search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wedding function"

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.
    • முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள புதிய ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

    இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் உணவு உண்ட 43 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு, பழச்சாறு சாப்பிட்ட பிறகு சுமார் 43 பேர் வாந்தி எடுத்து, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.

    மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் ஆரம்ப சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் இன்று திருமண விழாவில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடினர். #StalinMeetsKamal #TNPolitics
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்புவதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்த கமல், அழுக்கு மூட்டை கட்சி என்றும் அதனுடன் கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். இதனால் கமலை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. விரும்புமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி  பேட்டி அளிக்கும்போது மேலும் கமல் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்து இருந்தார்.



    அதன்பின்னர், பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது தன் கவனத்திற்கு வரவில்லை என்றும் கூறினார் அழகிரி. அத்துடன், கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை கண்டிப்பதாகவும் கூறினார்.

    திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும். மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில் திமுக கட்சி நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. பூம் பூம் காரனின் மாடு என்ன செய்து விடும் என்ற தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில்  சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கமல் ஆகியோர் பங்கேற்றனர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி ஸ்டாலின், கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமான முறையில் உரையாடினர். இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.  #StalinMeetsKamal #TNPolitics

    ×