ஆந்திரா பிரிவினைக்கு காரணமாக இருந்த சந்திரசேகர ராவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்- அமைச்சர் ரோஜா

மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.சந்திரசேகர ராவுக்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
ஆந்திரா பிரிவினைக்கு காரணமாக இருந்த சந்திரசேகர ராவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்- அமைச்சர் ரோஜா
Published on

திருப்பதி:

திருப்பதியில் அமைச்சர் ரோஜா வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரசேகர ராவ் தனது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தற்போது பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி என தேசிய கட்சியாக மாற்றி உள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி ஆந்திராவில் 150 இடங்களில் போட்டியிட உள்ளதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

அவரது கட்சியை ஆந்திராவிற்குள் அனுமதிக்க கூடாது. மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.

அந்த கட்சி மீண்டும் ஆந்திராவில் காலடி எடுத்து வைக்க நினைப்பது எவ்வளவு அநியாயம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். சந்திரசேகர ராவுக்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com