் சுப்பிரமணி தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு மர்ம நபர் கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்த மர்மநபர் யார்? எதற்காக கொலை செய்தார் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கொலையாளியை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன், உடுமலை டி.எஸ்.பி., சுகுமார் உத்தரவின் பேரில் உடுமலை இன்ஸ்பெக்டர் ராஜ் கண்ணா, மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் ராேஜஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடல்கன்னிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
    • தப்பி ஓடிய கடல் கன்னியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகரின் முக்கிய பகுதியாக வண்ணார்பேட்டை விளங்கி வருங்கிறது. மதுரை, சங்கரன்கோவில், ராஜபாளையம் மார்க்கமாக வரும் பஸ்கள் வண்ணார்பேட்டை நிறுத்தத்தில் நின்று செல்கிறது.

    இந்த பஸ் நிறுத்தம் அருகே முதியவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, முதியவரின் பல் மற்றும் முகத்தின் பல்வேறு பகுதிகளில் காயம் இருந்தது கண்டறியப்பட்டது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், பஸ் நிறுத்தத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று இடம்பெற்று இருந்தது. ராஜபாளையம், தச்சநல்லூர் பகுதி வழியாக நெல்லை வண்ணார்பேட்டை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்றில் இருந்து உயிரிழந்த முதியவரை ஒரு நபர் இறக்கி கழுத்தில் கை வைத்து தரதரவென்று இழுத்து சென்ற காட்சிகளும், அதனைத் தொடர்ந்து 2 வாகனங்களுக்கு பின்னால் நின்றுகொண்டு முதியவரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்யும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    இதனை தொடர்ந்து இந்த சம்பவம் கொலை என்பதை உறுதி செய்த போலீசார் பஸ்சில் வந்த நபர் யார்? அந்த நபருக்கும் முதியவருக்கும் என்ன தொடர்பு? எங்கிருந்து இந்த முதியவர் அழைத்து வரப்பட்டார்? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தினர்.

    பல இடங்களில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட முதியவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 74) என்பது தெரியவந்தது. அவரை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் அவருடைய மகன் கடல்கன்னி என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

    கடல்கன்னிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

    உயிரிழந்த மாரி முத்துவிற்கு ரத்தசோகை குறைபாடு இருந்த நிலையில் உடல் நலம் குன்றிய சூழலில் கடந்த சில நாட்களாக ராஜபாளையம் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நெல்லைக்கு அழைத்து செல்ல கூறிய நிலையில் நேற்று வீட்டில் இருந்து நெல்லை அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது.

    மேலும் பஸ்சில் இருந்து கீழே தந்தையை இறக்கி அவரை தரதரவென இழுத்துச் சென்று கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த கைப்பையும் பிடுங்கிக் கொண்டு எந்தவித பதட்டமும் இன்றி அவரது மகன் கடல்கன்னி சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

    மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பெற்ற மகனே, தந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்த காட்சிகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தப்பி ஓடிய கடல் கன்னியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கேரளாவிற்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற நிலையில் ஒரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.

    • தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.
    • மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது65). இவரது சகோதரர்கள் முருகேசன், முனுசாமி. அண்ணன்-தம்பிகள் 3பேரும் அருகருகே குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

    அங்கப்பன் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.

    நேற்று காலை அங்கப்பனின் மகள் தண்ணீர் எடுக்க வீட்டை விட்டு வெளியே சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக முருகேசனின் மருமகள் வனிதாவின் மீது கைபட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை கண்ட அங்கப்பன், அவரது மனைவி கற்பகம் ஆகிய இருவரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வனிதா, அவரது கணவர் ரவிகுமார் மற்றும் வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகியோர் அங்கப்பனிடம் மோதலில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அங்கப்பன் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக அங்கப்பனின் சகோதரரான முருகேசனின் மகன் ரவிகுமார் அவரது மனைவி வனிதா, வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அங்கப்பன் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் இடையே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது உள்ளிட்ட சிறு சிறு பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    தற்போது தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.

    • கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சிறுமிகள் 13 மற்றும் 16 வயதினரே ஆவர்.
    • 8 சிறுமிகளையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதியவரை 8 சிறுமிகள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது.

    கொலை செய்த சிறுமிகளுக்கும் இறந்த முதியவருக்கும் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    டொரன்டோ ரெயில் நிலையம் அருகே முதியவரும், சிறுமிகளும் சந்தித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி இறுதியில் சிறுமிகள் ஆத்திரத்தில் கத்தியால் அந்த 59 வயது முதியவரை குத்திக்கொலை செய்துள்ளனர்.

    கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சிறுமிகள் 13 மற்றும் 16 வயதினரே ஆவர். 8 சிறுமிகளையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மது வாங்கி வைத்திருந்த உதய்யிடம் கோபால் தனக்கும் மது தருமாறு கேட்டுள்ளார்.
    • உதய் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமார்நகர் 60 அடி ரோடு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனால் அவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் அப்பகுதியை சேர்ந்த கோபால் (வயது 30) என்பவருடன் சேர்ந்து குப்பைகளை அள்ளி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோபாலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவரின் பெயர் உதய் என போலீசாரிடம் கோபால் தெரிவித்தார்.

    உதய்யும், கோபாலும் குமார்நகர் பகுதியில் குப்பைகளை அள்ளி விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடித்து வந்துள்ளனர். நேற்று கோபாலுக்கு மது குடிக்க பணம் இல்லை.

    அப்போது மது வாங்கி வைத்திருந்த உதய்யிடம் கோபால் தனக்கும் மது தருமாறு கேட்டுள்ளார். ஆனால் உதய் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபால் அங்கு கல்லை எடுத்து உதய்யின் தலையில் போட்டுள்ளார். இதில் உதய் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கோபால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். ஆனால் போலீசார் விசாரணையில் சிக்கி கொண்டார். தொடர்ந்து கோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனீஸ்வரன் கோவிலை நிர்வாகிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
    • 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள பர்மா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது70). கட்டிட மேஸ்திரியான இவர் பொன்னேரி தச்சூர் சாலையில் சிற்றுண்டி வியாபாரமும் செய்து வந்தார்.

    இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று உள்ளனர். இதையடுத்து நேற்று மாலை சுப்பையா மட்டும் தனியாக தனது தள்ளுவண்டியில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மகும்பல் முதியவர் சுப்பையாவை சுற்றி வளைத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொலை கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சுப்பையா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு போராடிய சுப்பையாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கருப்பையா அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
    • கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவலை அடுத்த பச்சேரி கீழமடத்து தெருவை சேர்ந்தவர் கருப்பையா(வயது 62).

    இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருப்பையாவின் மனைவி தனது மகன் வீட்டில் தங்கி இருப்பதால் கருப்பையா மட்டும் பச்சேரியில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம்போல் வீட்டுக்குள் தூங்க சென்ற கருப்பையா, இன்று காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. அவரது வீட்டின் கதவு பூட்டிக்கிடந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது கருப்பையா படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனே அவர்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருப்பையா அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×