search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly murder"

    • தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.
    • மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது65). இவரது சகோதரர்கள் முருகேசன், முனுசாமி. அண்ணன்-தம்பிகள் 3பேரும் அருகருகே குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

    அங்கப்பன் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.

    நேற்று காலை அங்கப்பனின் மகள் தண்ணீர் எடுக்க வீட்டை விட்டு வெளியே சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக முருகேசனின் மருமகள் வனிதாவின் மீது கைபட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை கண்ட அங்கப்பன், அவரது மனைவி கற்பகம் ஆகிய இருவரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வனிதா, அவரது கணவர் ரவிகுமார் மற்றும் வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகியோர் அங்கப்பனிடம் மோதலில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அங்கப்பன் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக அங்கப்பனின் சகோதரரான முருகேசனின் மகன் ரவிகுமார் அவரது மனைவி வனிதா, வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அங்கப்பன் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் இடையே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது உள்ளிட்ட சிறு சிறு பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    தற்போது தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.

    சூலூர் அருகே சிறுவர்கள் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூலூர்:

    சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41 ). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா(31) என்ற மனைவியும்,7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எட்வின் (48) கட்டிட மேஸ்திரி. இவருக்கு3 மகன்கள் உள்ளனர். நேற்று எட்வினின் இளைய மகன், கிருஷ்ணகுமாரின் மகன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்பொழுது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கிருஷ்ணகுமாரின் மகன் தனது தாய் கல்பனாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கல்பனா அவரது தந்தை நாகராஜ் (56) ஆகியோர் எட்வினின் வீட்டுக்கு சென்று சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த எட்வின், அவரது மகன் பிரபாகர் (29) ஆகியோர் சேர்ந்து அங்கு இருந்த உருட்டு கட்டையால் நாகராஜன் தலையில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் பயந்த எட்வின் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இந்த தகவல் கிடைத்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு வந்தனர். பின்னர் இறந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து சோமனூர் பகுதியில் பதுங்கி இருந்த எட்வின், அவரது மகன் பிரபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலூர் அருகே தகராறில் முதியவரை கீழே தள்ளிவிட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே கெங்கம்பட்டியை அடுத்துள்ள கரையிபட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவர் நேற்று அங்குள்ள கலையரங்கம் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் மருதுபாண்டியனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

    அப்போது மருதுபாண்டியனின் தாத்தா சின்னகருப்பன் (வயது 70) அங்கு வந்து சண்டையை விலக்கி வைத்து சமரசமாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரை கீழே தள்ளி பிரச்சினை செய்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமரசம் செய்தனர்.

    கீழே விழுந்த சின்னகருப்பன் தலையில் ஊமைக்காயம் ஏற்பட்டது. இதை அறியாத அவர் வீட்டுக்குச் சென்று தூங்கினார்.

    இந்த நிலையில் இன்று காலை சின்ன கருப்பன் பிணமாக கிடந்தார். 3 வாலிபர்கள் கீழே தள்ளியதில் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது குறித்து மருதுபாண்டியன் கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதிகா, தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.

    ×