search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ill"

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.
    • முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள புதிய ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

    இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் உணவு உண்ட 43 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு, பழச்சாறு சாப்பிட்ட பிறகு சுமார் 43 பேர் வாந்தி எடுத்து, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.

    மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் ஆரம்ப சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    ×