search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது
    X

    14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது

    • சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் அன்னூர் போலீசில் புகார் செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    கோவை:

    கோவை அன்னூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஸ் என்ற காந்தி (வயது26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் கடந்த 11-ந் தேதி ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் 12-ந்தேதி காந்திபுரத்தில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சிறுமியை கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். அங்கு வைத்து காந்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் அன்னூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சிறுமி கேரள மாநிலத்தில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் காந்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்த காந்தியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×