search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கு தேசம் கட்சி"

    • தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.

     திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி. ராமராவ் உருவ சிலைகள் மாநிலம் முழுவதும் உள்ளன.

    இந்த நிலையில் பாபட்லா மாவட்டம் பர்திபுடி சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த என்.டி. ராமராவ் சிலையின் தலையை இரவு மர்ம நபர்கள் துண்டித்து கீழே வீசி சென்றனர்.

    இதனை கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். என்.டி. ராமராவ் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது வெட்கக்கேடான செயல். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

    சிலையின் தலையை துண்டித்தவர்களை கண்டுபிடித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் கூறுகையில்:-

    வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற கவலையில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    இதுபோன்ற செயல்களால் என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.
    • மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர ஐகோர்ட்டு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    இதையெடுத்து நேற்று மாலை சந்திரபாபு நாயுடு ஜெயிலிருந்து வெளியே வந்தார். அவரது மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ் மருமகள் பேரக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர்.

    மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    பின்னர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது :-

    எனது ஜாமீனுக்காக போராடிய ஜனசேனா, பி.ஆர்.எஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

    எனது நேர்மையின் காரணமாக ஜெயிலில் 52 நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மக்கள் என் மீது காட்டிய பாசத்தை விவரிக்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிப்பு.

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    தனது வலது கண்-இல் பிரச்சினை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா பிரதேசம் உயர் நீதிமன்றம் நான்கு வார காலத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.

    ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவரை வரவேற்க தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
    • பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரை தெலுங்கு தேசம் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் காசானி ஞானேஸ்வர் சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் போட்டியிடவில்லை என அறிவித்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 3.51 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

    பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

    அவரது வேட்பாளர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சந்திரபாபுநாயுடு சட்ட விரோத கைதை கண்டித்தும், உறங்கிக் கொண்டு இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி கண்களை திறப்பதற்காக எனக் கூறி இன்று இரவு 7 மணிக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு சாலைகள், வீட்டு மாடிகள், பால்கனிகளில் நின்று 5 நிமிடங்கள் ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதேபோல் ஸ்ரீகாகுளத்தில் காளி செட்டி என்பவர் தலைமையில் 50 மீட்டர் நீளம் உள்ள கருப்பு துணியை கையில் பிடித்தபடி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
    • தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் சந்திரசேகரராவ் கட்சி காங்கிரஸ் பா.ஜ.க போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் காசானி கூறியதாவது

    தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 87 இடங்களில் போட்டியிடும்.

    விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல் பட்டியலில் 30 வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும்.

    2-வது வேட்பாளர் பட்டியல் உடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும். தெலுங்கானா மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்கும்.

    கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

    தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகருமான என்.டி. ராமராவின் மகன் நந்தமுரிபாலகிருஷ்ணா தலைமையில் போட்டியிடுவோம். அவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் கட்சிகள் இடம்பெறும் என பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது பா.ஜ.க. தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.விற்கு நெருக்கமாக உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவர் மீது மேலும் 3 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வழக்குகளில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பைபர் நெட் முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

    உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜெயிலில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திரா தெலுங்கானா மாநிலத்தில் கூட்டணி அமைப்பது குறித்தும் அமித்ஷா நாரா லோகேஷ் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி, மத்திய மந்திரி கிஷண்ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆந்திராவை பொருத்தவரையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கணிசமான வாக்குகளை பெறவில்லை. இதனால் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. அதிக கவனத்தை செலுத்தவில்லை.

    அந்த மாநிலத்தில் 9 பாராளுமன்ற தொகுதி 48 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

    இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனியாக போட்டியிடவில்லை. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    ஐதராபாத் வளர்ச்சியில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் பெரும் பங்கு வகித்ததாக இந்த பகுதி மக்கள் கருதுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் வளர்ச்சி அடைந்து உள்ள பா.ஜ.க. டார்கெட் 75 என்ற இலக்குடன் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    அதனால் தெலுங்கானாவில் பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனால் தெலுங்கானா மாநில அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.விற்கு நெருக்கமாக உள்ளார். அவர் அனைத்து திட்டங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    இதனால் ஆந்திராவில் பா.ஜ.க. நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.
    • பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆசிய ஆடவர் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சகோத் மைனேனிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்த பிறகு யாரை கொல்லலாம் என தெலுங்கு தேசம் கட்சியினர் யோசித்து வருகின்றனர்.

    டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.

    பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி தனது தொகுதியிலும் வீட்டிலும் பெண்களிடம் என்ன மாதிரி நடந்து கொள்வார் என்பது அவரது பேச்சில் தெரிய வந்துள்ளது.

    பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். என்னை இழிவாக பேசி ஒரு வார காலமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்க முடிவு செய்து உள்ளேன். சகோ மைனேனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் பல பதக்கங்களை வென்றாலும் அவரை ஊக்கவிக்கவில்லை. உதவி தொகையும் வழங்காமல் பாகுபாடு காட்டினார்.

    ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஜாதி மதம் அரசியல் கட்சி வேறுபாடு இன்றி ஊக்குவித்து வருகிறார். அரசு வேலையுடன் கூடிய பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?
    • அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டசபையில் சிடிக்கள் காட்டினர். இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமீபத்தில் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா தன்னை நிர்வாண வீடியோவில் நடித்ததாக சித்ரவதை செய்கின்றனர் என கண்ணீர் விட்டு அழுதார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களது மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ரோஜா மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? கடந்த காலங்களில் சட்டசபையில் ரோஜா பேசிய வார்த்தைகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

    பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்க ரோஜா கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ரோஜாவை பற்றி பேசியதால், 200 போலீசார் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தியின் வீட்டிற்கு வந்து கைது செய்தனர்.

    ஆனால், தெலுங்குப் பெண்கள் மீது தொடர்ந்து தகாத கருத்துகளை தெரிவித்து வருபவர்கள் மீது புகார்கள் வந்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை.

    ரோஜாவை யாரும் பெண்ணாக கருதுவதில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் உள்ளவர்கள் அமைச்சர் ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறுவதற்காக ஒரு நாள் அழுதார்.

    ஆனால் 4½ ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள். அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரபாபு நாயுடு பொது வாழ்வில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
    • என்.டி.ஆரின் மகளும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஸ்வரி மற்றும் அவரது மருமகள் பிராமணி ஆகியோர் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து சாலை பணிகளில் ஊழல் நடந்ததாக அவரது மகன் லோகேஷ் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்னும் சில மாதங்களில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த முக்கியமான காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடு பொது வாழ்வில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    சந்திரபாபு நாயுடு ஜெயிலில் உள்ளார். அவரது மகன் லோகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் கட்சியை வழிநடத்த அடுத்த கட்ட முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    என்.டி.ஆரின் மகளும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஸ்வரி மற்றும் அவரது மருமகள் பிராமணி ஆகியோர் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளனர். முக்கியமாக தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த போகும் முக்கியமான பொறுப்பு பிராமணி வசம் சென்றுள்ளது.

    புவனேஸ்வரி மற்றும் பிராமணி இருவரும் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.

    தற்போது ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் போராட்டங்களில் பிராமணி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, நடிகை ரோஜா உள்ளிட்டவர்களையும் விமர்சித்து வருகிறார்.

    ரோஜா உள்ளிட்ட ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர்களும் பிராமணியை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை வெளிப்படையாக அரசியல் ரீதியாக எந்த செயல்பாட்டிலும் இறங்காத பிராமணியை குறிவைத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது பொது மக்களால் கவனிக்கப்படுகிறது.

    கடந்த 2012-ம் ஆண்டு 16 மாதங்கள் ஜெகன்மோகன் ரெட்டி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது ஜெகன்மோகனின் தாய் விஜயம்மா சகோதரி ஷர்மிளா இருவரும் முன் நின்று அவரது கட்சியை வழிநடத்தினார்கள். அவர்கள் சுமார் 3000 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி தலைமை வெற்றிடத்தை நிரப்பினார்கள். இப்போது அதே நிலை சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் மருமகள் பிராமணி என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணனின் மகள் ஆவார். என்.டி.ஆர்.பேத்தி என்பதால் ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களிடையே கூடுதல் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    • இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்.
    • ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

    இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் .

    ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .

    தெலுங்கு மக்களுக்கு மூலதனம் இல்லாததால் வெட்கப்படுகிறேன். ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியையும் மாநிலத்தையும் , பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டார்.

    ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன என்பதை உணர்ந்துள்ளனர். நேற்று புங்கனூரில் கலவரம் ஏற்படுத்திவிட்டனர். சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர ரெட்டியின் கைக்கூலியாகிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதாவுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

    டெல்லியில் நடந்த பா.ஜனதா கூட்டணிகள் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என பேசி உள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து பாஜக கூட்டணியில் சேர முயற்சி செய்வது தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆந்திர முதல்அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு அளிக்கவில்லை. அவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்து வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

    2 கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவை ஆதரிப்பதால் ஆந்திர மாநிலத்தில் யார் வெற்றி பெற்றாலும் பா. ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த மாதம் பா.ஜனதா சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் திருப்பதி மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்தது.
    • நாங்கள் ஒருபோதும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்களை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வருகிற 5-ந் தேதி சந்திப்பு நடைபெறலாம் என அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த மாதம் பா.ஜனதா சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் திருப்பதி மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

    இதில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் ஜெகன்மோகன் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினர்.

    அவர்கள் வருகையின்போது ஜெகன்மோகன் கட்சி தலைவர்கள் சந்தித்து பேச முயன்றனர். அதனையும் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் புறக்கணித்தனர்.

    இதனால் பா.ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சந்திப்பு பா.ஜனதா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி கூறுகையில்:-

    நாங்கள் ஒருபோதும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. மத்திய அரசுடன் நல்ல உறவை பேணுவோம்.

    ஒரு கட்சியாக நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். மக்கள் பணிக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு தொடரும் என்றார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா உடன் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்புக்கு பிறகு கூட்டணியில் மாற்றம் எதுவும் ஏற்படுமா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×