search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டங்கள்"

    • மதுரை பாலமேடு அருகே பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பஸ் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கோசபெருமாள், மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, பூமா, சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, முத்துகுமரன், மாரிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    • சிவகங்கையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
    • ரூ. 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி பேசியதாவது:-

    பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.அனைவருக்கும் வீடு, துாய்மை இந்தியா வீடுகளுக்கான கழிப்பறை, பொது கழிப்பறை, வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டம், அனைவருக்கும் கியாஸ் சிலிண்டர், இலவச வங்கி கணக்கு, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி, முத்ரா கடன் திட்டம் , மலிவு விலை மக்கள் மருந்தகங்கள், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, இலவச உணவு தானியம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மட்டும் 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சத்திய நாதன், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாவட்ட பார்வையாளர் சண்முகராஜா, மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ்குமார், சுகனேசுவரி, மாவட்ட செயலாளர் கந்த சாமி, சங்கரசுப்பிரமணியன், நகர தலைவர் உதயா, மண்டல தலைவர்கள் பில்லப்பன், மயில்சாமி, லோகுமுனியாண்டி, விவசாய அணி பொது செயலாளர் சரவணன், ஓ.பி.சி., அணி செயற்குழு உறுப்பினர் நாகேசுவரன், ஒன்றிய பொது செயலாளர் பரமசிவம் உள்பட நிர்வாகி கள் பங்கேற்றனர்.

    • நடப்பாண்டில் மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
    • மதுரையில் சர்வதேச ரோட்டரி தலைவர் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரையில் ரோட்டரி தலைவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் 1500-க்கும் மேற்பட்ட ரோட்டரி ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் கார்டன் மெக்கனரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோட்டரி இயக்கத்தில் உலகம் முழுவதும் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.80 லட்சம் பேர் உள்ளனர். 200 நாடுகளில் ரோட்டரி சங்கம் சேவை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியம் நல்வாழ்வு, கல்வி மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு உதவும் வகையில், ரூ.28 ஆயிரம் கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். நடப்பாண்டில் (2023-24) மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    பொதுமக்கள் மன நோயாளிகளை கனிவுடன் பார்க்கும் வகையில் மாற்றுவோம். சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் மென்டல் ஹெல்த் மையம், ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரோட்டரி மண்டல முன்னாள் ஆளுநர் முருகானந்தம், பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், முன்னாள் ஆளுநர் குமணன், ஆனந்த ஜோதி, கார்த்திக், இந்நாள் ஆளுநர் ஜெரால்டு, அடுத்த நிதி ஆண்டுக்கான ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை பசுமலை ஓட்டலில் ரோட்டரி சங்க கூட்டத்துக்கான ஏற்பாடு களை வெங்கடேஷ், முரு கையா பாண்டியன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் முதல்கட்ட நிகழ்வு நேற்று தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் அரசு பள்ளிகளின் சிறப்பு அம்சங்களான காற்றோட்டமான வகுப்ப றைகள், தூய்மையான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பிட வசதி, தமிழ் வழி பிரிவுகளுடன் ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதும் விளக்கப்படும். அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்பு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

    இது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படும். எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா, இல்லம் தேடிக் கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவை பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேரணியில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சீதாலெட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அரியலூர் மாவட்ட கோவில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது
    • திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அரியலூர் மாவட்டத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 186 திருக்கோவில்களில் பணிபுரியும் 186 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதுடன் திருக்கோவில் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ஓய்வூபெற்ற இசைக் கலைஞர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் 24 நபர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.72,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், திருக்கோவில் புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 42 திருக்கோவில்களில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளும், திருக்கோவில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இதே போன்று திருக்கோவில் பணியாளர்களுக்கு 2 சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவில்களில் பணிபுரியும் 26 ஆண் பணியாளர்கள் மற்றும் ஒரு பெண் பணியாளர் என மொத்தம் 27 பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தற்பொழுது முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இத்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.மேலும் ஏழை, எளிய இணைகளுக்கு இலவச திருமண திட்டமும் செயல்படுத்த பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருமணம் நடைபெற்ற 3 இணைகளுக்கும் திருமண நாளன்று ஒவ்வொருவருக்கும் தலா திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டு நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்சி, பூஜைப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.இதில் ஒவ்வொரு இணைகளுக்கும் தலா ரூ.50,000 மதிப்பில் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் பேசினர்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினர்.

    பின்னர் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:-

    மாவட்டத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உதவும் சங்கங்கள் அமைத்து அதன்மூலம் பொது மக்களுக்கு உதவலாம் என்ற அடிப்படையிலும் மற்றும் ஒன்றிணைந்து அந்த உதவும் சங்கங்களின் பங்களிப்பு தொகையை பதிவு செய்வதன் மூலம் அரசின் சார்பில் வழங்கப்படும் அந்த தொகைக் கான 2 மடங்கு தொகையும் வழங்குவதற்கான வழிவகை யையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி உள்ளார்.

    பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் போன்ற திட்டங்களை அறிவித்து பெண்களின் உரிமையை நிலை நாட்டுகின்ற வகையில் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோன்று தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பராமரிப்பதற்காக முதற்கட்டமாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்மூலம் 77 பள்ளிவாசல்களில் பராமரிப்புப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற கூட்டத்தொடரின் போது அதனை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுபோன்று சிறுபான்மை யினர் மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத் தப்பட்டு, அவர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    கருணாநிதி வழியில் மக்களுக்கான ஆட்சியை தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து, குறிப்பாக சிறுபான்மை யினர் மக்களின் நலன் காக்கின்ற வகையில் அதற்கான திட்டங்களை அறிவித்து அவர்களின் நலனை காத்து வருகிறார்.

    குறிப்பாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் சிறப்பான நிர்வாகம் முதல்-அமைச்சர் தலைமையில் அரசில் நடைபெற்று கொண்டி ருக்கிறது. தமிழக மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையிலும், அமை தியை நிலைநாட்டுகின்ற வகை யிலும் ஒரு சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 940 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலை வர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காளையார்கோவில் அருகே வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

     சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், பள்ளிவயல் குரூப், பள்ளித்தம்பம் கிராமத்தில் உள்ள நாடகமேடையில் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

    • மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும்.
    • மயிலாடுதுறை மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது மாவட்ட கலெக்டராக ஏ.பி.மகாபாரதி நேற்று பொறு ப்பேற்றுக்கொண்டார்.

    புதிய மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் பல ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.

    சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சரும், தலைமைச் செயலாளரும் அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

    குறிப்பாக அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மக்களுக்கு அரசின் திட்டங்கள் வேகமாக கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும்.

    தமிழக அரசுக்கு நற்பெயரும் மாவட்ட மக்களுக்கு நன்மையும் செய்யக்கூடிய வகையில் செயல்படுவேன்.

    சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி மயிலாடுதுறை மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், நீர் வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது என நடிகர் சிங்கமுத்து பேசினார்.
    • வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் உட்புறம் அண்ணா அரங்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் சிங்கமுத்து, மதுரை தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது, கருவறை முதல் கல்லறை வரை சிறப்பான திட்டங்களை அ.தி.மு.க. கொண்டு வந்து செயல்படுத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

    திரைப்பட நடிகர் சிங்கமுத்து பேசுகையில், தி.மு.க. வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தி வருகிறது. வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஈேராடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில்போட்டியிடும். அந்த சின்னம் கிடைக்கா விட்டால் வேறு சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்றார்.

    கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தேவகோட்டை தெற்கு தசரதன், வடக்கு முருகன், கண்ணங்குடி தெற்கு பெரிய சாமி, வடக்கு சரவணன், காரைக்குடி நகர் செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், நடராஜன், நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
    • அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

    சிவகாசி,

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசியில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சிவகாசி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அசன்பதுருதீன் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ வர்மன், தலைமைக்கழக பேச்சாளர்கள் செல்வம், பரமக்குடி ஜமால், மான்ராஜ் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணி, விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் சிறப்பாக செயலாற்றிக்கொண்டு வருகிறார். ஜெயலலிதா காலத்துக்கு பிறகு தமிழ கத்தில் ஏழை- எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்ப டுத்தியவர் எடப்பாடியார். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது.

    ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அறிவியல் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டது. தற்போது பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க. ஆட்சியாளர்கள்.

    ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள், எடப்பாடியார் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    அம்மா பரிசு பெட்டகம், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை இப்படி பல்வேறு அ.தி.மு.க.வின் திட்டங்களை நிறுத்தி விட்டனர். சைக்கிள் வழங்குவதை பாதியாக குறைத்து விட்டனர். லேப்டாப் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.

    முதியோர் பென்ஷன் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். அ.தி.மு.க. அரசின் எல்லா திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது.

    மகளிருக்கு ரூ. 1000 தருவதாக சொன்ன தி.மு.க. இதுவரை வழங்கவில்லை. தி.மு.க. கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் தி.மு.க.வினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் தி.மு.க.வினர் உள்ளனர். எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம். மக்கள் தயாராக இருந்து அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியமர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்
    • அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது. திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் முன்னே ற்றத்திற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 45 திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் முன்னுரிமை அளித்து செயல்படுத்துவதுடன், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெய லட்சுமிதமிழ்செல்வன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக கவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக குழு உறுப்பினர்களிடையே மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம், திருநாவுக்க ரசர்தலைமையில் நடைபெற்றது.


    • கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
    • ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    சேலம்:

    சேலம் மாநக ராட்சிக்குட்பட்ட தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடப்பு ஆண்டில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த மாமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதவாது:-

    கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதே போன்று நடப்பு ஆண்டிலும் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாகும்.

    குறிப்பாக தரமான சாலைகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், குப்பையில்லாத நகரமாக மாற்றுதல், அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்தல், தரமான மருத்துவசேவை, மாநகராட்சிப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரமான கழிவறை வசதிகள் செய்து தருதல், ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    மேலும், மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து

    தரப்பு மக்களுக்கும் தேவை யான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிடவும், மற்ற மாநகராட்சிகளை காட்டிலும் சேலம் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உருவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மண்டலக்குழுத்தலை வர்கள் கலையமுதன், உமாராணி, தனசேகர், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் நிலைக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×