search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசார கூட்டம்"

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கினார்.
    • ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மதுரை

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதற்காக நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திர அமித்ஷா கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக அண்ணாமலையின் நடைபயணத்தை ஆதரிக்கும் விதமாக இந்திய ஜனநாயகத்தின் தலைவர் டாக்டர்.ரவி பச்சமுத்து அவர்களும் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், கட்சியின் முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், மாநில மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ், மாநில மகளிரணி துணைச் செயலாளர் இளவரசி, மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் முத்துராஜா.

    மதுரை மாநகர் மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான் பெனாண்டிக், மதுரை மாநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் அமிர்த கிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி, மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் சாந்தி, மதுரை மாநகர் மாவட்ட வேந்தர் பேரவை செய லாளர் கதிரவன் மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார்.
    • மாவட்ட பிரதிநிதி சுகுமார் வரவேற்புரை யாற்றினார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க மற்றும் கிருஷ்ணகிரி நகர தி.மு.க சார்பில் தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரிதா நவாப், நகர்மன்ற துணைத் தலைவரும், மாவட்ட துணை செயலா ளருமான சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர அவைத்தலைர் தர்மன், நகர துணைண செயலாளர்கள் பொன். குணசேகரன், அரங்கண்ணல், நகர பொருளாளர் கனல் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி ஜான்டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பிரதிநிதி சுகுமார் வரவேற்புரை யாற்றினார்.

    இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமைகழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.

    இதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் கோவிந்தன் மற்றும் முன்னாள், இன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.
    • தி.மு.க. அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் பெரியமுத்தூர் ஊராட்சி துவாரகாபுரியில் நேற்று மாலை நடந்தது.

    இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவன் வரவேற்றார். நிர்வாகிகள் நாராயணன், ஜெயராமன், பழனி, கோபாலகிருஷ்ணன், நாராயணசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    அவர்கள் பேசும் போது, தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டம், மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயண திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்த அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதில் மாநில விவசாய துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கோவிந்தசாமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை பாலமேடு அருகே பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பஸ் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கோசபெருமாள், மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, பூமா, சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, முத்துகுமரன், மாரிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    • தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    கந்திலி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் வெங்களாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.கே. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது கூட்டத்தில் புகுந்து வாலிபர் ஒருவர் நல்லதம்பி எம்.எல்.ஏ. வை பார்த்து வெங்களாபுரம் பகுதியில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை ஏன் சீரமைக்கப்பட வில்லை என தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து நல்ல தம்பி எம்.எல்.ஏ. திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ெதருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது
    • தெருமுனை பிரசார கூட்டம் வட்டாரத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலை–மையில் நடைபெற்றது.

    திருச்சி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.யின் பதவியை பறித்து தகுதி நீக்கம் செய் ததை கண்டித்தும், பா.ஜ.க. அரசின் ஜனநாயக படுகொ–லையை கண்டித்தும் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார, நகர அளவில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், மணி–கண்டம் வட்டார காங்கி–ரஸ் கமிட்டி சார்பில் சோமரசம்பேட்டையில் தெருமுனை பிரசார கூட்டம் வட்டாரத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலை–மையில் நடைபெற்றது. வடக்கு வட்டாரத் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.

    இந்த பிரசார கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை–வரும், திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவ–ருமான வழக்கறிஞர் பி.கோவிந்தராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மாநில கலை பிரிவு துணைத் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் அர்ஜுன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி அருண்ரசாத், மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன், மாவட்ட செயலாளர்கள் அருண் பிரசாத், மலை ராஜா, வட்டார நிர்வாகிகள் சேட்டு, தனசேகரன், சிங்காரவேல், அங்கமுத்து உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.


    • தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரசார கூட்டம்கடலையூர் சாலையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 22வது வார்டு செயலாளர் அந்தோணி பிரகாஷ் வரவேற்று பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரசார கூட்டம் 22-வது வார்டு கடலையூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான, கருணாநிதி தலைமை தாங்கினார். 21வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் உலக ராணி, 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி, 23வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுதா குமாரி, 23வது வார்டு செயலாளர் குமாரசாமி, 24வது வார்டு செயலாளர் அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரச்சாரக் கூட்டத்தில் 22வது வார்டு செயலாளர் அந்தோணி பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார். மாநில கழக கொள்கை பரப்புச் செயலாளர் கரூர். முரளி, தலைமை கழக பேச்சாளர் ஆனந்த், ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இரா. மணி, நகர அவைத் தலைவர் முனியசாமி, நகர பொருளாளர் ராமமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவேல், விஜயன், நகர கழக வார்டு செயலாளர்கள் பூல் பாண்டியன், செந்தில்நாதன், தாமோதரன் 22வது வார்டு துணைச் செயலாளர் ராமர், வார்டு பிரதி நிதிகள் கிருபாகரன், சுமதி, வார்டு அவைத் தலைவர் மிக்கேல், வார்டு பொருளாளர் நாகராஜ், நகர இலக்கிய அணி நிர்வாகிகள் வசந்த், ராஜன், ராஜகோபால், உள்ளிட்ட ஏராளமானோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தெருமுனை பிரசார கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது.

    தனக்கன்குளம் மந்தை திடலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகி பொன்.மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

    தொகுதி பொறுப்பாளர் பழனிகுமார், மாநிலத்தலைவர் மகேஸ்வரன், மாவட்ட தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் வினோத்ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது. மேலும் இளை ஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் வகையிலும், நாட்டின் பாது காப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அக்னிபாத் திட்டம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

    கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், நாகேஸ்வரன், பசுமலை மகா, சீனிவாசன், கார்த்திக், வேல்முருகன், ஆனந்த், வித்யாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×