search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண விழா"

    • சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும்.
    • 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார்.

    சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும். ஆனால் உணர்ச்சிகரமான வீடியோக்கள் அரிதாகவே காணக்கிடைக்கும். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ருத்விக் பாண்டே என்பவர் பதிவிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில் 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார். சில சமயம் அவர் தரையில் அமர்ந்து இருக்கிறார். 95 வயதிலும் தனக்கும், தன் குடும்பத்திற்காகவும் அயராது உழைக்கும் இந்த முதியவரின் வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிடுவதோடு அவருக்கு உதவி செய்யவும் முன்வந்துள்ளனர். இந்த வீடியோ 1.7 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

    • அகமுடையார் சங்க துணைத்தலைவர் இல்ல திருமண விழா நடந்தது.
    • நிறுவன தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார் நடத்தி வைத்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த தமிழக தலைமை அகமுடையார் சங்க மாநில துணைத் தலைவர் நாராயண மூர்த்தி-மகேஷ்வரி ஆகியோர் மகன் தாமு என்ற தாமோதர முத்துவுக்கும், மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த ராதாகிருஷ்ணன்-மல்லிகா தேவி தம்பதியின் மகள் அஸ்விந்ரா தேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டி ருந்தது. இவர்களது திருமணம் நேற்று கமுதியில் உள்ள நடராஜன் வேலம்மாள் மகாலில் நடந்தது.

    திருமணத்தை தமிழக தலைமை அகமுடையார் சங்க நிறுவன தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார்-செந்தாமரை ஆகியோர் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர். விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம், மதுரை சரவணா ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர்.சரவணன், கரந்தை அ.தி.மு.க. செயலாளர் அறிவுடை நம்பி, பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் மூர்த்தி தேவர், தென்னாட்டு மக்கள் கட்சி தலைவர் கணேச தேவர்.

    கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல்வகாப் சஹாராணி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், திருக்கோவிலூர் முரளி, பா.ஜ.க. பொருளாளர் பிரிவு மாநில செயலாளர் எவரெஸ்ட் கார்த்திக், தர்மர் எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சுந்தர்ராஜன், முதுகுளத்தூர் முருகவேல், மலேசியா பாண்டியன், தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட பேரவை செயலாளர் மருதுபாண்டியன், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமக்குடி நாகராஜன், முன்னாள் யூனியன் சேர்மன் கிருஷ்ணன்.

    கமுதி ஒன்றிய சேர்மன் தமிழ்செல்வி போஸ், துணை சேர்மன் அய்யனார், அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை தலைவர் ஜெயமணி, வீரகுல அமர இயக்க தலைவர் முருகன், சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் சேங்கைமாறன், தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இன்பாரகு, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் சிவராம சந்திரன், அகமுடை யார் அரண் ஒருங்கிணைப் பாளர் பாலமுருகன், அகில இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுரேந்தி ரன், மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ராமசாமி சேவை, கமுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பெரியசாமி, முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர்

    • திருமணம் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா சபை ஆலயத்தில் வைத்து நடைபெற்றது.
    • வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள லயன் சங்கத்தை சேர்ந்தவரும், சேனம்விளை சி.எஸ்.ஐ. சேகர சபை செயலாளருமான பி.ஜாண்சன் மற்றும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை ஆர்.பேன்சி ஜாண்சன் தம்பதியினரின் மகன் மருத்துவர் பெலிக்ஸ் ஜாண்சனுக்கும், நேசமணி நகரை சேர்ந்த பொறியாளர் எஸ்.ஜோஸ் டேனியல்-நெவிலா தம்பதியினரின் மகள் மருத்துவர் ஜெ.ஷேரனுக்கும் திருமணம் நடந்தது.

    இவர்களது திருமணம் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா சபை ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள், இன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சேகர சபை போதகர்கள், அரிமா சங்க மாவட்ட முன்னாள், இன்னாள் ஆளுநர்கள், பல்வேறு லயன் சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள், மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், ஆசிர்வாதம் நகர் நல சங்க உறுப்பினர்கள், சேனம்விளை சபையார் கட்டிட சங்க பொறியாளர்கள், பொறுப்பாளர்கள், உறவினர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண ஏற்பாடுகளை ஜாண்சன், சட்ட அலுவலக பணியாளர்கள் மற்றும் அரிமா ஜெயசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • அனைவரும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் தம்பதியரின் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரி யேந்தல் டி. கண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த திருமண விழா சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது. திருமண விழாவை தி.மு.க. மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும்-அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வெங்க டேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான மு.பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்கின்ற னர்.ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, சோழவந் தான் ஒன்றிய கவுன்சிலர் பேரூர் செயலாளர் எஸ்.என். சத்யபிரகாஷ் ஆகியோர் நன்றி கூறுகின்றனர். இதில் உற்றார்-உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தி.மு.க. மாவட்ட பொருளாளர் இல்ல திருமண விழா நடக்கிறது.
    • இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர், கார்த்திக் ஹவுஸிங் பிரை வேட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் சோமசுந்தரபாண்டியன்- எஸ்.அன்புசெல்வி தம்பதிய ரின் மகனும், பொறியாளரு மான எஸ்.கார்த்திக் பாண்டியனுக்கும், ஸ்ரீராம் டிசைனர் அண்ட் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஏ.கணேசன்-பத்மா தம்ப தியரின் மகளும், மருத்துவரு மான ஜி.சுபாஷினிக்கும் நாளை (27-ந் தேதி) காலை 9 மணிக்கு மேல 10.30 மணிக்குள் மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத் தில் திருமணம் நடக்கிறது.

    இந்த திருமணத்தை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சரு மான பி.மூர்த்தி தலைமை யேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்து கிறார்.

    திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலா ளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், எம்.எல்.ஏ.க் கள் பூமிநாதன், ஆ.வெங்க டேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த விழாவில் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகி கள், தொழிலதிபர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    • பேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண விழா நடந்தது.
    • முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் பேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ஜெயலட்சுமி-மாரிமுத்து ஆகியோரது மகன் முதுகலை பட்டதாரி சரண்குமா ருக்கும், பாப்பா குடி முருகன்-செல்வராணி ஆகியோரது மகள் பட்டதாரி ஷார்மிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.

    இவர்களது திருமணம் நேற்று ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் நடந்தது. இதில் அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள்,முக்கிய பிரமுகர்கள், உற்றார்-உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பரக்கத் மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை மாரிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய லட்சுமி, சரத்குமார் ஆகியோர் வரவேற்றனர். மணவிழாவில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.
    • முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள புதிய ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

    இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் உணவு உண்ட 43 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு, பழச்சாறு சாப்பிட்ட பிறகு சுமார் 43 பேர் வாந்தி எடுத்து, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.

    மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் ஆரம்ப சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    • இர்பான் மருத்துவமனை இயக்குநர் எஸ்.சாதிக் அலி இல்ல திருமண விழா நடந்தது.
    • பொறியாளர் இர்பான் அலி, ஜாபிர் அலி, முகமது ஜபான் அலி உள்பட உறவினர்கள், நண்பர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிராமத்தை சேர்ந்த ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்னாள் நிலைய அதிகாரியும், முன்னாள் அரசு மருத்துவமனை (காச நோய் பிரிவு) துணை இயக்குனரும், புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளிகளின் தாளாளரும் பாரதி நகர் இர்பான் மருத்துவமனையின் இயக்குனருமான மருத்துவர் எஸ்.சாதிக் அலி-கன்சுல் மகரிபா ஆகியோரது மகன் டாக்டர் பர்ஹான் அலி மணமகனுக்கும், நெல்லையை சேர்ந்த முகமது ஜலீல்-சுமையா பானு ஆகியோர் மகள் மருத்துவர் ஆமினா பேகத்திற்கும் நேற்று ராமநாதபுரம் அருகே உள்ள ஏ1 மகாலில் திருமணம் நடைபெற்றது.

    புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை செயலாளர் முகமது நிஜாமுதீன், தலைமையில் தலைவர் ஹமிதுல் ஆஸ்கீன், துணைத் தலைவர் முகமது களஞ்சியம், துணை செயலா ளர் செய்யது அபுதாஹிர், பொருளாளர் முகமது இப்ராஹிம், முஸ்லிம் முன்னேற்ற சங்க தலைவர் சலீம், செயலாளர் ஜாகிர் முன்னிலையில் புதுவலசை தலைமை பேஸ் இமாம் அகமது திருமணத்தை நடத்தி வைத்து நிக்காஹ் ஓதி சிறப்பு துவா ஓதினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் பக்ருல்அமீன், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய நிர்வாகி கள், முக்கிய பிரமுகர்கள், டாக்டர்கள், பொறி யாளர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் சார்பில் பொறி யாளர் இர்பான் அலி, ஜாபிர் அலி, முகமது ஜபான் அலி உள்பட உறவினர்கள், நண்பர்கள் செய்திருந்தனர்.

    • ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
    • விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொது மக்கள் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    ஆலங்குளம்:

    முகூர்த்த நாட்கள் நாளை முதல் தொடர்ந்து 2 நாட்கள் வருவதை யொட்டி தென்காசி மாவட்டத்திலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் நேற்று ரூ.1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இதே போல் கிலோ ரூ.850-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,500-க்கு விற்பனையானது. விலை அதிகரித்து காணப்பட்டாலும் தேவை அதிகரிப்பால் வியாபாரிகளும், பொது மக்களும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சில இடங்களில் மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    • அ.தி.மு.க. பிரமுகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இல்ல திருமண விழா நாளை (20-ந் தேதி) நடக்கிறது.
    • இதில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

    மதுரை

    மதுரை மத்திய 6-ம் பகுதி அ.தி.மு.க. செயலாளரும், ஆர்.கே. குரூப் ஆப் கம்பெனிஸ் மற்றும் ஸ்ரீ வெற்றி பார்மா மேனேஜிங் டைரக்டர்மான எம்.ஜி. ராமச்சந்திரன்-கொன்னலட்சுமி தம்பதியின் மகள் ராஜிக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் -உமா மகேஸ்வரி தம்பதி மகனுமான மோகன் ராஜூக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் நாளை (20-ந் தேதி) காலை அழகர் கோவில் ரோடு சூர்யா நகரில் உள்ள விஜய் கிருஷ்ணா மஹாலில் நடக்கிறது. திருமணத்தை மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் துணைத் தலைவர் எம். கணேசன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

    திருமண விழாவிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தலைமை தாங்குகிறார் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மாவட்ட நிர்வாகிகள் எம்எஸ். பாண்டியன், அண்ணாதுரை, ராஜா, ஜெயபாலன், சக்தி மோகன், குமார், சோலை எம். ராஜா, சக்தி விநாயகர் பாண்டியன், தளபதி மாரியப்பன், பரவை ராஜா, திரவியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    விழாவில் அரசியல் கட்சியினர், தொழிலதி பர்கள், முக்கிய பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    திருமண ஏற்பாடுகளை எம்.ஜி. ராமச்சந்திரன்- கொன்னலட்சுமி மற்றும் குடும்பத்தினர் உதயகுமார்- புனிதா, நந்தினி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • டாக்டர் சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மதுரை

    மதுரையில் உள்ள சரவணா மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பா.சரவணன்-கனிெமாழி தம்பதியரின் மகன் டாக்டர் அம்ரித் குமாருக்கும், தனசேகரன்-விஜயலட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் சாதுர்யா என்கிற அபூர்வஸ்ரீக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அவர்களது திருமணம் மதுரை ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்து வக்கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நாளை (14-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது.இவர்களது திருமணத்தை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருமண விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படு கிறது. மேலும் ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மணமக்கள் டாக்டர் அம்ரித்குமார்-டாக்டர் சாதுர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. திருமணம் மற்றும் வரவேற்பு விழாவில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.

    • திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன்- லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து நேற்று பொங்கலூர் அருகே உள்ள சாந்தி திருமண மகாலில் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். பின்னர் மணமக்களுக்கு பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்தினார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடாஎஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், விஜயகுமார் எம்.எல்.ஏ., பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் அ.நடராஜன், பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் நீதிராஜன், வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பழனிவேல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தனியரசு உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் , தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×