search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண விழா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    மூன்று நாட்கள் நிகழ்ச்சியில், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலிவுட் நடிகர் நடிகைகள், கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பலர் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி கபூருடன் நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 27-ந்தேதி மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்தது.
    • பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க குமரி மாவட்ட செயலாள ரும், ஆரல்வாய் மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாள ருமான சகாய திலகராஜ்- மார்சலின் தம்பதியினரின் மகன் நவீனுக்கும், தேவதாஸ்-லோசனியின் மகள் ஒபிலியாவுக்கும் கடந்த 27-ந்தேதி மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்தது.

    அதன் பின் மாலையில் நாகர்கோவில் கிருஷ்ண மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சி குமரி மாவட்ட டாக்பியா தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில கவுரவ பொது செயலாளர் குப்புசாமி, மாநில பொது செயலாளர் காமராஜ் பாண்டியன், மாநில தலைவர் மணிவண் ணன், மாநில பொருளாளர் சேகர், மாநில துணை தலைவர்கள் நடராஜன், மாரிமுத்து, மாநில இைண செயலாளர்கள் சேகர், செந்தில்குமார், குமரி மாவட்ட டாக்பியா மாவட்ட ெபாருளாளர் வின்சென்ட் ராஜ், மாவட்ட துணை தலைவர் சந்திரகுமார், மாவட்ட இணை செயலா ளர் ரமணி, வசந்த பிரபா, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் தக்கலை செயலாளர் பால்சுந்தரம் மற்றும் குமரி மாவட்ட டாக்பியா அனைத்து கிளை தலைவர், செயலாளர்கள், பணியாளர் கள், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்ைம கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கோட்டார் சவேரி யார் கோவில் ஊர் தலைவர், நிர்வாகிகள், குடும்பத்தி னர்கள், வங்கி அதிகாரிகள், மாவட்ட கூட்டுறவு துறை உதவி இயக்குனர், அரசு துறை நண்பர்கள், கோட்டார் மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.

    மணவிழா ஏற்பாடுகளை டாக்பியா மாவட்ட செயலா ளர் சகாய திலகராஜ், அவரது மனைவி மார்சலின், மரு மகள் ஜெனிஸ்டன் பர்னா ண்டோ, மகள் நிவேதா மற்றும் சகோதரர்கள், குடும்பத்தினர்கள் செய்தி ருந்தனர்.

    • தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.ஆறுமுகம் இல்ல திருமண விழா நடந்தது.
    • தொழிலதிபர் மனோகரன், சேர்மன் கே.டி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    திருச்சி மாவட்டம், கீரம்பூர் எஸ்.பன்னீர்-சண்முகவள்ளி ஆகியோர் மகன் சிங்கப்பூரில் வசிக்கும் டி.எம்.இ பட்டதாரி

    ப.கர்ணமுருகனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் வடக்கு யாதவர் தெருவில் வசித்து வரும் தி.மு.க ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் எம்.பி.ஆறுமுகம், தி.மு.க. ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய துணைச் செய லாளர் ஆ.மேனகா தம்பதி யினரின் மகள் பி.எஸ்.சி பட்டதாரி ஆ.மீனா (எ) ஐஸ்ஸிற்கும் பெரியோர்க ளால் திருமணம் நிச்ச யிக்கப்பட்டு இருந்தது.

    இவர்களது திருமணம் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. இத்திருமணத்திற்கு ராம நாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவ ருமான கே.டி.பிரபாகரன், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளரும், தொழிலதிபருமான வேலு மனோகரன் ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைத்தனர்.

    ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜவேணி பார்த்தசாரதி,உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,பேராவூர் வடக்கு யாதவர் தெரு முதியோர் சங்கம்,மாவீரன் அழகு முத்துக்கோன் இளை ஞர் சங்கத்தைச் சேர்ந்த வர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • உயர்கல்வி முதல் திருமண விழா வரை ரூ.2 லட்சம் வரை அன்பளிப்பை சுய உதவிக்குழுவினர் கொடுத்து வருகின்றனர்.
    • மற்ற கிராமங்களுக்கு முன்னுதார ணமாக திகழ்வதால் பிற கிராமத்தினர் இதுபற்றி ஆர் வமாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உத்தரகோசமங்கை அருகே லாந்தை ஊராட்சிக் குட்பட்ட எல்.கருங்குளம் கிராமத்தில் கிராம மக்களின் திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா உள்ளிட்ட விழாக்களுக்கும், மகளிர் குழு உறுப்பினர்க ளின் பிள்ளைகளின் உயர் கல்விக்கும் கை கொடுக்கும் மகளிர் குழுவினருக்கு பொது மக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.

    கஷ்ட, நஷ்ட காலங்களில் கை கொடுப்பது உறவுகள் மட்டுமல்ல எல்.கருங்குளம் மகளிர் குழுவினர் கிராம மக்களுக்கு உதவி வரு கின்றனர். இதுபற்றி லாந்தை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் மற் றும் மகளிர் குழுவினர் 'மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-

    பெரும்பாலும் வீட்டில் நடக்கும் விசேஷங்களை முன்னிட்டு குழு உறுப்பினர் களுக்கு ரூ.2 லட்சம் வரை அன்பளிப்பாக தருகி றோம். 26 உறுப்பினர்கள் மகளிர் குழுவில் உள்ளனர். ரூ.2 லட்சத்தை திருமணம் உள் ளிட்ட விசேஷ நிகழ்வுக ளுக்கு அன்பளிப்பாக வழங் குகிறோம். நாங்களே சீர்வ ரிசை பொருள்கள் வாங்கு வது, பந்தியில் பரிமாறுவது என முழு வீச்சில் வேலை களை கூட்டு முயற்சியுடன் செய்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற அடிப்படை யில் ஒற்றுமையாக விழாக்க ளில் பங்கேற்கிறோம். ஒரு முறை ரூ.2 லட்சம் பெற்ற வர்களுக்கு மீண்டும் வழங் காமல் சுழற்சி முறை யில் இதனை கடைப்பிடித்து உதவி வருகிறோம். மற்ற கிராமங்களுக்கு முன்னுதார ணமாக திகழ்வதால் பிற கிராமத்தினர் இதுபற்றி ஆர் வமாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சி.எஸ்.ஐ. பேராயத்தை சார்ந்த போதகர் சிபி ஆகியோர் முன்னிலையில் திருமண ஆராதனை நடைபெற்றது.
    • மணமக்களின் பெற்றோர், மணமகளின் சகோதரர் ரிஷ்வின் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.

    நாகர்கோவில், அக்.22-

    நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள வின் நிஸான் மற்றும் வின் சுசூகி நிறுவனங்களின் நிறுவனர் ஆல்வின்- ெஜபஷீலா ஆல்வின் தம்பதியரின் மகள் டாக்டர் ரித்து ஆல்வினுக்கும் சென்னை வேல்டு விஷன் இந்தியா கிளையின் தலைமை கணக்கு அதிகாரி ெஜயசிங், சென்னை அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மார்க்ரெட் ேஜாஸ்பின் தம்பதியரின் மகன் டாக்டர் மேஷாக்குக்கும் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா தேவாலயத்தில் வைத்து திருமணம் நடை பெற்றது. கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயர் எ.ஆர். செல்லையா தலைமையில் சி.எஸ்.ஐ. கஸ்பா சபை போதகர் விக்டர் ஞானராஜ், வின்சென்ட் ராபர்ட், ராஜா ஜெயசிங் மற்றும் திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ. பேராயத்தை சார்ந்த போதகர் சிபி ஆகியோர் முன்னிலையில் திருமண ஆராதனை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து கோட்டார் பறக்கை சந்திப்பில் அமைந்துள்ள எம்.டி.பி. சமுதாய நல கூட்டத்தில் வைத்து நடை பெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நாகர்கோவில் ஸ்காட் நகர் சி.எஸ்.ஐ. திருச்சபை போதகர்கள் ேஜாஸ்வா டாணியல் மற்றும் துணை போதகர் கிறிஸ்டோபர் யூஜின்தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர். டானியல் வாழ்த்தி பேசினார். சென்னை நியூ லைப் மினிஸ்ட்ரீஸ் போதகர் ஜெபகுமார் மண மக்களுக்கு ஆசி கூறி பேசினார்.

    முன்னதாக (திருமணத் திற்கு முந்தைய நாள்) மணமகள் இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் மோகன் சி.லாசரஸ் கலந்து கொண்டு மணமக்களுக்கு இறையாசி வழங்கினார்.

    தொடர்ந்து பொன் ஜெஸ்லி குழுமங்களின் தலைவர் பொன்ராபர்ட் சிங், நிஸான் மற்றும் சுசூகி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், திருவனந்தபுரம் மரைக்கார் குழுமங்களின் தலைவர் சுல்பிகர் மரைக்கார், டெரிக் குரூப் நிறுவனங்களின் தலைவர் ஸ்டாலின், தக்கலை கவின் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் கவின், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் சுசூகி டீலர்கள் தினேஷ் மற்றும் கிங்ஸ்டன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்விஜய ராகவன், கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ்கு மார், குமரி பேராய செயலாளர் வழக்கறிஞர் தினேஷ், கருங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் வழக்கறிஞர் டைட்டஸ், ஓய்வுபெற்ற நீதிபதி ரொனால்ட் ஆர்.டேனியல், சுவாமிதோப்பு அன்புவன தலைவர் பாலபிராஜதிபதி அடிகளார், கருங்கல் இயேசு நம்மோடு சபை போதகர் ெஜயந்த் ராஜ், காட்டாதுறை போதகர் காலேப் ஊழியர்கள் ராஜன், குரூஸ் மாசிலாமணி, சுரேஷ்காணி, ரெஜினிகுமார் மற்றும் மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், சபை போதகர்கள் அரசியல் பிரமுகர்கள், தொழிலதி பர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வேல்டு விஷன் இந்தியா அதிகாரிகள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் மணமக்களின் பெற்றோர், மணமகளின் சகோதரர் ரிஷ்வின் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.

    • மோகன்-விஜில் ராணி தம்பதியரின் மகள் ஜெய நந்தனாவுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்தது.
    • வசந்தம் குரூப்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள வசந்தம் தோல் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வன்-மனைவி கோகிலா ஆகியோரின் மகனும் முன்னாள் எம்.பி.யான எம்.சி. பாலனின் பேரனுமான டாக்டர் ஷரனுக்கும், குமரி மாவட்ட தேங்காய் வியாபாரிகள் நல சங்க தலைவர் மோகன்-விஜில் ராணி தம்பதியரின் மகள் ஜெய நந்தனாவுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்தது.

    அவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவில் தேரேகால்புதூரில் உள்ள கெங்கா கிராண்ட்யூரில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கவுன்சிலர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில திபர்கள், நண்பர்கள், உறவினர்கள், வசந்தம் குரூப்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை மணமக்களின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் செய்திருந்தனர். 

    • மருது எஸ்ஸார் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

    மதுரை

    மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி ஐடா ஸ்கட்டர் திருமண மண்ட பத்தில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. முக்கிய பிரமுகர் தெய்வத்திரு

    பி. நல்ல மருது - மாரீஸ்வரி தம்பதியின் மகன் சூரிய வர்மாவுக்கும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மதுரை மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்து-சித்ரா தம்பதியின் மகள் அபர்ணாவுக்கும் நாளை 13-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்துகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி, வில்லா புரம் பகுதி செயலாளர் கவுன்சிலர் போஸ் முத்தையா, அவனியாபுரம் பகுதி தி.மு.க. செயலாளர் ஈஸ்வரன், பகுதி துணை செயலாளர் பிரபாகர், 84- வது வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிர மணியம், வட்ட துணைச் செயலாளர் வக்கீல் விஜயன் ஆகியோர் செய்து வருகின்ற னர்.

    • தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது
    • நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார்.

    கடலூர்:

    நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மகன் திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-

    நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் மகன் திருமண விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக நெய்வேலி தொகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா என்ற பெயரை கேட்டாலே பயந்து பீதியடைகின்றனர். இதனால் பாரத் என்ற பெயரை பா.ஜ.க. தூக்கிப்பிடிக்கிறது. ஜீ 20 மாநாட்டை நடத்துவதில் ஆர்வம் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. பல்வேறு அணிகளாக சிதைந்து கிடக்கிறது. இதில் பல அணிகள் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. கவுன்சிலர் இல்ல திருமண விழா நடைபெற உள்ளது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தி வைக்கிறார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மேற்கு 1-ம் பகுதி 83-வது வார்டு செயலாளரும், 83-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு உறுப்பினருமான எஸ்.எம்.டி. ரவி-வேணி தம்பதி யின் மகன் மனோஜ் பாண்டியனுக்கும், தல்லாகுளம் ம.தி.மு.க. பகுதி செயலாளர் வேல். புகழ்முருகன்- பாண்டி யம்மாள் தம்பதியின் மகள் கார்த்தி காவுக்கும் பெரி யோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது திருமணம் நாளை (10-ந் தேதி) மதுரை காமராஜர் சாலை நிர்மலா மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ ஆகியோர் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். திருமண விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பல் வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதி பர்கள், உற்றார், உறவி னர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    திருமண ஏற்பாடுகளை எஸ். எம். டி. ரவி- வேணி, திவ்யதர்ஷினி -பாண்டி குமார், முருகன், தெற்கு 2-ம் பகுதி பேரவை செயலாளர் முத்துப் பாண்டி-முத்துமீனா மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • எம்.பி., எம். எல். ஏ.க்கள் பங்கேற்பு
    • வாழ்த்திய அனைவருக்கும் மணமக்கள் சார்பில் வக்கீல் பால் மணி நன்றி கூறினார்.

    மார்த்தாண்டம் :

    கீழ்குளம் கொடித்தாறா விளை பகுதியைச் சேர்ந்த வர் வக்கீல் பால்மணி. இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி மேரி விஜயராணி காப்புக்காடு புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த தம்பதியினரின் மகள் ஜெனிஷா பால்-க்கும், கருங்கல் உலகன் விளையை சேர்ந்த ஜஸ்டஸ் மற்றும் கிளார் கிறிஸ்டல் பியாட்டரிஸ் தம்பதியினரின் மகன் ஜகித் தேவப்பிரிய னுக்கும் நேற்று கீழ்குளம் பாத்திமா நகர் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.திருமணத்தை ஆயர் ரெமிஜியூஸ் நடத்தி வைத்தார்.

    இந்த திருமண விழாவில் விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மேற்கு மாவட்ட அதிமுக செயலா ளர் ஜாண் தங்கம், குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத் தம்பி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிரிஸ்டல் ரமணி பாய், களியக்காவிளை பேரூராட்சித் தலைவர் சுரேஷ், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, முன்னாள் மேல்புறம் வட் டார தலைவர் சதீஷ் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக் களை வாழ்த்தினார்கள். வாழ்த்திய அனைவருக்கும் மணமக்கள் சார்பில் வக்கீல் பால் மணி நன்றி கூறினார்.

    • பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது.
    • மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

    காரைக்குடி

    காரைக்குடியில் பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது. மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் வாழ்த்து தெரிவித்தனர்.

    காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் திருமண மண்டபத்தில் வேலங்குடி சுசிலா-துரை ராஜ் தம்பதியின் இளைய மகனும், பா.ஜனதா கட்சி இளைஞரணியின் மாநில துணைத்தலைவரும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான பாண்டித்துரை சகோதரருமான கார்த்திகேயன், பள்ளத்தூர் சபாரத்தினம்-சாந்தி தம்பதியின் மகள் தாரணி ஆகியோரது திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முருகன், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பி இருந்தனர்.

    திருமண விழாவில் மணமக்கள் கார்த்திகேயன்-தாரணியை மதுரை ஆதீனம், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன், தென் பெருங்கோட்ட பொறுப்பா ளர் நரசிங்கப்பெருமாள், மாநில விவசாய பிரிவு துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர், பா.ஜனதா மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை தலைவர்கள் எஸ்.வி.நாராயணன், சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், தொழிலதிபர்கள் பி.எல்.படிக்காசு, பொன் பாஸ்கர் மாங்குடி எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதி பர்கள், வர்த்தக பிரமு கர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவிற்கு வந்தவர்களை சுசிலா துரை ராஜ், பாண்டித்துரை-திவ்ய குமாரி தம்பதியினர் வரவேற்றனர்.

    • திருமண மாப்பிள்ளையான சிவா சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.
    • பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக திருமண பரிசாக வழங்கினோம்.

    திருச்சுழி:

    திருமணம் என்றாலே மணமக்களுக்கு அவர்களது சொந்த பந்தங்கள், நண்பர்கள், திருமணத்திற்கு வருபவர்கள் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பரிசுகள் வழங்குவது வழக்கம். உறவினர்களை பொறுத்தவரை கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை மணமக்களுக்கு சீர் வரிசைகளாக வழங்குவார்கள்.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையிலும், திருமண மாப்பிள்ளைக்கு பிடித்ததுமான சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக அவரது நண்பர்கள் வழங்கினர். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியடைய செய்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகன் சிவா. இவருக்கும், இருஞ்சிறை பகுதியை சங்கரலிங்கம் மகள் துர்கா என்பவருக்கும் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது.

    தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டைக்கிடாய்கள், நாட்டு இன ரக நாய்கள் என பல்வேறு விலங்குகளை ஏராளமானோர் ஆர்வமு டனும், பாசத்துடனும் வளர்த்து வருகின்றனர்.திருமண மாப்பிள்ளையான சிவாவும் சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.

    இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடந்தததால், சண்டை கிடாய்கள், சண்டை சேவல், நாட்டு இன நாய் உள்ளிட்டவைகளை அவரது நண்பர்கள் பரிசு பொருட்களாக வழங்கினர். அவர்கள் 2 சண்டை ஆட்டு கிடாய்கள், 5 சண்டை சேவல்கள், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் ஆகியவற்றை வழங்கினர்.

    அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் அவர்கள் பரிசாக வழங்கிய சண்டை கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக நாய்கள் உள்ளிட்டவைகளுடன் மணமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து மாப்பிள்ளையின் நண்பர்கள் கூறும் போது, "தமிழர்களின் வீர விளையாட்டு போட்டிகளான அழிந்து வரும் நிலையில் உள்ள ஆட்டு கிடாய் சண்டை, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக அவர் விரும்பி வளர்த்து வரும் சண்டை ஆட்டு கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக இன நாய் ஆகியவற்றை திருமண பரிசாக வழங்கினோம்" என்றனர்.

    ×