search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "political criticism"

    அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் இன்று திருமண விழாவில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடினர். #StalinMeetsKamal #TNPolitics
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்புவதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்த கமல், அழுக்கு மூட்டை கட்சி என்றும் அதனுடன் கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். இதனால் கமலை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. விரும்புமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி  பேட்டி அளிக்கும்போது மேலும் கமல் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்து இருந்தார்.



    அதன்பின்னர், பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது தன் கவனத்திற்கு வரவில்லை என்றும் கூறினார் அழகிரி. அத்துடன், கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை கண்டிப்பதாகவும் கூறினார்.

    திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும். மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில் திமுக கட்சி நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. பூம் பூம் காரனின் மாடு என்ன செய்து விடும் என்ற தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில்  சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கமல் ஆகியோர் பங்கேற்றனர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி ஸ்டாலின், கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமான முறையில் உரையாடினர். இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.  #StalinMeetsKamal #TNPolitics

    ரஜினியின் காலா படத்தில் அனல் தெறிக்கும் வரிகள் இடம் பெற்றிருப்பது அரசியல் களத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. #Rajinikanth #Kaala
    சென்னை:

    ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படம் காலா என்பதால் அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று வெளியிடப்பட்ட காலா பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்ப தொடங்கியுள்ளன. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் காலா பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு வருகிறார்கள்.

    உரிமையை மீட்போம், தெருவிளக்கு என தொடங்கும் பாடல்களில் அரசியல் வரிகள் அதிகம் உள்ளன. தெருவிளக்கு பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.

    சமூத்துவம் பிறந்திட... விடுதலை கிடைத்திட... தோழா இணைந்து போராடு. உணவு, ஆடை, வீடு போல வீடு போல கல்வியும் உனது அடிப்படை தேவை போன்ற வரிகள் கவனம் ஈர்க்கின்றன.

    உரிமையை மீட்போம் பாடலில் இனியும் பயந்தால் ஆகாது என்பது போன்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. நிலமே எங்கள் உரிமை, யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா, இங்கே வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா, ‘அடங்கி வாழ்ந் தாக்க முடியாதம்மா, உரிமையை வாங்காம உயிர் போகுமா, எழுந்து வாடா, வாடா, எதிர்த்து நீ கேளுடா, பயந்தா ஆகாதுடா, இனமே உன் கூடடா’ என்பது போன்ற வரிகள் ரஜினியின் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளை ஊர்ஜித படுத்துவது போல உள்ளது.

    போராடுவோம் பாடலில் தமிழகத்தில் சிலை வடிவமைப்பதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த கருத்துகளும் காரசாரமாக இடம் பெற்றுள்ளன.

    ‘காணிக்கை என்ற பெயரில் கல் சிலைக்கு லஞ்சம் கோடி, கோடியா குமியுது உண்டியலில். நாட்டில் ஆனா பஞ்சம். நிறத்தாலும் மதத்தாலும் பிரிந்துவிட்டோம். மனிதாபிமானத்தை மறந்து விட்டோம். உரிமை இழந்து விட்டோம். ஏழை உயிர் என்றால் அலட்சியம். பணம் தான் நோயின் மருத்துவம். நிலம், நீர் எங்கள் உரிமை. போராடுவோம், எங்கள் வறுமை ஒழிய போராடுவோம். புது புரட்சி உருவாக போராடுவோம்’ என்பது போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.

    இதற்கிடையே அமைச்சர் ஜெயக்குமார் காலா பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது பாடல்கள் மூலம் கலகத்தை ஏற்படுத்த நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது காலா படம் வெளியாகும் முன்பே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Rajinikanth #Kaala
    ×