search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ரோஜா"

    • ரோஜாவுக்கு கிரிக்கெட் பேட் பிடிப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் கற்றுக்கொடுத்தார்.
    • இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    அமராவதி:

    ஆந்திரா அரசின் சார்பில் ஆடுவோம் ஆந்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 5 கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதன் தொடக்க நிகழ்ச்சி குண்டூரில் உள்ள பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் மற்றும் அமைச்சர் ரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இருவரும் கிரிக்கெட் விளையாட வந்தனர். அப்போது கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிப்பது என தெரியாமல் ரோஜா தடுமாறினார். இதைக் கண்ட முதல் மந்திரி ஜெகன்மோகன் அவருக்கு சொல்லிக் கொடுத்தார்.

    இதையடுத்து, கிரிக்கெட் பந்தை அடித்து ஆடினார் ரோஜா. தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன் மோகனிடம் வலுக்கட்டாயமாக கிரிக்கெட் பேட்டைக் கொடுத்த ரோஜா அவரையும் விளையாடச் செய்தார்.

    இந்தப் போட்டிகள் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி வரை ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.
    • பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆசிய ஆடவர் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சகோத் மைனேனிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்த பிறகு யாரை கொல்லலாம் என தெலுங்கு தேசம் கட்சியினர் யோசித்து வருகின்றனர்.

    டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.

    பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி தனது தொகுதியிலும் வீட்டிலும் பெண்களிடம் என்ன மாதிரி நடந்து கொள்வார் என்பது அவரது பேச்சில் தெரிய வந்துள்ளது.

    பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். என்னை இழிவாக பேசி ஒரு வார காலமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்க முடிவு செய்து உள்ளேன். சகோ மைனேனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் பல பதக்கங்களை வென்றாலும் அவரை ஊக்கவிக்கவில்லை. உதவி தொகையும் வழங்காமல் பாகுபாடு காட்டினார்.

    ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஜாதி மதம் அரசியல் கட்சி வேறுபாடு இன்றி ஊக்குவித்து வருகிறார். அரசு வேலையுடன் கூடிய பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?
    • அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டசபையில் சிடிக்கள் காட்டினர். இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமீபத்தில் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா தன்னை நிர்வாண வீடியோவில் நடித்ததாக சித்ரவதை செய்கின்றனர் என கண்ணீர் விட்டு அழுதார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களது மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ரோஜா மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? கடந்த காலங்களில் சட்டசபையில் ரோஜா பேசிய வார்த்தைகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

    பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்க ரோஜா கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ரோஜாவை பற்றி பேசியதால், 200 போலீசார் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தியின் வீட்டிற்கு வந்து கைது செய்தனர்.

    ஆனால், தெலுங்குப் பெண்கள் மீது தொடர்ந்து தகாத கருத்துகளை தெரிவித்து வருபவர்கள் மீது புகார்கள் வந்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை.

    ரோஜாவை யாரும் பெண்ணாக கருதுவதில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் உள்ளவர்கள் அமைச்சர் ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறுவதற்காக ஒரு நாள் அழுதார்.

    ஆனால் 4½ ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள். அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது.
    • பண்டாரு சத்யநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அமைச்சர் ரோஜா குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சிடிக்கள் காட்டப்பட்டன. ஆனால் சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை.

    பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது. (கண்ணீர் விட்டு கதறி அழுதார்).

    உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா?

    முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் கண்டிக்காதது ஏன்?

    தெலுங்கு தேசம் ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சுக்கு அவரது மனைவி தன் கணவனை அறைந்திருக்க வேண்டும்.

    லோகேஷ் வெட்கமின்றி ட்வீட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை பிரசாரத்திற்கு அழைத்தது ஏன்? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்? என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள்.

    நான் உங்கள் கட்சியில் இருக்கும்போது எப்படி நல்லவராகவும், வேறு கட்சியில் இருக்கும்போது கெட்டவராகவும் இருக்க முடியும்.

    பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது. கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா. சந்திரபாபு நாயுடுவை கைது செய்தால் ஏன் அழுகிறீர்கள்.

    தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. தெலுங்கு தேசம் கட்சியால் அரசியல் ரீதியாக வளர முடியாது.

    பண்டாரு சத்யநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் ரோஜா பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் பெண் அமைச்சர் ஒருவர் கலங்கி அழுதபடி பேட்டி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ரோஜா குறித்து அவதூறு பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து பண்டாரு சத்திய நாராயண மூர்த்தியை கைது செய்தனர்.

    • ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாணை ஒப்பிட முடியாது.
    • பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.

    அவரால் வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெகன்மோகனை விமர்சித்து பேசி வருகிறார்.

    எங்கள் கட்சிக்கு 22 எம்.பிக்கள், 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பவன் கல்யாண் போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வி அடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாண் ஒப்பிட முடியாது.

    கடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 88 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. ஜனசேனா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 120 பேர் டெபாசிட் இழந்தனர். முதலமைச்சரின் அந்தஸ்தை வைத்து பேச வேண்டும்.

    பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை. பிறருக்காக வேலை செய்யும் ஒரு பேக்கேஜ் ஸ்டார்.

    சந்திரபாபு நாயுடு ஜெயிலில் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு பெரிய பேக்கேஜை பெற்றுவிட்டார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் போருக்கு தயார் என பவன் கல்யாண் தெரிவித்து இருக்கிறார். போர்க்களத்தில் நுழையும் அளவுக்கு அவரிடம் அவ்வளவு இராணுவ வீரர்கள் இருக்கிறார்களா? இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒற்றை யானை கணவன், மனைவியை மிதித்து கொன்றது.
    • விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர்.

    சித்தூர்:

    சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). விவசாயி. இவரது மனைவி செல்வி.

    இவர்களுக்கு வனப்பகுதியொட்டி சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இன்று காலை வெங்கடேசும், செல்வியும் விவசாய பணியில் ஈடுபட நிலத்திற்கு சென்றனர்.

    அப்போது விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை வந்தது. இதனைக் கண்டவுடன் கணவன், மனைவி கூச்சலிட்டபடி அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

    அவர்களை விடாமல் துரத்தி சென்று ஒற்றை யானை கணவன், மனைவியை மிதித்து கொன்றது.

    இது குறித்து சித்தூர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷ், செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    யானை மிதித்து கணவன், மனைவி இறந்த தகவல் அறிந்து அமைச்சர் ரோஜா சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளதால் அடிக்கடி விவசாய நிலத்திற்கு யானைகள் வந்து நிலங்களை சேதப்படுத்துகிறது.

    விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.
    • சந்திரசேகர ராவுக்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதியில் அமைச்சர் ரோஜா வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரசேகர ராவ் தனது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தற்போது பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி என தேசிய கட்சியாக மாற்றி உள்ளார்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி ஆந்திராவில் 150 இடங்களில் போட்டியிட உள்ளதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    அவரது கட்சியை ஆந்திராவிற்குள் அனுமதிக்க கூடாது. மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.

    அந்த கட்சி மீண்டும் ஆந்திராவில் காலடி எடுத்து வைக்க நினைப்பது எவ்வளவு அநியாயம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். சந்திரசேகர ராவுக்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிச்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் பரந்த மைதானத்தில் கூட்டத்தை நடத்தாமல் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தியதால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திருப்பதி:

    அமைச்சர் ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடித்து வெளியே வந்த அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது,:-

    தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிச்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் பரந்த மைதானத்தில் கூட்டத்தை நடத்தாமல் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தியதால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து கோர்ட்டு தானாக முன்வந்து சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    மனித உரிமை ஆணையமும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    • போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
    • மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறினார்.

    திருப்பதி:

    விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசாவும் முதல் பரிசை வென்றன.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆந்திராவில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கொண்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என்றார்.

    பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

    அப்போது எதிர்த்து விளையாடியவர் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும்.
    • சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவுக்கும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளை தங்கள் வலையில் வீழ்த்தி உள்ளனர்.

    மீன்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மீதும் இந்த அரசு ஜெட் வரி விதித்ததால் மாதத்திற்கு அரசுக்கு ரூ.750 கோடி வருவாயாக கிடைக்கிறது. ஆனால் இறால் மீன்களின் விலையை கிலோவுக்கு ரூ.240-ல் இருந்து 210 ரூபாயாக இந்த அரசு குறைத்து விட்டது.

    இதனால் விவசாயிகள் எப்படி பிழைப்பார்கள் என எண்ணிப் பார்க்கவில்லை. கூட்டத்திற்கு ஆதோனி, எமிகானூர், கடப்பா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து அதிக அளவு விவசாயிகள் கலந்து கொண்டதால் அந்த மாவட்டத் தலைவர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து ஜெகன்மோகன் நீக்கி விட்டார்.

    வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடிக்கும். குப்பம் தொகுதி மட்டுமல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டி தொகுதியான புலி வேந்தலா உட்பட 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலம் சீரழிவை சந்திக்க நேரிடும் என்றார்.

    சந்திரபாபு நாயுடு பேச்சுக்கு அமைச்சர் ரோஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக குண்டூரில் நடந்த ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:-

    தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவுக்கும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை.

    எதிர்க்கட்சியாக உள்ளதால் எங்கள் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.

    • திருப்பதியில் பிறந்து வளர்ந்து கலைத்துறையில் சிறந்து விளங்கியதால், இன்று எனக்கு கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
    • கலைத்துறைக்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அவர் பேசுகையில்:-

    முதல்-அமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன்ரெட்டி பிறந்தநாளையொட்டி பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    நான் திருப்பதியில் பிறந்து வளர்ந்து கலைத் துறையில் சிறந்து விளங்கியதால், இன்று எனக்கு கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கலைத்துறைக்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்துள்ளது.

    அது மட்டுமின்றி ஆந்திர அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறேன். அமைச்சராக உயர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறேன், என்றார்.

    நிகழ்ச்சியில் பரதநாட்டியம் குச்சிப்புடி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைச்சர் ரோஜாவும் கலைக்குழுவினருடன் நடனமாடி அசத்தினார்.

    இதனைக் கண்ட கட்சி தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    • ஆந்திர மக்கள் பவன் கல்யாணை நம்ப தயாராக இல்லை.
    • எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் ஆந்திர மக்கள் வாக்களித்து 155 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம்.

    திருப்பதி:

    அமராவதியை ஆந்திராவில் தலைநகரமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் ஆளுங்கட்சிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

    அமைச்சர் ரோஜா கார் மீது ஜனசேனா கட்சியினர் கல் வீசியது சம்பந்தமாக நடிகர் பவன் கல்யாணுக்கும், அமைச்சர் ரோஜாவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகர் பவர் கல்யாண் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாக கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாக கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரோஜா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் நிறுத்த கூட ஆட்கள் இல்லை. இதனால் அவர் சந்திரபாபு நாயுடு உடன் சேர்ந்து கொண்டு ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை சந்திரபாபு நாயுடு திருப்பி அனுப்பினார்.

    அப்போது வாய் திறந்து பேச முடியாத பவன் கல்யாண் தன்னை பொதுக்கூட்டத்தில் பேச முடியாதவாறு திருப்பி அனுப்பியதாக கூறுகிறார்.

    அப்போது கஷ்டப்படாத நீங்கள் இப்போது ஏன் கஷ்டப்படுகிறீர்கள்.

    பவன் கல்யாண் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஆந்திராவில் உள்ள ஆண்கள் 3 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டு வருவார்.

    ஆந்திர மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை. எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் ஆந்திர மக்கள் வாக்களித்து 155 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×