search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் சரவணன்"

    • முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ‌. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மதுரை

    தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வழியாக வந்தார். அப்போது மதுரை வலையங்குளம் ரிங் ரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேளதாளம் முழங்க எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து டாக்டர் சரவணன் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றார்.

    பின்னர் அங்கு நடந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அப்போது டாக்டர் சரவ ணன், பழனிச்சாமிக்கு செங்கோல் கொடுத்தார்.

    விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் வாக்கு றுதியை 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பொய் கூறி வருகிறார்கள். ஆனால் 10 சதவீத வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை.

    ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. அரசு தான். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உண்மையில் தமிழகம் ஊழலில் தான் முதன்மையாக இருக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க.வினர் நிறுத்திவிட்டார்கள். மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    தி.மு.க. கூறிய எந்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை மக்களுக்கு பட்டை நாமம் போட்டு விட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் சரவணனின் மகன் டாக்டர் எஸ். அம்ரித்குமார் - டாக்டர் எம்.டி.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
    • இவர்களது திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    நடிகர், தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணனின் மகன் டாக்டர் எஸ். அம்ரித்குமார் - டாக்டர் எம்.டி.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் நடைபெற்றது.


    டாக்டர் சரவணன் இல்லத்திருமண விழா

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் சம்பத் போன்ற அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


    டாக்டர் சரவணன் இல்லத் திருமண விழா

    மேலும், திரைப்பிரபலங்களான சூரி, விதார்த், இயக்குனர் பேரரசு, சோனியா அகர்வால், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சிங், ரேகா, சீதா, வனிதா விஜயகுமார், நளினி, அறந்தாங்கி நிஷா,ஷகிலா, கவிஞர் சினேகன், இமான் அண்ணாச்சி, அங்காடிதெரு மகேஷ். பிளாக் பாண்டி, ரோபோ சங்கர், சோனா, கூல் சுரேஷ், சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சரவணன், கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • டாக்டர் சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மதுரை

    மதுரையில் உள்ள சரவணா மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பா.சரவணன்-கனிெமாழி தம்பதியரின் மகன் டாக்டர் அம்ரித் குமாருக்கும், தனசேகரன்-விஜயலட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் சாதுர்யா என்கிற அபூர்வஸ்ரீக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அவர்களது திருமணம் மதுரை ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்து வக்கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நாளை (14-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது.இவர்களது திருமணத்தை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருமண விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படு கிறது. மேலும் ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மணமக்கள் டாக்டர் அம்ரித்குமார்-டாக்டர் சாதுர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. திருமணம் மற்றும் வரவேற்பு விழாவில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.

    • கட்சிக்கு வாருங்கள், மாவட்ட பொருளாளர் பதவி போட்டு தருகிறேன் என்று அழைக்கிறார்கள்.
    • நான் அவர்களிடம் தலைவர் பதவி கேட்டேன். அப்போது அவர் ‘என் பதவியை கேட்கிறாயே?’ என்று சொல்கிறார்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மதுரை மாநகர பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் சரவணனும், இன்றைய மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேலுவும் பேசியதாக இன்னொரு ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் இடம்பெற்று உள்ள பேச்சு விவரம் வருமாறு:-

    ஜெயவேல்; வணக்கம் டாக்டர். செத்த வீடு மாதிரி ஆகிவிட்டது.

    சரவணன்; ஆமாம், ஆமாம்.

    ஜெயவேல்; செத்த வீடு மாதிரி இருக்கிறது. சினிமாவில் பிணங்கள் எழுந்து ஆடுமே? அதே மாதிரி புதிது புதிதாக நிறைய பேர் முளைத்து வருகிறார்கள்.

    ஜெயவேல்; நீங்கள் இருக்கும் வரை கட்சியை மகுடத்தில் வைத்து இருந்தீர்கள். ஆனால் இன்றைக்கு நிறைய பேர் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

    சரவணன்; இனிமேல் அப்படித்தான் இருக்கும் அண்ணே.

    ஜெயவேல்; அந்தக் கட்சிக்காரர் இப்போது தான் பேசினார். நீங்கள் இங்கு வந்து விடுங்கள். உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

    ஜெயவேல்; பாரதிய ஜனதாவில் சுசீந்திரனுக்கு பொறுப்பு போட்டு கொடுத்து உள்ளார்கள். அவர் மீது நிறைய புகார்கள் உள்ளதே?

    சரவணன்; ஆமாம். அவர் ஒரு பந்தா பார்ட்டி. பேராசிரியராக இருப்பதால் சமாளித்துக் கொள்வார்.

    ஜெயவேல்; கட்சிக்கு வாருங்கள், மாவட்ட பொருளாளர் பதவி போட்டு தருகிறேன் என்று அழைக்கிறார்கள். நான் அவர்களிடம் தலைவர் பதவி கேட்டேன். அப்போது அவர் 'என் பதவியை கேட்கிறாயே?' என்று சொல்கிறார். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். அதன் பிறகு உங்களிடம் மீண்டும் போன் செய்து பேசுகிறேன்.

    சரவணன்; சரிங்க அண்ணே.

    இவ்வாறு அந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது.

    டாக்டர் சரவணனும் ஜெயவேலுவும் பேசுவதாக வெளியான ஆடியோ, மாவட்ட அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட பா.ஜனதா துணைத் தலைவர் ஜெயவேல் சக நிர்வாகிகளுடன் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது;-

    "நான் மதுரை மாநகர பா.ஜனதா கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் டாக்டர் சரவணனை மாநில தலைவர் அண்ணாமலை பதவி நீக்கம் செய்து உள்ளார்.

    இந்த நிலையில் டாக்டர் சரவணன் தொலைபேசியில் உரையாடியது போலவும், நான் வேறு கட்சிக்கு செல்வதாகவும் போலி ஆடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

    டாக்டர் சரவணனுக்கு சினிமாவில் பின்புலம் உண்டு. எனவே அவர் மேற்கண்ட தொடர்பை பயன்படுத்தி, மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்கள் மூலம் டப்பிங் பேச வைத்து, போலி ஆடியோக்களை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு வருகிறார். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது.

    எனவே பொய்யான ஆடியோவை சமூகவலைத்தளங்களில் பரப்பிவரும் டாக்டர் சரவணன் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
    • கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.

    எனவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, நேற்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரவணன், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த நிலையில், இன்று காலை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    • தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.
    • மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    மதுரை:

    ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பா.ஜ.க.வினர் நேற்று காலணியை வீசினர். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

    இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இதுதொடர்பாக டாக்டர் சரவணன் கூறியதாவது:

    எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பா.ஜ.க. கட்சியில் தொடரவில்லை. பா.ஜ.க.வில் நான் தொடரப்போவதில்லை. இன்று காலை ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. (திமுகவில் இணைவது) செய்தாலும் தப்பில்லை. திமுக தாய் வீடு தானே. 10-15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக என தெரிவித்தார்.

    திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக டாக்டர் சரவணன் பொறுப்பேற்றார். இவர் கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
    • இதற்கிடையில் அவர் மீண்டும் தி.மு.க.வில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக டாக்டர் சரவணன் உள்ளார். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

    இதையடுத்து மதுரை மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக டாக்டர் சரவணன் பொறுப்பேற்றார். இவர் கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    இதற்கிடையில் அவர் மீண்டும் தி.மு.க.வில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் மதுரை மாவட்ட பாரதிய ஜனதாவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக டாக்டர் சரவணன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் பா.ஜ.க. கட்சியில் மதுரை மாவட்ட தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எங்களது மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், மதுரை மாவட்டத்தில் எனது தலைமையிலும் பாரதிய ஜனதா கட்சி அபார வளர்ச்சி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஆளுங்கட்சியில் நான் சேர போவதாக யாரோ வதந்தி பரப்பி வருகின்றனர். நான் தி.மு.க.வில் சேர போவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நான் தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சியிலும் சேர மாட்டேன்.

    பாரதிய ஜனதாவிலேயே எனது பணி தொடரும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    ×