search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே முன்னாள் காதலியை கர்ப்பிணியாக்கியவர் கைது
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் அருகே முன்னாள் காதலியை கர்ப்பிணியாக்கியவர் கைது

    • முன்னாள் காதலியிடம் ஆசை வார்த்தைகள் பேசி கொத்தனார் அவரை கற்பழித்தார்.
    • திருமணம் செய்த மறுத்தவரை புகாரின்பேரில் போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 12 வயதில் ஒரு மகன், 7 வயதில் ஒரு மகள் உள்ளனர். குணசேகரன் திருமணத்துக்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பிறகும் முன்னாள் காதலியை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.

    33 வயதான அந்த பெண்ணுக்கு திருமணமாக வில்லை. இந்நிலையில் முன்னாள் காதலியிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவரை கற்பழித்தார். இதில் 5 மாத கர்ப்பிணியானார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவர் கேட்டபோது மறுத்து விட்டார். இதனால் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×