search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய்"

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா- ஒரு கப்

    முட்டை- 1

    உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை

    ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

    பால்- அரை கப்

    தேங்காய் பால்- ஒரு கப்

    தேங்காய் துருவல் ஒரு கப்

    நெய்- தேவையான அளவு

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 682-க்கு தேங்காய் மற்றும் எள் விற்பனையாகின.

    ஈரோடு:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் அவல்பூந்து றை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 35 ஆயிரத்து 532 எண்ணி க்கையிலான தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ20.21 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 24.60 காசு கள், சராசரி விலையாக 22.69 காசுகள் என்ற விலை களில் மொத்தம் 14 ஆயிர த்து 873 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 502-க்கு விற்பனையாகின.

    இதேபோல சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற எள் விற்பனைக்கான ஏலத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 702 கிலோ எள் விற்பனை செய்யப்பட்டது.

    விற்பனையான எள்ளில் கருப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ100.29 காசு கள், அதிகபட்ச விலையாக ரூ171.42 காசுகள், சராசரி விலையாக 135.85 காசுகள் என்ற விலைகளிலும்,

    சிவப்பு ரக எள் குறைந்த பட்ச விலையாக ரூ112.9 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.183.49 காசுகள், சராசரி விலையாக ரூ135.85 காசுகள் என்ற விலைகளில் விற்ப னையாகின.

    மொத்தம் கரு ப்பு மற்றும் சிவப்புரக எள் ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்து 180-க்கு விற்பனையாகின.

    மொத்தம் 2 விற்பனை க்கூடங்களிலும் சேர்த்து ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 682-க்கு தேங்காய் மற்றும் எள் விற்பனையாகின.

    • பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தேங்காய்க்கு உரிய விலை கேட்டு பல்லடம் அருகே உள்ள நாதகவுண்டம்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவர்சண்முகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாநிலகொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு, மாநில பொருளாளர் தங்கராஜ்,மாநில அவைத் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பிரச்சார குழுத் தலைவர் பூரண்டாம்பாளையம் மணி மற்றும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் திருப்பூர் ,கோயம்புத்தூர்,கரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி, மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் என்.எஸ்.பி.நந்தகுமார் நன்றி கூறினார்.19-ம் நாளாக தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏறுமுகத்தில் தேங்காய் விலை உள்ளது.
    • விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 8778981501 என்ற எண்ணிலும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளரை (பொ) 9442784684 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல் பட்டுவரும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கான மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று (8-ந்தேதி) நடை பெற்ற மறைமுக ஏலத்தில் ஒரு தேங்காய்க்கான அதிக பட்ச விலையாக ரூ.11.65ம் ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கான அதிகபட்ச விலையாக ரூ.77.25 வியாபாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது.

    மொத்தம் 13 விவசாயிக ளின் 40,938 எண்ணிக்கை யிலான தேங்காய்கள் ரூ.2,80,109-க்கும் 19 விவசாயிகளின் 2.40 டன் அளவிலான கொப்பரை ரூ.1,63,152-க்கும் விவசாயிகளால் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக தேங்காயின் விலை வீழ்ச்சி அடைந்து ரூ.10-க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தேங்காய் விலை ரூ.10-ஜ கடந்தது விவசாயி களுக்கு புதிய நம்பிக்கை யினை ஏற்படுத்தியுள்ளது.

    பண்டிகை மற்றும் திருவிழா காலங்கள் நெருங்கியுள்ளதால் தேங்காய் விலை எழுச்சி யடைய தொடங்கியுள்ளது. ஆகவே மதுரை மாவட்ட விவசாயிகள் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்று வரும் தேங்காய் மற்றும் கொப்பரை மறைமுக ஏலத்தில் பங்கேற்று தங்கள் விளைபொருளுக்கு லாபா கரமான விலையினைப் பெற்றிடுமாறு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொப்பரைக் கொள்முதல் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் கால உச்சவரம்பான செப்டம்பர் மாதம் (30-ந்தேதிவரை) மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே கொப்பரை தேங்காயினை வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து தரமான எவ்வித இடைத்தரகுமின்றி குறைந்தபட்ச ஆதரவு விலையினைப் பெற்றுப் பயனடையுமாறு மதுரை விற்பனைக்குழு செயலா ளர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.

    மேலும் விபரங்களுக்கு வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 8778981501 என்ற எண்ணிலும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளரை (பொ) 9442784684 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    • தேங்காய் கிலோ ரூ.17 முதல் ரூ.23 வரைக்கும் விற்பனையானது.
    • ஏலத்துக்கு 5.7 டன் அளவுள்ள தேங்காய் மற்றும் கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5.7 டன் அளவுள்ள தேங்காய் மற்றும் கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

    இதில் கொப்பரை கிலோ ரூ.58 முதல் ரூ.78 வரைக்கும், தேங்காய் கிலோ ரூ.17 முதல் ரூ.23 வரைக்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தமாக ரூ.2.37 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரைகள் விற்பனையானதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும்
    • பச்சை தேங்காய் கிலோ ரூ.50 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்

    பல்லடம்:

    பல்லடம் அருகே தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு துரைசாமி தலைமை தாங்கினார். ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி , பொங்கலூர் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆர்.பி.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், பல்லடம் ஒன்றிய தலைவர் வேலுமணி, பல்லடம் நகர தலைவர் மைனர் தங்கவேல், பொங்கலூர் ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம், காங்கேயம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ராசுமணி, உத்தமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின்போது பிரதான கோரிக்கையான தேங்காய்க்கு விலை வேண்டும், கொப்பரை தேங்காய் ஒன்றுக்கு ரூ.140 வழங்க வேண்டும், 35 ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற கள்ளுக்கான தடையை நீக்கி அனுமதி தர வேண்டும், பச்சை தேங்காய் கிலோ ரூ.50 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்,ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சத்துணவு கூடத்திலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. உடனடியாக அரசு பரிசிலித்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த தொடர் போராட்டம் நடைபெறும். தொடர் போராட்டத்திற்கு பின்பு சென்னை சென்று தலைமைச் செயலகத்தின் முன்பு பெருந்திரளான விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடைபெறும். அங்கேயும் தேங்காய் உடைத்து அரசு கவனத்தை ஈர்க்கின்ற வகையில் இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தனர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வாவிபாளையம் சுரேஷ்குமார் செய்திருந்தார்.

    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே அவினாசிபாளையத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடந்த 5- ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் தொடர் காத்திருப்பு போராட்டம் 26 வது நாளாக நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று விவசாயிகளின் இந்த காத்திருப்பு போராட்டம் நிறைவு பெறுகிறது.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:- அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் அடுத்த கட்டமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய போராட்டத்திற்கு பேபி ராமசாமி தலைமை தாங்கினார். கவிதா முத்துக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, நொய்யல் பாதுகாப்பு இயக்கத்தின் திருஞானசம்பந்தன், களஞ்சியம் பொன்னுசாமி, நஞ்ச ராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தேங்காய்க்கு விலை வேண்டும் என்று தேங்காய்க்கு பூஜை செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • கொப்பரை தேங்காய் கிலோ ரூ.250 விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
    • தேங்காய்களை கைகளில் ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    மதுக்கூர்:

    தேங்காய் ஒன்றிற்கு ரூ.25 மற்றும் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.250 விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரமையா கோவில் முன்பு தென்னை விவசாயிகள் கூட்டமைப்பினர் திரண்டனர். இதற்கு நிர்வாகி முத்துராமன் தலைமை தாங்கினார்.

    பின்னர் தென்னை விவசாயிகள் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு பல்வேறு வழிகாய சென்று மதுக்கூர் பஸ் நிலையம் சென்றனர்.அங்கு தேங்காய்களை கைகளில் ஏந்தியப்படி உரிய விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் தென்னை விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள், காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் மற்றும் பல்வேறு கட்சி, இயக்க நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தால் மதுக்கூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வியாழக்கிழமை தோறும் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து
    • கூடுதல் விலை, உடனடி தொகை உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 11 விவசாயிகள், 65 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.70.10க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.69க்கும் விற்பனையானது.

    விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடக்கிறது. கூடுதல் விலை, உடனடி தொகை உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94880 00163,94439 62834 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ - நாம் வாயிலாக மட்டை உரித்த தேங்காய் மற்றும் பாக்கு மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்தில் 112 தேங்காய் மூட்டைகள் வந்தன. தேங்காய் கிலோ 22.70 - 24.30 ரூபாயக்கு சென்றது. இதில் 19 விவசாயிகள் , 4 வியாபாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து இரண்டு பாக்கு மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. அதில் பாக்கு கிலோ அதிகபட்ச விலையாக, 350 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 170 ரூபாய்க்கும் விற்பனையானது.

    மொத்தம் இரண்டு வியாபாரிகள், இரண்டு விவசாயிகள் பங்கேற்றனர். இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்தார்.

    • விவசாயிகள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார், சூலூர் கந்தசாமி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ரேஷன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். தேங்காய் ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். தேங்காய் கொப்பரை கிலோவுக்கு ரூ.140 விலை நிர்ணயம் செய்திட வேண்டும். உரித்த பச்சை தேங்காயை கிலோ ரூ. 50 க்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.

    சத்துணவுத் திட்டத்தில் தேங்காய்பால் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும். தென்னை சார்ந்த பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார், சூலூர் கந்தசாமி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேங்காய் ஒன்றுக்கு ரூ.25 அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
    • கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.250 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள படப்பை காட்டில் ஒன்றிய தென்னை விவசாயிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. அத்திவெட்டி வடிவேல் மூர்த்தி தலைமை வகித்தார் . மன்னாங்காடு முத்துராமன், சிராங்குடி கோவிந்தராசு, மூத்தாகுறிச்சி ராஜேந்திரன், அத்திவெட்டி அண்ணாதுரை, ஆலத்தூர் பாஸ்கர், புலவஞ்சி கோவிந்தன், சிரமேல்குடி ராஜேந்திரன், புலவஞ்சி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் தேங்காய் ஒன்றுக்கு ரூ.25 அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை ஒரு கிலோ ஒன்றுக்கு 250 விலை நிர்ணய செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதனை அடுத்து கருப்பூர் முருகேசன், சிரமேல்குடி தமிழ்ச்செல்வன், புலவஞ்சி செல்லக்கண்ணு, அத்திவெட்டி பெரிய தம்பி, புலவஞ்சி திருஞானசம்பந்தம், விக்ரமம் தனபால், பெரிய கோட்டை முருகேசன், ஆலத்தூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • இந்த தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தென்னை விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழையால், வழக்கத்தை விட மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விற்பனை சரிந்துள்ளது.

    மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் 35 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிகள் தேங்காய்கள் அறுவடை செய்கின்றனர்.

    தற்போது தேங்காய் சராசரியாக டன் ரூ.20 ஆயிரம் என விற்பனையாகிறது. ஒரு தேங்காய் ரூ.8-க்கு விற்பனையாகிறது.

    இதில் தேங்காய் மரத்தில் இருந்து பறிப்பு, உரிப்பு கூலியாக ரூ.4 வரை செலவாகிறது. மீதமுள்ள ரூ.4 பராமரிப்பு பணிகளுக்கு செலவாகிறது.

    இந்தநிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இந்த தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அதன்பிறகு கொப்பரையாக மாறும். இல்லாவிட்டால் கெட்டுப்போகும்.

    அடுத்த 6 மாதங்களில் 5 கோடி தேங்காய் தேக்கமடைந்து, வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தேங்காய்களை கொள்முதல் செய்து, கொப்பரையாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×