search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்
    X

    காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்

    • திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தெருமுனை பிரசார கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது.

    தனக்கன்குளம் மந்தை திடலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகி பொன்.மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

    தொகுதி பொறுப்பாளர் பழனிகுமார், மாநிலத்தலைவர் மகேஸ்வரன், மாவட்ட தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் வினோத்ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது. மேலும் இளை ஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் வகையிலும், நாட்டின் பாது காப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அக்னிபாத் திட்டம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

    கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், நாகேஸ்வரன், பசுமலை மகா, சீனிவாசன், கார்த்திக், வேல்முருகன், ஆனந்த், வித்யாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×