search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிகண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ெதருமுனை பிரசார கூட்டம்
    X

    மணிகண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ெதருமுனை பிரசார கூட்டம்

    • மணிகண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ெதருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது
    • தெருமுனை பிரசார கூட்டம் வட்டாரத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலை–மையில் நடைபெற்றது.

    திருச்சி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.யின் பதவியை பறித்து தகுதி நீக்கம் செய் ததை கண்டித்தும், பா.ஜ.க. அரசின் ஜனநாயக படுகொ–லையை கண்டித்தும் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார, நகர அளவில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், மணி–கண்டம் வட்டார காங்கி–ரஸ் கமிட்டி சார்பில் சோமரசம்பேட்டையில் தெருமுனை பிரசார கூட்டம் வட்டாரத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலை–மையில் நடைபெற்றது. வடக்கு வட்டாரத் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.

    இந்த பிரசார கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை–வரும், திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவ–ருமான வழக்கறிஞர் பி.கோவிந்தராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மாநில கலை பிரிவு துணைத் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் அர்ஜுன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி அருண்ரசாத், மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன், மாவட்ட செயலாளர்கள் அருண் பிரசாத், மலை ராஜா, வட்டார நிர்வாகிகள் சேட்டு, தனசேகரன், சிங்காரவேல், அங்கமுத்து உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.


    Next Story
    ×