search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adudam Andhra"

    • ரோஜாவுக்கு கிரிக்கெட் பேட் பிடிப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் கற்றுக்கொடுத்தார்.
    • இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    அமராவதி:

    ஆந்திரா அரசின் சார்பில் ஆடுவோம் ஆந்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 5 கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதன் தொடக்க நிகழ்ச்சி குண்டூரில் உள்ள பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் மற்றும் அமைச்சர் ரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இருவரும் கிரிக்கெட் விளையாட வந்தனர். அப்போது கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிப்பது என தெரியாமல் ரோஜா தடுமாறினார். இதைக் கண்ட முதல் மந்திரி ஜெகன்மோகன் அவருக்கு சொல்லிக் கொடுத்தார்.

    இதையடுத்து, கிரிக்கெட் பந்தை அடித்து ஆடினார் ரோஜா. தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன் மோகனிடம் வலுக்கட்டாயமாக கிரிக்கெட் பேட்டைக் கொடுத்த ரோஜா அவரையும் விளையாடச் செய்தார்.

    இந்தப் போட்டிகள் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி வரை ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×