search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வில் நான் சேர போகிறேன் என்பது வதந்தி- மாவட்ட பா.ஜ.க. தலைவர் சரவணன் விளக்கம்
    X

    தி.மு.க.வில் நான் சேர போகிறேன் என்பது வதந்தி- மாவட்ட பா.ஜ.க. தலைவர் சரவணன் விளக்கம்

    • மதுரை மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக டாக்டர் சரவணன் பொறுப்பேற்றார். இவர் கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
    • இதற்கிடையில் அவர் மீண்டும் தி.மு.க.வில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக டாக்டர் சரவணன் உள்ளார். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

    இதையடுத்து மதுரை மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக டாக்டர் சரவணன் பொறுப்பேற்றார். இவர் கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    இதற்கிடையில் அவர் மீண்டும் தி.மு.க.வில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் மதுரை மாவட்ட பாரதிய ஜனதாவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக டாக்டர் சரவணன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் பா.ஜ.க. கட்சியில் மதுரை மாவட்ட தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எங்களது மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், மதுரை மாவட்டத்தில் எனது தலைமையிலும் பாரதிய ஜனதா கட்சி அபார வளர்ச்சி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஆளுங்கட்சியில் நான் சேர போவதாக யாரோ வதந்தி பரப்பி வருகின்றனர். நான் தி.மு.க.வில் சேர போவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நான் தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சியிலும் சேர மாட்டேன்.

    பாரதிய ஜனதாவிலேயே எனது பணி தொடரும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×