search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "street rally"

    • காங்கிரஸ் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு மற்றும் பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை கண்டித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் தெரு முனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார். தெரு முனை பிரசார கூட்டத்தை வேலூர் மாவட்ட காங்கிரஸ்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி சிறப்புரை ஆற்றினர்.

    குடியாத்தம் நகர காங்கிரஸ் தலைவர் விஜயன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட நிர்வாகிகள் சரவணன். மகாலட்சுமி, ராகீப் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜானகிராமன் நன்றி கூறினார்.

    • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரகூட்டம் நடைபெற்றது.
    • குமாரசாமி மற்றும் மாவட்ட ,ஒன்றிய ,நகர நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்லடம்,கரடிவாவி, லட்சுமி மில்,அருள்புரம், ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரகூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் தலைமை கழக பேச்சாளர் சுரேஷ் பேசினார். பல்லடம் நகர செயலாளர் கதிரவன்,ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார்,துரை பாண்டியன்,சிறுபான்மை பிரிவு ரபி அகமது மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் தண்டபாணி,குமாரசாமி மற்றும் மாவட்ட ,ஒன்றிய ,நகர நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தெருமுனை பிரசார கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது.

    தனக்கன்குளம் மந்தை திடலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகி பொன்.மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

    தொகுதி பொறுப்பாளர் பழனிகுமார், மாநிலத்தலைவர் மகேஸ்வரன், மாவட்ட தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் வினோத்ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது. மேலும் இளை ஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் வகையிலும், நாட்டின் பாது காப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அக்னிபாத் திட்டம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

    கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், நாகேஸ்வரன், பசுமலை மகா, சீனிவாசன், கார்த்திக், வேல்முருகன், ஆனந்த், வித்யாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×