search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ஒழுங்குமுறை மையத்தில் இ-நாம் மூலம் தேங்காய் ஏலம்
    X

    கோப்பு படம்.

    உடுமலை ஒழுங்குமுறை மையத்தில் இ-நாம் மூலம் தேங்காய் ஏலம்

    • வியாழக்கிழமை தோறும் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து
    • கூடுதல் விலை, உடனடி தொகை உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 11 விவசாயிகள், 65 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.70.10க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.69க்கும் விற்பனையானது.

    விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடக்கிறது. கூடுதல் விலை, உடனடி தொகை உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94880 00163,94439 62834 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ - நாம் வாயிலாக மட்டை உரித்த தேங்காய் மற்றும் பாக்கு மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்தில் 112 தேங்காய் மூட்டைகள் வந்தன. தேங்காய் கிலோ 22.70 - 24.30 ரூபாயக்கு சென்றது. இதில் 19 விவசாயிகள் , 4 வியாபாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து இரண்டு பாக்கு மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. அதில் பாக்கு கிலோ அதிகபட்ச விலையாக, 350 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 170 ரூபாய்க்கும் விற்பனையானது.

    மொத்தம் இரண்டு வியாபாரிகள், இரண்டு விவசாயிகள் பங்கேற்றனர். இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்தார்.

    Next Story
    ×