search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர்"

    • பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர்.
    • கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம், நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேருந்து நிலையம், மற்றும் பரமத்தியில் நாமக்கல் மோட்டார் வாகன அலுவலர் முருகன் மற்றும் பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர். கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம்,நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

    மேலும் இரவு நேரத்தில் பரமத்தி நகருக்குள் பேருந்துகள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது பரமத்தி தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விட்டு செல்வதால் பொதுமக்களும், பெண்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வேலூர் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்த நாமக்கல் போக்குவரத்து அலுவலர் முருகன், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பரமத்தி நகருக்குள் சென்று நாமக்கல் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

    மேலும் அந்தந்த பேருந்துகளுக்கென வாங்கிய உரிமம் அடிப்படையில் அந்தந்த வழித்தடங்களில் செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர். பரமத்தி நகருக்குள் செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • கதவணை அமைக்கடும் பணிகள் 40 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது.இந்தப் பணிகளை தமிழக அரசின் நீர்வ ளத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார்.
    • பணிகளையும் எவ்வாறு தர கட்டுப்பாடு களுடன் செய்யப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே

    உள்ள அனிச்சம்பாளை யத்தில் இருந்து கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.389.00 கோடி மதிப்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கதவனை 0.8 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வலது புறம் உள்ள வாங்கல் வாய்க்கால் மூலம் 1458 ஏக்கர் பாசன நிலங்களும், இடது புறம் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம் மோகனூர் வாய்க்கால் மூலம் 2583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ளது. இந்த கதவணை அமைக்கடும் பணிகள் 40 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது.இந்தப் பணிகளை தமிழக அரசின் நீர்வ ளத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தரம், பணிகளின் முன்னேற்றம், பணிகளை முடிக்க வேண்டிய காலம்.

    ஒவ்வொரு பணிகளையும் எவ்வாறு தர கட்டுப்பாடு களுடன் செய்யப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர்,நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், சிறப்பு திட்ட செயற்பொறியாளர் சாரா, உதவி செயற்பொறி யாளர்கள், உதவி பொறியா ளர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு
    • பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு

    கன்னியாகுமரி:

    தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தென் தாமரை குளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், ஓட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டு அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
    • குளச்சல் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் அசின். இவர் தனது நண்பருடன் காரில் கருங்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் பாலூர் பகுதியில் வரும்போது திடீரெனை முன்பக்கம் இருந்து புகை வந்து உள்ளது. உடனடியாக அவரும், அவரது நண்பரும் காரை நிறுத்திவிட்டு இறங்கி விட்டனர். சிறிது நேரத்தில் காரில் தீப் பிடித்தது. அப்பகுதியில் கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    மேலும் குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனை தொடர்ந்து நாமக்கல் உட்கோட்டத்திற்கு‌ உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் பாண்டமங்கலம் முதல் வெங்கரை வரை செல்லும் சாலையில் 1.2 கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாடு செய்யப்பட்ட பணியையும் ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து நாமக்கல் உட்கோட்டத்திற்கு‌ உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நாமக்கல் கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் மற்றும் உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், சாலை ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ள னர்.

    குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலை மையில், திருவிதாங்கோடு சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் போராட்டத்திற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியனர் ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அமைப்பின் மாநில நிர்வாகி செரீப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை, சேலம் மாவட்ட கலெக்டர் மரக்கன்று நட்டு நேற்று தொடங்கி வைத்தார்.
    • பல லட்சம் விலைமதிப்புள்ள 2 ஏக்கர் தரிசு நிலப்பகுதியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் அயோத்தி யாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மரக்கன்று நட்டு நேற்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து, காரிப்பட்டியில் பொது வினியோக கூட்டுறவு அங்காடியை ஆய்வு செய்த அவர், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டடத்தை பார்வையிட்டார்.

    இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி அரசினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியையும், சர்க்கார் வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தையும் திடீர்ஆய்வு செய்தார்.

    வாழப்பாடி பேரூராட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த மீட்கப்பட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட, பல லட்சம் விலைமதிப்புள்ள 2 ஏக்கர் தரிசு நிலப்பகுதியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். இந்த நிலம் தொடர்பான ஆவணங்களை வாழப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சி யர் விஷ்ணுவர்த்தினி, வாழப்பாடி தாசில்தார் (பொ) ரவிக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ், காரிப்பட்டி வருவாய் ஆய்வாளர் சந்தரகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார்.
    • இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

    சேலம்:

    திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கிரில் தேவராஜ் (வயது 48), இவர் நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார். அந்த பஸ் இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போரா டினார். இதனை பார்த்த பஸ் கண்டக்டர் 108 ஆம்பலன்சுக்கு தகவல் தெரி வித்தார். 108 ஆம்புலன்ஸ் குழு வினர் விரைந்து வந்து பரிசோதனை செய்த போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது . பின்னர் அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டு ள்ளது.

    இது குறித்து உறவினர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. அவர்கள் கத றிய படி சேலம் விரைந்து ள்ள னர். இந்த சம்ப வம் இன்று காலை பஸ் நிலை யத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.
    • சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார்.

    சேலம்:

    சேலம் டவுன் தேவேந்திரபுரம் பகுதியில் வசித்து வருபவர் போகாராம். இவருடைய மகன் பரத்குமார் (வயது 17). இவர்களுடைய சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.

    போகாராம் சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார். மகனை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெற்றோர் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பரத்குமாரை ேதடி வருகின்றனர்.

    • இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (26). இவர் சென்னிமலையை அடுத்துள்ள ஈங்கூர் அருகே தங்கி அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குமாரபாளையம் விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மோதலில் ஈடுப்பட்டனர்.
    • அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    குமாரபாளையம்:

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 -2023-ன்படி குமார பாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1.92 கோடி மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அந்த இடத்தில் தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் வந்தி ருந்தனர்.

    அப்போது அங்கு வந்த விஜய்கண்ணன், இது நகராட்சி சார்பில் நடத்தப்படும் பூமி பூஜை, இதில் அரசியல் கட்சியினர் பங்கேற்க அனுமதி இல்லை, கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்கலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

    இதனால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இது பற்றி நகர செயலாளர் செல்வம் கூறியதாவது:-

    இது தமிழக அரசு ஒதுக்கிய நிதி, அதுவுமின்றி பொது நிகழ்ச்சி. நாங்கள் பங்கேற்போம்.

    அமைச்சர் நேரு 2 நாட்க ளுக்கு முன்பு வந்த போது, காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பாக பணி யாற்றியதற்காக, சால்வை அணிவித்து பாராட்டினார்.

    மேலும் நகராட்சி சார்பில் நடக்கும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் பங்கேற்க வேண்டும் எனவும் கூறி சென்றார். எனவே அரசு விழாக்களில் நாங்கள் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்து இன்று குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்ல காலதாமத மானது.

    இதனால் வழக்கமாக அந்த வழியில் இயங்கி வரும் 8-ம் எண் அரசு பேருந்தில் மாணவ-மாணவிகள் ஏற முயன்றனர். அப்போது பேருந்தில் ஏற்றாமல் கண்டக்டர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு குமாரபாளையம் ரோட்டில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப் படுத்தினர். இதை அடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டது. இதுகுறித்து மாணவி மவுனிகா ஸ்ரீ மற்றும் வசந்தி கூறியதாவது:-

    வழக்கமான பள்ளிக்கு செல்லும் நேரத்தில் விடப்படும் சிறப்பு பேருந்து சில நேரங்களில் காலதாமதமாக வருகிறது. அவ்வாறு வரும்போது இந்த பகுதி வழியாக செல்லும் 8-ம் எண் மற்றும், 5-ம் எண் கொண்ட பேருந்துகளில் மாணவ, மாணவிகளாகிய நாங்கள் ஏறினால் நடத்துனர்கள் இடம் இல்லை எனக் கூறி இறக்கி விடுகிறார்கள்.

    பள்ளிக்கு நேரமாகிவிட்டது என கூறினால் தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பு மூஞ்சிக்கு வந்து விடும் என கூறுகிறார்கள்.

    நாங்கள் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஆனால் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். காலையில் சென்றால் மாலை வரை வீடு திரும்ப நேர ஆகிறது. பேருந்துகளை நம்பி செல்ல வேண்டி இருப்பதால் எங்களுக்கு சரியான நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மாண-மாணவிகளின் இந்த திடீர் சாலை மறியலால் கீழேரிப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×