search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "misssing"

    • தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு தாலுகா பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவிகள் 2 பேர் அரையாண்டு பொதுத் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றனர்.

    அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் செய்யாறு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.
    • சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார்.

    சேலம்:

    சேலம் டவுன் தேவேந்திரபுரம் பகுதியில் வசித்து வருபவர் போகாராம். இவருடைய மகன் பரத்குமார் (வயது 17). இவர்களுடைய சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.

    போகாராம் சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார். மகனை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெற்றோர் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பரத்குமாரை ேதடி வருகின்றனர்.

    ×