search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாதகவுண்டம்பாளையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம்
    X

    விவசாயி ஒருவர் தேங்காய் உடைத்த காட்சி.

    நாதகவுண்டம்பாளையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம்

    • பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தேங்காய்க்கு உரிய விலை கேட்டு பல்லடம் அருகே உள்ள நாதகவுண்டம்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவர்சண்முகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாநிலகொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு, மாநில பொருளாளர் தங்கராஜ்,மாநில அவைத் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பிரச்சார குழுத் தலைவர் பூரண்டாம்பாளையம் மணி மற்றும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் திருப்பூர் ,கோயம்புத்தூர்,கரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி, மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் என்.எஸ்.பி.நந்தகுமார் நன்றி கூறினார்.19-ம் நாளாக தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×