search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் நண்பனை கொலை செய்து வீட்டில் புதைத்த தொழிலாளி- போதையில் உளறி சிக்கினார்
    X

    ஆந்திராவில் நண்பனை கொலை செய்து வீட்டில் புதைத்த தொழிலாளி- போதையில் உளறி சிக்கினார்

    • மது போதையில் ஏற்பட்ட தகராறு நண்பரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கிஷோர்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் புரோட்டாத்தூர், ஈஸ்வர ரெட்டி நகரை சேர்ந்தவர் ஜெய கிஷோர் குமார். இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவரது நெருங்கிய நண்பர் சதீஷ்குமார் (வயது 42). இருவரும் கடந்த மாதம் ஜெய கிஷோர் குமார் வீட்டில் மது அருந்தினர். மது போதை தலைக்கு ஏறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜெய கிஷோர்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து வீட்டின் பின்புறத்தில் சுவரையொட்டி பள்ளம் தோண்டி ஜெய கிருஷ்ணகுமார் உடலை புதைத்தார்.

    வீட்டில் இருந்த ரத்த கரைகளை ரசாயனங்களை ஊற்றி சுத்தம் செய்தார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் வேலைக்கு சென்று விட்டார்.

    வீட்டை விட்டு வெளியே சென்ற கணவர் மீண்டும் வீடு திரும்பாததால் இது குறித்து புரோட்டாத்தூர் போலீசில் சதீஷ்குமாரின் மனைவி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மது போதையில் இருந்த ஜெய கிஷோர்குமார் சதீஷ்குமாரை கொலை செய்ததாக தனது நண்பர்களிடம் உளறி கொட்டினார். இதனை கேட்ட அவரின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் ஜெய கிஷோர்குமாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு நண்பரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். புதைக்கப்பட்ட சதீஷ்குமார் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கிஷோர்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×