

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க மற்றும் கிருஷ்ணகிரி நகர தி.மு.க சார்பில் தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரிதா நவாப், நகர்மன்ற துணைத் தலைவரும், மாவட்ட துணை செயலா ளருமான சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர அவைத்தலைர் தர்மன், நகர துணைண செயலாளர்கள் பொன். குணசேகரன், அரங்கண்ணல், நகர பொருளாளர் கனல் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி ஜான்டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பிரதிநிதி சுகுமார் வரவேற்புரை யாற்றினார்.
இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமைகழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
இதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் கோவிந்தன் மற்றும் முன்னாள், இன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.